செய்திகள் :

பயங்கரவாதம் இருநாடுகளுக்கு மட்டுமான பிரச்னை அல்ல: அமைச்சர் ஜெய்சங்கர்!

post image

பயங்கரவாதம் இருநாட்டு பிரச்னையாக மட்டும் பார்க்காமல், சர்வதேச அளவிலான பிரச்னையாகக் கருதப்பட வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

பெல்ஜியம் நாட்டுக்குச் சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் மேக்ஸிமே பெர்வோட் மற்றும் லக்சம்பர்க் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த இந்திய வம்சாவளி மக்களைச் சந்தித்து பேசினார்.

இந்தச் சந்திப்பில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடியான ஆபரேஷன் சிந்தூர் பற்றி பேசுகையில், 2016-ம் ஆண்டு பிரசெல்ஸ் நகரத்தில் நடைபெற்ற தாக்குதலைக் குறிப்பிட்ட அவர், பயங்கரவாதத்தை ஒரு நாட்டின் பிரச்னை இல்லை என்பதை உணர்த்துங்கள் எனக் கூறினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:

”இதை அதிகம் ஊடகத்தின் வாயிலாகப் பார்க்காதீர்கள், ஏனெனில் உங்களுக்குத் தெரியும் பெரும்பாலான ஊடகங்கள் நடுநிலையாக இருப்பதில்லை. பயங்கரவாதத்தை ஐரோப்பாவிலுள்ள மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். ஏன் என்றால் அவர்கள் இதை பெரிய அளவில் அனுபவித்தது இல்லை.

இங்கும் பயங்கரவாதம் நடைபெறுகிறது. ஆனால், எந்தவொரு ஐரோப்பிய நாடும் அவர்களது அண்டை நாடும் பயங்கரவாதத்தைத் தங்களது கொள்கையாகக் கொண்டுச் செயல்படுவதில்லை. இதனால், நான் சிறிது நேரம் செலவிட்டு அவர்களுக்குப் புரியவைக்க முயற்சி செய்கிறேன்.

பயங்கரவாதம் போன்ற பிரச்னைகளுக்கான செய்தி என்னவென்றால், இதை இருநாடுகளுக்கு இடையிலான பிரச்னையாகக் கருதாதீர்கள். இது வெறும் இந்தியாவின் பிரச்னையாக நான் கருதவில்லை. அதாவது, நீங்கள் கடந்த 20-30 ஆண்டுகளில் நடைபெற்ற இதுபோன்ற சம்பவங்களின் வரலாற்றைப் பார்த்தால், அவற்றுக்கு, நேரடியாக பாகிஸ்தானுடன் தொடர்பு இருக்கும். கைரேகைகள், தடயங்கள் அல்லது அங்கிருந்து யாரேனும் இங்கு வருவது. இதுபோன்றவைகள் அனைத்தும் உங்களுக்கு நன்றாகவே தெரியும்.” என அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலில், 26 சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளின் மீது இந்தியா தாக்குதல் நடத்தி அங்கு அமைந்திருந்த பயங்கரவாத முகாம்களைத் தகர்த்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: மீண்டும் தலைதூக்கிய கரோனா: ஏழு ஆயிரத்தை நெருங்குகிறது!

என் வாழ்க்கையின் மோசமான நாள்: ஏர் இந்தியா தலைவர்

ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து குறித்து அந்நிறுவனத்தின் தலைவர் என். சந்திரசேகரன் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.அதில், தனது தொழில் வாழ்க்கையின் மிக மோசமான நாள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.குஜராத்... மேலும் பார்க்க

புறப்பட்ட ஒரு நிமிடத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! வெளியானது சிசிடிவி காட்சி!

ஆமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் வெடித்துச் சிதறிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு இன்று பிற்பகல் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சிறிது நேர... மேலும் பார்க்க

தேனிலவு கொலை: திருமணத்துக்கு முன்பே திட்டம்; மனைவி வாக்குமூலம்!

தேனிலவில் வைத்து ராஜா ரகுவன்ஷியைக் கொலை முன்பே திட்டமிட்டதை அவரது மனைவி சோனம் ஒப்புக்கொண்டதாக மேகாலயா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கொலைக்கான மூளையாக சோனத்தின் காதலன் ராஜ் குஷ்வாஹா செயல்பட்டதாகவும்,... மேலும் பார்க்க

ஆமதாபாத்: சிதைந்த நிலையில் பயணிகள்; உறவினர்களிடம் ’டிஎன்ஏ மாதிரி’ கோரும் குஜராத் அரசு!

குஜராத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அடையாளம்காண, அவர்களின் உறவினர்களின் டிஎன்ஏ மாதிரி கோரப்பட்டுள்ளது.குஜராத் மாநிலம் ஆமதாபாதில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர... மேலும் பார்க்க

விமான விபத்தில் பலியானோருக்கு தலா ரூ. 1 கோடி! டாடா குழுமம்

ஆமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று டாடா குழுமத் தலைவர் என். சந்திரசேகர் அறிவித்துள்ளார்.மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு... மேலும் பார்க்க

குஜராத் விமான விபத்து! முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மரணம்!

குஜராத்தில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.ரூபானி சென்ற விமானம் விபத்து அறிந்ததையடுத்து, ராஜ்கோட்டில் உள்ள ர... மேலும் பார்க்க