சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணி விபத்தில் பலியானவருக்கு ரூ. 20 லட்சம் இழப்பீட...
அகமதாபாத் விமான விபத்து: `கருப்புப் பெட்டி கிடைத்தால்தான்...' - விமான போக்குவரத்து முன்னாள் அமைச்சர்
குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட AI 171 என்ற எண் கொண்ட போயிங் 787 ரக விமானம் விபத்துக்குள்ளாகி, அகமதாபாத்தின் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மெஹானி எனும் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியிருக்கிறது.
Ahmedabad Airplane Accident : 'விமானத்தில் பயணித்த பாஜக முன்னாள் முதல்வர்?' - நிலை என்ன?
விமானம் அப்பகுதியில் இருந்த மருத்துவக் கல்லூரி மீது மோதியதில் மாணவர்கள், கல்லூரியில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கியதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 242 விமான பயணிகள் மற்றும் ஊழியர்கள், பாதிக்கப்பட்ட அப்பகுதியில் இருந்தவர்களை மீட்டு சிகிச்சை அளிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இதில் 2 கைக் குழந்தைகள், 11 சிறார்கள், 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ், 1 கனேடியர் மற்றும் 7 போர்த்துகீசியர்கள் பயணித்ததாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
லண்டனின் காட்விக்கை நோக்கி தனது மகளைப் பார்க்கச் சென்ற குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி (68), இந்த விமான விபத்தில் உயிரிழந்திருக்கிறார்.
விமான விபத்தில் சிக்கியவர்களை மீட்டு இந்த விமான விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து விமான போக்குவரத்துத் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். விமானத்தில் மொத்தத் தகவல்கள் பதிவாகியிருக்கும் கருப்புப் பெட்டியை ஆராயும் பணியில் இறங்கியிருக்கின்றனர்.

இதுகுறித்து விமான போக்குவரத்து முன்னாள் அமைச்சர் பிராஃபுல் படேல், "787 Dreamliner ரக விமானம் தொழில்நுட்ப ரீதியாக மிகச் சிறந்தது. அவ்வளவு எளிதில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. ஆனால், இதில் எப்படி விபத்து நிகழ்ந்தது என்பதை நினைத்தால்தான் ஆச்சர்யமாக உள்ளது. கருப்பு பெட்டி கிடைத்தால் மட்டுமே விபத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய முடியும்!” என்று கூறியிருக்கிறார்.
கடந்த ஏப்ரல் 2025 இல், மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, விமான விபத்து விசாரணைகளுக்கான இந்தியாவின் முதல் கருப்புப் பெட்டி ஆய்வகத்தைத் திறந்து வைத்தார். அதில்தான் இந்த கருப்புப் பெட்டி தொடர்பான ஆய்வுகள் நடத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. புதிதாகத் திறப்பட்ட அந்த ஆராய்ச்சிக் கூடத்தில் நடக்கும் முதல் கருப்புப் பெட்டி ஆய்வு இதுதான் என்றும் கூறப்படுகிறது.