செய்திகள் :

அகமதாபாத் விமான விபத்து: `கருப்புப் பெட்டி கிடைத்தால்தான்...' - விமான போக்குவரத்து முன்னாள் அமைச்சர்

post image

குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட AI 171 என்ற எண் கொண்ட போயிங் 787 ரக விமானம் விபத்துக்குள்ளாகி, அகமதாபாத்தின் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மெஹானி எனும் குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியிருக்கிறது.

Ahmedabad Airplane Crash
Ahmedabad Plane Crash

Ahmedabad Airplane Accident : 'விமானத்தில் பயணித்த பாஜக முன்னாள் முதல்வர்?' - நிலை என்ன?

விமானம் அப்பகுதியில் இருந்த மருத்துவக் கல்லூரி மீது மோதியதில் மாணவர்கள், கல்லூரியில் இருந்தவர்கள் விபத்தில் சிக்கியதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. 242 விமான பயணிகள் மற்றும் ஊழியர்கள், பாதிக்கப்பட்ட அப்பகுதியில் இருந்தவர்களை மீட்டு சிகிச்சை அளிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இதில் 2 கைக் குழந்தைகள், 11 சிறார்கள், 169 இந்தியர்கள், 53 பிரிட்டிஷ், 1 கனேடியர் மற்றும் 7 போர்த்துகீசியர்கள் பயணித்ததாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

லண்டனின் காட்விக்கை நோக்கி தனது மகளைப் பார்க்கச் சென்ற குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ரூபானி (68), இந்த விமான விபத்தில் உயிரிழந்திருக்கிறார்.

விமான விபத்தில் சிக்கியவர்களை மீட்டு இந்த விமான விபத்து எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து விமான போக்குவரத்துத் துறையினர் ஆராய்ந்து வருகின்றனர். விமானத்தில் மொத்தத் தகவல்கள் பதிவாகியிருக்கும் கருப்புப் பெட்டியை ஆராயும் பணியில் இறங்கியிருக்கின்றனர்.

பிராஃபுல் படேல்

இதுகுறித்து விமான போக்குவரத்து முன்னாள் அமைச்சர் பிராஃபுல் படேல், "787 Dreamliner ரக விமானம் தொழில்நுட்ப ரீதியாக மிகச் சிறந்தது. அவ்வளவு எளிதில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை. ஆனால், இதில் எப்படி விபத்து நிகழ்ந்தது என்பதை நினைத்தால்தான் ஆச்சர்யமாக உள்ளது. கருப்பு பெட்டி கிடைத்தால் மட்டுமே விபத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய முடியும்!” என்று கூறியிருக்கிறார்.

கடந்த ஏப்ரல் 2025 இல், மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, விமான விபத்து விசாரணைகளுக்கான இந்தியாவின் முதல் கருப்புப் பெட்டி ஆய்வகத்தைத் திறந்து வைத்தார். அதில்தான் இந்த கருப்புப் பெட்டி தொடர்பான ஆய்வுகள் நடத்தப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. புதிதாகத் திறப்பட்ட அந்த ஆராய்ச்சிக் கூடத்தில் நடக்கும் முதல் கருப்புப் பெட்டி ஆய்வு இதுதான் என்றும் கூறப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

அகமதாபாத்: `விஜய் ரூபானி' விமான விபத்தில் மரணித்த 2-வது குஜராத் முதல்வர்!

அகமதாபாத் விமான விபத்தில் மரணமடைந்த பாஜக தலைவர் விஜய் ரூபானி குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராவார். இவரது மரணம் 1965ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் போரின்போது பாக் ஜெட் விமானத்தால் சுட்டு வீழ்த்த... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: "சுற்றியும் சடலங்கள்; விரிசல் வழியே..." - தப்பிப் பிழைத்தவர் சொல்வது என்ன?

"விமானம் டேக் ஆஃப் ஆகி 30 நொடிகள் ஆகியிருக்கும். அதிக சத்தம்... விமானம் விழுந்துவிட்டது. எல்லாம் வேகமாக நடந்தேறிவிட்டது.நான் எழுந்தபோது என்னைச் சுற்றிச் சடலங்களாகக் கிடந்தது. எனக்குப் பயமாக இருந்தது. ... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: கணவனுடன் வாழ லண்டன் புறப்பட்ட இளம் பெண்; விமான விபத்தில் பலியான சோகம்

நேற்று குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் குஷ்பு கன்வார் ஆசையுடனும், எதிர்பார்ப்புடனும், புதிய வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்க நம்பிக்கையுடன் காத்திருந்தார். ஆனால், அவரை வழியனுப்ப வந்தவர்களி... மேலும் பார்க்க

Ahmedabad Plane Crash: விமான விபத்துகளுக்கான காரணத்தைக் கூறும் 'Black Box' பற்றி தெரியுமா?

குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்கு உள்ளாகியிருக்கிறது. என்ன நடந்தது?ஏர் இந்தியாவின் விமானம் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்த... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: கனவுகளுடன் தொடங்கிய பயணம்... 3 குழந்தைகளுடன் பரிதாபமாக உயிரிழந்த பெற்றோர்

இந்தியாவை உறையச் செய்த சம்பவத்தில் ஒன்று ஏர் இந்தியா விமான விபத்து. குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து நேற்று பிற்பகல் 1:38 மணிக்கு லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தின் AI171 ... மேலும் பார்க்க

சென்னை: மெட்ரோ பாலம் விழுந்து விபத்து - ஒருவர் பலியான சோகம்!

சென்னை ராமாபுரம் பகுதியில் DLF அருகே மெட்ரோ தூணில் இருந்து கட்டுமானம் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பாதைக்கான இரண்டாம் கட்ட கட்டுமானப் பணிகள் பூந்தமல்லியில் இருந்து கலங்கரை விளக்கம... மேலும் பார்க்க