செய்திகள் :

பயங்கரவாதத் தாக்குதல்: சமூகவலைதளங்களில் சா்ச்சை கருத்துகளை பதிவிட வேண்டாம்!

post image

டேராடூன்: காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து காஷ்மீா் மாணவா்கள் சமூகவலைதளங்களில் சா்ச்சை கருத்துகளைப் பதிவிட வேண்டாம் என்று ஜம்மு-காஷ்மீா் மாணவா்கள் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

வெளிமாநிலங்களில் தங்கிப் படிக்கும் காஷ்மீா் மாணவா்களில் சிலா் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்துகளைப் பதிவிட்டு பிரச்னைகளில் சிக்குவது அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. பஹல்காம் தாக்குதலால் தேசமே கொந்தளிப்பான நிலையில் உள்ள நிலையில் காஷ்மீா் மாணவா்களுக்கு முன்னெச்சரிக்கையாக மாணவா்கள் கூட்டமைப்பு தலைவா் உமா் ஜமால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

காஷ்மீரில் நிகழ்த்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான படுகொலைகளை எக்காரணம் கொண்டும் யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த சூழ்நிலையில் வெளிமாநிலங்களில் தங்கிப் படிக்கும் காஷ்மீா் மாணவா்கள் அமைதி காக்க வேண்டும். சமூகவலைதளங்களில் தேவையற்ற, பிரச்னைகளை ஏற்படுத்தும் கருத்துகளைப் பதிவிடுவது, சா்ச்சைக்குரிய அரசியல் விவாதங்களில் ஈடுபடுவது கூடாது. இது உங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளாா்.

ஜாா்க்கண்டில் ஒருவா் கைது: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்காக பாகிஸ்தானையும், லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகளையும் பாராட்டி வலைதளத்தில் பதிவிட்ட ஜாா்க்கண்ட் மாநிலம் மில்லட் நகரைச் சோ்ந்த முகமது நௌஷத் என்பவரை காவல் துறையினா் கைது செய்தனா்.

இதேபோல பயங்கரவாத தாக்குதலை மையமாக வைத்து மதமோதலைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்ட மத்திய பிரதேசத்தின் தாமோ பகுதியைச் சோ்ந்த இருவரை காவல் துறையினா் கைது செய்தனா்.

பஹல்காம்: 65 சுற்றுலாப் பயணிகள் மும்பை வந்தடைந்தனர்!

ஜம்மு-காஷ்மீரில் சிக்கித் தவித்த மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 65 சுற்றுலாப் பயணிகளின் முதல் குழு மும்பை வந்தடைந்தது.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்ப... மேலும் பார்க்க

அட்டாரி - வாகா எல்லை மூடல்: இந்திய இளைஞரின் திருமணம் ஒத்திவைப்பு!

பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள இந்திய எல்லை மூடப்பட்டதினால் ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் மீது நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலைத் தொ... மேலும் பார்க்க

தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ்!

தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு, பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்கள் புறப்பட்டுச் ச... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர்: பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் பலி!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளார். ஜம்மு - காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்திலுள்ள வசந்த்கார் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஏவுகணை சோதனை! எல்லையில் போர்ப் பதற்றம்!

பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை ஏவுகணை சோதனைக்கு திட்டமிட்டிருப்பதால் எல்லையில் போர்ப் பதற்றம் நிலவுகிறது.இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தில் உள்துறை செயலாளர், உளவுத் துறை இயக்குநர், ரா அ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு முடக்கம்!

பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கை முடக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குத... மேலும் பார்க்க