செய்திகள் :

``பண்புடன் நடந்துக்கொள்ள வேண்டும்'' - கைக்குலுக்க மறுத்த இந்திய வீரர்கள்; PCB தலைவர் மோசின் நக்வி

post image

ஆசியக் கோப்பை இந்தியா–பாகிஸ்தான் போட்டியில் வெற்றிக்குப் பிறகு, இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் சென்ற சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது.

“விளையாட்டை விளையாட்டாகப் பார்க்க வேண்டும்” என ஒரு தரப்பும், “இந்திய அணி செய்ததுதான் சரி” என மற்றொரு தரப்பும் கூறி வருகிறது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்திய அணி
இந்திய அணி

நேற்று இந்தியா–பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

போட்டி முடிந்ததும், பேட்டிங் முடித்த சூர்யகுமார் யாதவும், ஷிவம் துபேயும் கிரீஸிலிருந்து பெவிலியன் நோக்கி திரும்பினர்.

அப்போது பாகிஸ்தான் வீரர்கள் அவர்களுக்கு கை கொடுக்க முயன்றனர். ஆனால், அதற்குள் இருவரும் டிரசிங் ரூமுக்குச் சென்று விட்டனர்.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் வீரர்களும், பயிற்சியாளரான மைக் ஹெசனும் இந்திய அணியின் டிரசிங் ரூமுக்குச் சென்றனர்.

அறையை விட்டு வெளியே வராத இந்திய வீரர்கள், பாகிஸ்தான் அணியினருடன் கைகுலுக்க மறுத்தனர்.

இதனால் பாகிஸ்தான் அணியினர் மிகுந்த அதிருப்தி அடைந்தனர். போட்டி முடிந்ததும் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்தது பேசுபொருளாக மாறியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோசின் நக்வி

இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி,
"நேற்றைய போட்டியில் அறம் காணாமல் போனது மிகவும் ஏமாற்றத்திற்குரியது.

விளையாட்டில் அரசியலைக் கொண்டு வருவது போட்டியின் உணர்வுக்கு நேர் எதிரானது.

இனிவரும் காலங்களில் வெற்றி பெறும் அணிகள் பண்புடன் நடந்துகொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

'இப்படி நடந்துப்பாங்கனு எதிர்ப்பார்க்கல'- கைக்குலுக்காத இந்திய வீரர்கள் குறித்து பாக் பயிற்சியாளர்

ஆசியக்கோப்பை இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் வெற்றிக்குப் பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காமல் சென்ற சம்பவம் பேசுபொருளாகியிருக்கிறது. விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும் என ஒ... மேலும் பார்க்க

Ind vs Pak: இறுக்கிப் பிடித்த இந்திய சுழல்; அதிரடி வெற்றி - கைகொடுக்காமல் சென்ற வீரர்கள்!

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆசிய கோப்பை 2025 லீக் போட்டி பெரும் பரபரப்புக்கு நடுவே நடந்துவருகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் நடந்த போட்டியில், டாஸ் போடப்பட்டபோது கேப்டன்கள் இருவரும் கைகுலுக்... மேலும் பார்க்க

Asia Cup 2025: பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்க மறுத்த சூர்யகுமார் யாதவ் - நடந்தது என்ன?

துபாய் சர்வதேச மைதானத்தில் ஆசியக் கோப்பை 2025-க்கான இந்தியா - பாகிஸ்தான் லீக் போட்டி இன்று நடைபெறுகிறது. போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே ரசிகர்கள் மைதானத்தை நிரப்பியுள்ளனர். இரண்டு கேப்டன்களுக்கும் உற... மேலும் பார்க்க

The Ashes: ``நான் நிர்வாணமாக வலம் வருகிறேன்'' - வைரலாகும் முன்னாள் கிரிக்கெட் வீரரின் சவால்!

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையே நடக்கும் புகழ்பெற்ற தொடர் ஆஷஸ் டெஸ்ட் (The Ashes). நமக்கு ஐபிஎல் போல ஆஸ்திரேலியாவுக்கு ஆஷஸ் தொடர் மிகவும் பிரபலம். இந்தத் தொடர் நவம்பர் மாதம் நடக்கவிருக்க... மேலும் பார்க்க

Ashes: "ஆஷஸ் சீரிஸ்ல ரூட் இத பண்லனா மெல்போர்ன் கிரவுண்டுல இத செய்யுறேன்..!" - சவால் விட்ட ஹைடன்

கிரிக்கெட் பரிணாம வளர்ச்சி டெஸ்ட் போட்டிகளில் ஆரம்பித்து 60 ஓவர் ஒருநாள் போட்டி, 50 ஓவர் ஒருநாள் போட்டி, 20 ஓவர் போட்டி, 10 ஓவர் போட்டி, 100 பந்துகள் போட்டி என எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது.ஆனாலும், ... மேலும் பார்க்க

BCCI: ``பிசிசிஐ தலைவர் பதவிக்கு தேர்தல் இருக்காது; ஆனால்'' - IPL தலைவர் கொடுத்த அப்டேட் என்ன?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவராக 2022 அக்டோபர் முதல் செயல்பட்டு வந்த ரோஜர் பின்னி, கடந்த ஜூலைவில் 70 வயதை நிறைவு செய்ததையடுத்து, பிசிசிஐ விதிப்படி அவரின் பதவிக்காலம் முடிவுக்... மேலும் பார்க்க