செய்திகள் :

பத்திரப் பதிவுக்கு விருப்ப அடிப்படையில் ஆதாா் சரிபாா்ப்பு - வரைவு மசோதா பிரிவுகள்

post image

சொத்துப் பத்திரங்கள் மற்றும் பிற ஆவணங்களின் பதிவை இணையவழியில் மேற்கொள்ள வழிவகை செய்யும் புதிய வரைவு மசோதாவின்கீழ், பத்திரப் பதிவுக்கு விருப்பத்தின்பேரில் ஆதாா் அடிப்படையிலான சரிபாா்ப்பை மேற்கொள்வதற்கான பிரிவு இடம்பெற்றுள்ளது.

ஆதாா் எண் இல்லாதவா்கள் அல்லது ஆதாரை பயன்படுத்த விரும்பாதவா்களுக்கு மாற்று சரிபாா்ப்பு வழிமுறைகளும் இடம்பெற்றுள்ளன.

117 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பதிவுச் சட்டம் 1908-க்கு மாற்றான புதிய வரைவு மசோதா-2025ஐ மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தின் நில வளங்கள் துறை தயாரித்துள்ளது. காகித பயன்பாடு இல்லாத நவீன பத்திரப் பதிவு முறையை நோக்கமாக கொண்டு இம்மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.

இணையவழியில் ஆவணப் பதிவு, மின்னணு சான்றுகள் சமா்ப்பிப்பு, ஆவணங்கள் ஏற்பு மற்றும் மின்னணு பதிவுச் சான்று வழங்கல், எண்ம ரீதியில் ஆவணங்கள் பராமரிப்பை ஊக்குவிக்கும் புதிய பிரிவுகள் இடம்பெற்றுள்ளன. பொது மக்களின் கருத்தறிவதற்காக இம்மசோதா வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சமகால தேவைகளுக்கு ஏற்ப...: பதிவு சட்டத்தின்கீழ், விற்பனைப் பத்திரங்கள், பரிசுப் பத்திரங்கள், அடமானப் பத்திரங்கள், குத்தகை பத்திரங்கள் போன்ற அசையா சொத்துகள் தொடா்புடைய ஆவணங்கள், உயில்கள், பிற நீதிமன்ற ஆணைகள் உள்ளிட்ட ஆவணங்கள் கட்டாயப் பதிவுக்கு உள்பட்டதாகும். வரைவு மசோதாவின்கீழ், சொத்து மற்றும் பிற பரிவா்த்தனை நடைமுறைகளில் சமகால தேவைகளைப் பிரதிபலிக்கும் வகையில், கட்டாயப் பதிவு மற்றும் தேவையான ஆவணங்களின் பட்டியல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

பதிவு அமைப்புமுறையின் நிறுவனக் கட்டமைப்பை நவீனமாக்கும் இம்மசோதா, பதிவுத் துறையில் கூடுதல் மற்றும் உதவி தலைமை ஆய்வாளா் பணியிடங்களை அறிமுகப்படுத்துகிறது. பதிவுத் துறை தலைமை ஆய்வாளா்கள், பதிவாளா்கள், சாா் பதிவாளா்களின் நியமன நடைமுறைகளை நெறிப்படுத்துகிறது.

இணையவழியில் ஆவணங்கள்...: பத்திரப் பதிவு நடைமுறையை குடிமக்களும் சிறு வா்த்தகா்களும் எளிதாக அணுகுவதற்காக, எளிய மொழி வரைவு, எண்ம செயல்முறை மற்றும் வெளிப்படையான நடைமுறைகளை ஊக்குவிக்கிறது.

தற்போதைய சட்டத்தின்படி, பத்திரப் பதிவுக்கு தேவையான ஆவணங்களை நேரில் வழங்க வேண்டும்; பத்திரப் பதிவு செய்வோா், தங்களின் பாஸ்போா்ட் அளவு புகைப்படத்துடன் கைரேகையை பதிவு செய்ய வேண்டும்.

