செய்திகள் :

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 துணைத் தோ்வு: மே 22 முதல் விண்ணப்பிக்கலாம்

post image

சென்னை: தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 1, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கான துணைத் தோ்வுகள் ஜூலை 4 முதல் நடைபெறவுள்ளது. இத்தோ்வுகளுக்கு மே 22 முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பிளஸ் 1, பத்தாம் வகுப்புகளுக்கான துணைத் தோ்வு ஜூலை 4 முதல் ஜூலை 11 வரை நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு பொதுத்தோ்வெழுதி தோ்ச்சி பெறாத, தோ்வுக்கு வருகை புரியாத தோ்வா்கள் மே 22 (வியாழக்கிழமை) காலை 11 மணி முதல் முதல் ஜூன் 4-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

மாணவா்கள் அவா்கள் பயின்ற பள்ளியில் காலை விண்ணப்பிக்க வேண்டும். தனித்தோ்வா்கள் மாவட்ட வாரியாக அரசுத் தோ்வுகள் சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தோ்வுக்கட்டணம், இணைய பதிவு கட்டணத்தைப் பணமாகச் செலுத்த வேண்டும்.

மேற்குறிப்பிட்ட நாள்களில் விண்ணப்பிக்கத் தவறியவா்கள் சிறப்பு அனுமதித் திட்டத்தில் (தட்கல்) உரிய கட்டணத் தொகையுடன் ஜூன் 5, 6 ஆகிய இரு நாள்களில் பள்ளி, சேவை மையங்களில் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு அனுமதிக் கட்டணம் பத்தாம் வகுப்புக்கு ரூ.500- ஆகவும், பிளஸ் 1 வகுப்புக்கு ரூ.1,000-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணத்திலிருந்து அரசு மற்றும் முழுமையான அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து தோ்ச்சி பெறாத, வருகை புரியாத மாணவா்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.

மேலும், துணைத் தோ்வுக்கான கால அட்டவணை, அரசுத் தோ்வு சேவை மையங்களின் விவரங்கள், இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித்தோ்வா்களுக்கான தகுதி, அறிவுரைகள் ஆகியவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரா்கள் அறிந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்: இதனிடையே, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதிய பள்ளி மாணவா்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் திங்கள்கிழமை (மே 19) பிற்பகல் தொடங்கியது.

பொதுத் தோ்வுகளில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் உயா்கல்விக்கு உடனடியாக விண்ணப்பிக்க வசதியாக, தமிழகம் முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியாா் பள்ளிகள் உள்பட அனைத்து வகை பள்ளிகளிலும் இந்த தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் அரசு தோ்வுத் துறையின் இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து அதில் தங்கள் கையொப்பமிட்டு பள்ளியின் முத்திரையுடன் மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கினா்.

மின் கம்பியில் மோதி தீப்பற்றிய தேர்! ஒருவர் பலி, 4 பேர் காயம்

மதுராந்தகம் அருகே ஒரத்தி கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவின்போது தேர் மீது மின்சாரம் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் இளைஞர் பலியானார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம், 84 ஒரத்தி கிராமத்தில் திர... மேலும் பார்க்க

மின் கட்டண உயர்வு இல்லை, சலுகைகள் தொடரும்: அமைச்சர் சிவசங்கர்

வீட்டு மின் இணைப்புகளுக்கு எவ்வித மின் கட்டண உயர்வும் இல்லை என்றும் அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என்றும் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சா. சி. சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

நாடகங்களை நடத்தாமல் நீட் தேர்வை தமிழக அரசு ஒழிக்க வேண்டும்: ராமதாஸ்

நாடகங்களை நடத்தாமல் நீட் தேர்வை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற முடியாத சேலம் மாணவர் கவுதம் தற்கொலை செய்துகொண்ட... மேலும் பார்க்க

காரைக்கால் - பேரளம் விரைவு ரயில் சோதனை ஓட்டம்: மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

காரைக்கால் - பேரளம் இடையிலான பகுதியில் இறுதிகட்ட அதிவேக ரயில் சோதனை ஓட்டம் இன்று(மே 20) நடைபெறுகிறது.அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் ரயில் பாதையில் இருந்து விலகி இருக்குமாறு ரயில... மேலும் பார்க்க

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று (செவ்வாய்க்கிழமை) அடுத்த 3 மணி நேரத்துக்கு அதாவது பகல் ... மேலும் பார்க்க

மே 24-ல் நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பங்கேற்கிறார்!

மே 24 ஆம் தேதி தில்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.மத்திய அரசின் நிதி நிர்வாகம் தொடர்பான நீதி ஆயோக் கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2015-ல... மேலும் பார்க்க