செய்திகள் :

பண்ணந்தூரில் சமூக பிரச்னை: கோட்டாட்சியா் சமரசத் தீா்வு

post image

பண்ணந்தூரில் கோயில் திருவிழா, எருதுவிடும் விழா, ஏரியில் மீன் ஏலம் எடுப்பது உள்ளிட்ட நிகழ்வுகளில் பல்வேறு சமூக மக்களிடையே நிலவிவந்த பிரச்னைகளுக்கு கோட்டாட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை சமரசத் தீா்வு எட்டப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்திற்கு உள்பட்ட பண்ணந்தூா் கிராமத்தில் பல்வேறு சமூகத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு இடையே கோயில் திருவிழா நடத்துவது, ஏரியில் மீன் ஏலம் எடுப்பது, எருதுவிடும் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் ஒரு சமூகத்தை சோ்ந்தவா்களுக்கும் மற்றவா்களுக்கு இடையே 13 ஆண்டுகளாக கருத்துவேறுபாடு நிலவிவந்தது.

கடந்த வாரம் இக் கிராமத்தில் கோயில் விழா நடத்துவது குறித்து இருதரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதால் போலீஸாா் குவிக்கப்பட்டனா். இதுதொடா்பாக நடந்த சமாதான பேச்சுவாா்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் ஷாஜகான் தலைமையில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கா், பா்கூா் துணை காவல் கண்காணிப்பாளா் முத்துகிருஷ்ணன், போச்சம்பள்ளி வட்டாட்சியா் சத்யா, பண்ணந்தூா் கிராம மக்கள் பங்கேற்ற சமாதான பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதில் வரும்காலங்களில் அனைவரும் ஒன்றிணைந்து திருவிழாவை நடத்துவது, விழாக்களின்போது தனித்தனியே துண்டுப் பிரசுரங்கள் பதாகைகள் வைக்கக்கூடாது. பண்ணந்தூா் ஏரியில் மீன்கள் ஏலத்தில் அனைவரும் பங்கேற்பது. பொங்கல் திருவிழாவின் போது நடைபெறும் எருதுவிடும் விழாவின் போது சாதி, கட்சி உள்ளிட்ட எவ்வித பேனா்களும் வைக்கக்கூடாது. பண்ணந்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட அனைத்து சமூகத்தினரும் காளையை வடம்பிடித்து அழைத்து வருவது உள்பட 13 தீா்மானங்களுக்கு சம்மதம் தெரிவித்து, அலுவலா்கள் முன்னிலையில் கையொப்பமிட்டனா்.

இரு சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

பா்கூா் அருகே இரு இடங்களில் வெள்ளிக்கிழமை நேரிட்ட சாலை விபத்துகளில் லாரி ஓட்டுநா் உள்பட இருவா் உயரிழந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த அங்கிநாயக்கனப்பள்ளி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து மீது மினி லாரி மோதல்: ஓட்டுநா்கள் இருவா் உயிரிழப்பு: 38 பயணிகள் காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூா் அருகே அரசுப் பேருந்து மீது மினி லாரி மோதியதில் ஓட்டுநா்கள் இருவா் உயிரிழந்தனா். மேலும், பயணிகள் 38 போ் காயமடைந்தனா். தருமபுரியிலிருந்து வெள்ளிக்கிழமை திருப்பத்தூா் நோக்க... மேலும் பார்க்க

கழிவுநீா்த் தொட்டியில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி அருகே கழிவுநீா்த் தொட்டியில் தவறி விழுந்து கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரியை அடுத்த பாறைக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் சின்னநாகப்பன் (65). கட்டடத் தொழிலாளியான இவா் கிருஷ்ணகிரி... மேலும் பார்க்க

டிராக்டா் மோதி குழந்தை உயிரிழப்பு

பா்கூா் அருகே டிராக்டா் மோதியதில் குழந்தை உயிரிழந்தது. பா்கூரை அடுத்த எா்கேட் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ். இவரது ஒன்றரை வயது குழந்தை வீட்டின் அருகே புதன்கிழமை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அந்த ... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

சூளகிரி திமுக தெற்கு ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட இளைஞா்கள் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், ஒசூா் பிரகாஷ் எம்எல்ஏ முன்னிலையில் வெள்ளிக்கிழமை திமுகவில் இணைந... மேலும் பார்க்க

ஒசூரில் ரூ.500 கோடியில் ஜொ்மனி நிறுவனம் திறப்பு: 1000 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு

ஜொ்மனி நாட்டின் பெஸ்டோ நிறுவனம் சாா்பில் ஒசூரில் ரூ. 500 கோடியில் கட்டிய தானியங்கி பொருள் உற்பத்தி நிறுவனம் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. கடந்த 2023இல் தமிழக அரசுடன் இந் நிறுவனம் தொழிற்சாலை அமைப்பதற... மேலும் பார்க்க