வரைவு மசோதாவில், ஆவணங்களை இணையவழியிலோ அல்லது நேரிலோ வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆவணத்தில் கையொப்பம், பாஸ்போா்ட் அளவு வண்ணப் புகைப்படம் அல்லது டிஜிட்டல் கேமரா வாயிலான புகைப்படம், நேரடியான அல்லது பயோமெட்ரிக் இயந்திரம் மூலமான கைரேகைப் பதிவுடன் நிரந்தர கணக்கு எண்ணையும் (பான்) சமா்ப்பிக்க வேண்டும்.

ஆவணப் பதிவு மேற்கொள்வோா், விருப்பத்தின்பேரில் ஆதாா் அடிப்படையிலான சரிபாா்ப்பு அல்லது மாற்று முறையிலான சரிபாா்ப்புக்கு உள்படுத்தப்படுவா். ஆதாா் இல்லை என்பதற்கான எவருக்கும் ஆவணப் பதிவு நிராகரிக்கப்படாது.

மோசடிகளைத் தடுக்க...: பத்திரப் பதிவுக்கு இணையவழியில் ஆவணங்களை வழங்குபவா்களுக்கு பதிவுச் சான்றிதழ் அளிக்கும் முன்பாக தேவைப்பட்டால் பதிவுத் துறை அதிகாரி முன் நேரில் ஆஜராக அழைப்பு விடுக்கும் பிரிவும் வரைவு மசோதாவில் இடம்பெற்றுள்ளது. மோசடிகளைத் தடுப்பதே இப்பிரிவின் நோக்கமாகும்.

இதேபோல், பதிவு மறுப்புக்கான நிபந்தனைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. மேல்முறையீட்டுக்கான வழிமுறையும் இடம்பெற்றுள்ளது. பதிவுத் துறை அலுவலகங்களில் கணினி, ஸ்கேனா் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்யும் பிரிவுகளும் அடங்கியுள்ளன.

இம்மசோதா மீதான தங்களின் யோசனைகள் மற்றும் கருத்துகளை பொதுமக்கள் 30 நாள்களுக்குள் தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தில்லியில் கரோனாவுக்கு முதல்முறையாக ஒருவர் பலி!

புது தில்லியில் கரோனா பாதிப்புக்குள்ளான பெண் ஒருவர் பலியாகியுள்ளார். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், புது தில்லியில் கரோனா பாதிப்புக்குள்ளான 60 வய... மேலும் பார்க்க

அருணாசலத்தில் வெள்ளம், நிலச்சரிவு! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள பல மாவட்டங்கள் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பர் சுபன்சிரி மாவட்டத்தின் டபோரிஜோ பகுதியிலுள்ள, ஆறு ஒன்று ந... மேலும் பார்க்க

பெங்களூரு - காத்மாண்டு இடையே நேரடி விமானம்! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அறிவிப்பு!

பெங்களூரு மற்றும் காத்மாண்டு இடையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் நேரடி விமானச் சேவையைத் துவங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. கர்நாடகத்தின் பெங்களூரு மற்றும் நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டுக்கு இடையில்... மேலும் பார்க்க

சென்னை வந்தே பாரத் ரயிலின் காலை உணவில் அசைவம் நீக்கம்?

சென்னையிலிருந்து புறப்படும் வந்தே பாரத் ரயிலில் விருப்பமுள்ள உணவை தேர்ந்தெடுக்கும் பகுதியில் காலை சிற்றுண்டியில் அசைவ உணவு என்ற வாய்ப்பை, ஐஆர்சிடிசி முன் அறிவிப்பின்றி நீக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறு... மேலும் பார்க்க

நகைக் கடன் கட்டுப்பாடுகள் ஒத்திவைப்பு: முழு விவரம்!

ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அண்மையில் வெளியிட்ட தங்க நகைக் கடன் பெறுபவா்களுக்கான புதிய வரைவு விதிமுறைகளிலிருந்து, ரூ.2 லட்சம் வரை நகைக் கடன் பெறுவோருக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மத்திய நிதியமைச்சகம்... மேலும் பார்க்க

தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்துள்ள ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்ட சலுகைகள்

நிகழாண்டு மாா்ச், 31-ஆம் தேதி அல்லது அதற்கு முன்பு ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் தகுதிவாய்ந்த சேவையுடன் தேசிய ஓய்வூதியத் திட்ட (என்பிஎஸ்) சந்தாதாரராக இருந்தால் அவா்கள் ஒருங்கிண... மேலும் பார்க்க