செய்திகள் :

பட்டாசு கிடங்கில் வெடி விபத்து: 2 பேர் பலி!

post image

தஞ்சாவூர்: திருவோணம் அருகே பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலியாகினர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் வட்டம் நெய்வேலி தென்பாதியில் அனுமதி இன்றி நாட்டு வெடி தயாரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசு கிடங்கில் இன்று(மே 18) காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து, நெய்வேலி பொதுமக்கள் திரண்டு வந்து பார்த்தபோது, பட்டாசு வெடித்து 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது.

வட்டாத்திகோட்டை போலீஸார் மற்றும் ஒரத்தநாடு டிஎஸ்பி கார்த்திகேயன், திருவோணம் வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கரம்பக்குடி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து, மாவட்ட தீயணைப்புத் துறை அதிகாரி சத்தியமூர்த்தி தலைமையில் தீயணைப்பு மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வெடி விபத்தில் பலியான நெய்வேலி தென்பாதி பகுதியைச் சேர்ந்த சுந்தர்ராசு (60), அதே பகுதியைச் சேர்ந்த ரியாஸ் (18) ஆகியோரின் உடலை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், பட்டாசு கிடங்கில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இரவில் 31 மாவட்டங்களுக்கு மழை! வானிலை மையம் வெளியிட்ட செய்தி!

தமிழகத்தில் இரவு 10 மணி வரை 31 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக இருப்போம்: விஜய்

உலகெங்கிலும் உள்ள தொப்புள்கொடி உறவுகளுக்கு நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக இருப்போம் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இலங்கை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவு நாளையொட்டி விஜ... மேலும் பார்க்க

கார் பந்தயம்: நடிகர் அஜித்குமார் கார் டயர் வெடித்தது

ஜிடி 4 ஐரோப்பிய கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் ஓட்டிச்சென்ற காரின் டயர் வெடித்ததால் பரபரப்பு நிலவியது. நெதர்லாந்தில் ஜிடி 4 ஐரோப்பிய கார் பந்தயம் மே 17-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ந... மேலும் பார்க்க

அடுத்த 3 மணிநேரத்துக்கு 30 மாவட்டங்களில் மழை!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 30 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் பார்க்க

கொடைக்கானலில் மே 24ல் மலர்க் கண்காட்சி தொடக்கம்

கொடைக்கானலில் வரும் மே 24ஆம் தேதி 62வது மலர்க் கண்காட்சி தொடங்குகிறது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சீசன் களை கட்டியதைத் தொடா்ந்து தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிக... மேலும் பார்க்க

5.66 சதவீதம் உயர்ந்த வேளாண் வளர்ச்சி: தமிழ்நாடு அரசு பெருமிதம்

அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் சராசரியாக 1.36 சதவீதமாக இருந்த வேளாண் வளர்ச்சி, திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பின் 5.66 சதவீதமாக உயர்ந்து சாதனை படைத்துள்ளது என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இத... மேலும் பார்க்க