செய்திகள் :

பட்டுக்கோட்டை: அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; ஆசிரியர், தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது!

post image

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள எட்டுப்புளிக்காடு கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், கரம்பயம், கத்திரிக்கொல்லை பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் (53) ஐந்தாம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றி வந்தார். பள்ளியின் தலைமை ஆசிரியராக கரியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த விஜயா(55) என்பவர் பணியாற்றினார்.

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் பாஸ்கர்

இந்நிலையில், பாஸ்கர் கடந்த சில நாள்களுக்கு முன்பு, ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரை, வகுப்பறையில், எழுந்து நின்று படிக்க சொல்லியுள்ளார். அந்த மாணவியும் எழுந்து நின்று படித்துள்ளார். அப்போது ஆசிரியர் பாஸ்கர், மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதையடுத்து, அந்த மாணவி வீட்டுக்குச் சென்றதும் தனது பெற்றோரிடம் ஆசிரியர் பாஸ்கர் நடந்து கொண்டது குறித்து அழுது கொண்டே கூறியுள்ளார்.

அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் தலைமை ஆசிரியர் விஜயாவிடம் இது தொடர்பாக புகார் அளித்துள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர். ஆனால் விஜயா பாலியல் புகாரை துளியும் கண்டுகொள்ளவில்லை என சொல்லப்படுகிறது. பாஸ்கர் நடவடிக்கை தெரிந்தும் கண்டிக்கவும் இல்லை என்கிறார்கள். இந்நிலையில் பாஸ்கர் தொடர்ந்து பல மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக பள்ளி மாணவிகள் புலம்பியிருக்கின்றனர்.

தலைமை ஆசிரியர் விஜயா

இதையடுத்து, ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். பாஸ்கரை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இது தொடர்பாக பட்டுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாஸ்கர் மீது புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, போலீஸார் ஆசிரியர் பாஸ்கரிடம் விசாரணை நடத்தினர். இதில் பாஸ்கர் வகுப்பில் ஆறு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. தலைமை ஆசிரியர் விஜயாவிடம், பல மாணவிகள் பாஸ்கர் சார், பேட் டச் செய்கிறார் என கூறியும் கண்டு கொள்ளாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, ஆசிரியர் பாஸ்கர் மற்றும் தலைமை ஆசிரியர் விஜயா ஆகிய இருவர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை: 7 வயது குழந்தை கொலை; அப்பா தற்கொலை; தாய் உயிர் ஊசல் - நடந்தது என்ன?

சென்னை அண்ணா நகர் மேற்கு 18-வது மெயின் சாலையில் உள்ள அப்பார்ட்மென்டில் வசித்து வந்தவர் நவீன்குமார் (38). இவரின் மனைவி நிவேதிதா. இந்த தம்பதியினரின் மகன் லவின் (7). இவன் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான்... மேலும் பார்க்க

ஊட்டி: 1 ரூபாய் அம்மா உணவக இட்லி, ரூ.10-க்கு விற்பனை செய்யும் தனியார் ஹோட்டல் - அதிர்ச்சி பின்னணி

நகர்ப்புற பகுதிகளில் வாழும் ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்கும் தமிழ்நாடு அரசின் மலிவு விலை உணவக திட்டமான அம்மா உணவகங்கள் கடந்த 2013- ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகின்றன. 1 ரூபாய்க்கு இட்லி, 5 ர... மேலும் பார்க்க

வெறிநாய் கடித்து 9 ஆடுகள் இறப்பு; இறந்த ஆடுகளுடன் போராட்டத்தில் குதித்த விவசாயி- புதுக்கோட்டை சோகம்

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுகாவில் அமைந்துள்ளது அம்மாபட்டினம். இந்த ஊரைச் சேர்ந்த முகமது ரியாஸ் என்பவர் 50- க்கும் மேற்பட்ட ஆட்டுக்குட்டிகளை வளர்த்து வந்தார். இந்த நிலையில், அப்பகுதியில் சுற... மேலும் பார்க்க

ஊட்டி: காற்றில் பறக்கும் நீதிமன்ற உத்தரவு; தாராளமாக நுழையும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் விதமாக பிளாஸ்டிக் பொருள்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளும் தடைகளும் அமலில் உள்ளன.பிளாஸ்டிக் கைப்பைகளுக்கு கடந்த 25 ஆண்டுகளாக ... மேலும் பார்க்க

டெல்லி: அந்தரங்க வீடியோவை அழிக்க மறுத்த லிவ் இன் பார்ட்னர்; மாஜி காதலன் துணையோடு எரித்து கொன்ற பெண்

டெல்லியில் உள்ள காந்தி விகார் என்ற இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் நான்காவது மாடியில் ரமேஷ் என்பவர் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார். போலீஸார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து ... மேலும் பார்க்க

இங்கிலாந்து: `பாலியல் வன்கொடுமை, இன ரீதியான தாக்குதல்’ - இந்திய வம்சாவளி பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

இங்கிலாந்தின் வால்சல் பகுதியில் வசித்த இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பெண் ஒருவர் இன ரீதியாக தாக்கப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். உலகின் பல்வேறு நாடுகளில் இந்தியர்கள... மேலும் பார்க்க