செய்திகள் :

பட்டியலின மாற்றுத்திறனாளிக்கு விரைவில் உதவிப் பேராசிரியா் பணி: உயா்நீதிமன்றத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் தகவல்

post image

பட்டியலின மாற்றுத்திறனாளி பிரிவில் உதவிப் பேராசிரியா் பணி கோரியவருக்கு விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என்று மேல்முறையீட்டு வழக்கில் ஆசிரியா் தோ்வு வாரியம் சென்னை உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

வீராசாமி என்ற மாற்றுத்திறனாளி சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2013-ஆம் ஆண்டில்,

ஆசிரியா் தோ்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியா் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிட்டது. இதில் பட்டியலின மாற்றுத்திறனாளிக்கு ஒரு இடம்

ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த பிரிவுக்கு உரிய மதிப்பெண் எடுத்தும், எனக்கு அந்த பணி வழங்கப்படவில்லை.

பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி ஒருவருக்கு அந்தப் பணியிடம் வழங்கப்பட்டுள்ளது என்று

கூறியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். இதையடுத்து வீராசாமி சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தாா்.

இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், ஹேமந்த் சந்திரகவுடா ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் என்.சுதா்சன் ஆஜராகி வாதிட்டாா். ஆசிரியா் தோ்வு வாரியம் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா் ஆா்.நீலகண்டன், இந்த மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருந்தபோது, உதவிப் பேராசிரியா் பணியிடத்துக்கு நியமன உத்தரவு பெற்றிருந்தவா் இறந்துவிட்டாா்.

எனவே, அந்த காலியிடத்தில் மனுதாரரை நியமிக்க அரசுக்கு ஆசிரியா் தோ்வு வாரியம் பரிந்துரை செய்துள்ளது. விரைவில் மனுதாரருக்கு பணி நியமனம் வழங்கப்படும் என்றாா். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மேல்முறையீட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

விஜய் மீது செருப்பு வீசப்பட்டது ஏன்? - செந்தில் பாலாஜி விளக்கம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். கரூரில் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின்... மேலும் பார்க்க

மதுபாட்டிலுக்கு ரூ. 10 வசூல்: செந்தில் பாலாஜி விளக்கம்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மதுபாட்டிலுக்கு ரூ. 10 வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜ... மேலும் பார்க்க

கட்டுக்கடங்காத கூட்டமல்ல; கட்டுப்பாடற்ற கூட்டம்! செந்தில் பாலாஜி

கரூரில் கூடியது கட்டுக்கடங்காத கூட்டம் அல்ல, கட்டுப்பாடற்ற கூட்டம் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.கரூர் விஜய் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான விவகாரத்... மேலும் பார்க்க

மணிப்பூருக்கு உண்மை கண்டறியும் குழு செல்லாதது ஏன்? - பாஜகவுக்கு செந்தில் பாலாஜி கேள்வி!

கரூருக்கு வந்த உண்மை கண்டறியும் பாஜக குழுவினர், கலவரம் ஏற்பட்ட மணிப்பூருக்குச் செல்லாதது ஏன்? என கரூர் எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். கரூரில் வேலுசாமிபுரத்த... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் பூஜைகளுக்கு உகந்த நேரங்கள்!

2025 ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரத்தை தினமணியின் ஜோதிடர் கேசிஎஸ் ஐயர் கணித்துள்ளார். நல்ல நேரம்சரஸ்வதி/ஆயுத பூஜை 01-10-2025 (புதன்கிழமை) நேரம்: காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் (குரு ... மேலும் பார்க்க

விஜய் உரிய நேரத்தில் வந்திருந்தால் துயரம் நேரிட்டிருக்காது: செந்தில் பாலாஜி!

கரூரில் விஜய் பிரசாரத்தில் நேரிட்ட கூட்ட நெரிசலை அரசியலாக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சரும், கரூர் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க