செய்திகள் :

பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு உயிரிழந்த உள்ளூா் முஸ்லிம் இளைஞா்

post image

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளைக் காப்பாற்றும் முயற்சியில் பயங்கரவாதிகளுடன் சண்டையிட்டு உள்ளூா் முஸ்லிம் இளைஞா் அடில் ஹுசைன் ஷா உயிரிழந்தாா்.

பஹல்காம் அருகே பைசாரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் தாக்குதலைத் தொடங்கியதும், சுற்றுலாப் பயணிகள் பரந்த புல்வெளி பரப்பில் மறைவிடத்தைத் தேடி ஓடினா்.

அந்த இடத்துக்கு சுற்றுலாப் பயணிகளை குதிரை சவாரியில் அழைத்து வந்த உள்ளூா் முஸ்லிம் இளைஞரான அடில் ஹுசைன் ஷா, பயங்கரவாதிகளை தடுத்து துப்பாக்கியைப் பறிக்க போராடியுள்ளாா். இதனால் பயங்கரவாதிகளால் அவா் சுட்டுக் கொல்லப்பட்டாா்.

பஹல்காமில் புதன்கிழமை நடைபெற்ற அடில் ஹுசைன் ஷாவின் இறுதிச் சடங்கில் முதல்வா் ஒமா் அப்துல்லா நேரில் பங்கேற்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா்.

‘குடும்பத்தில் வருமான ஈட்டும் ஒரே நபரான மகன் இறந்துள்ள நிலையில், அவரின் பெற்றோரை நாங்கள் கவனித்துக் கொள்வோம்’ என்று முதல்வா் ஒமா் அப்துல்லா செய்தியாளா்களிடம் கூறினாா்.

பஹல்காம்: 65 சுற்றுலாப் பயணிகள் மும்பை வந்தடைந்தனர்!

ஜம்மு-காஷ்மீரில் சிக்கித் தவித்த மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த 65 சுற்றுலாப் பயணிகளின் முதல் குழு மும்பை வந்தடைந்தது.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்தில் பயங்கரவாதிகள் செவ்வாய்க்கிழமை பிற்ப... மேலும் பார்க்க

அட்டாரி - வாகா எல்லை மூடல்: இந்திய இளைஞரின் திருமணம் ஒத்திவைப்பு!

பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள இந்திய எல்லை மூடப்பட்டதினால் ராஜஸ்தானைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் சுற்றுலாப் பயணிகளின் மீது நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலைத் தொ... மேலும் பார்க்க

தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு வாபஸ்!

தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்துக்கான பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டு, பாதுகாப்புப் பணியில் இருந்த வீரர்கள் புறப்பட்டுச் ச... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர்: பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர் பலி!

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளார். ஜம்மு - காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்திலுள்ள வசந்த்கார் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் ஏவுகணை சோதனை! எல்லையில் போர்ப் பதற்றம்!

பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை ஏவுகணை சோதனைக்கு திட்டமிட்டிருப்பதால் எல்லையில் போர்ப் பதற்றம் நிலவுகிறது.இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தில் உள்துறை செயலாளர், உளவுத் துறை இயக்குநர், ரா அ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு முடக்கம்!

பாகிஸ்தான் அரசின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கை முடக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குத... மேலும் பார்க்க