செய்திகள் :

பயணிகள் ஆதரவின்மையால் விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு சிறப்பு ரயில் ரத்து!

post image

விழுப்புரத்திலிருந்து திருச்சி வழியாக வாரத்துக்கு 4 நாள்கள் இயக்கப்பட்டு வந்த விழுப்புரம் - ராமேசுவரம் அதிவிரைவு சிறப்பு ரயில் போதிய பயணிகள் ஆதரவின்மை காரணமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோடைக்காலத்தில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும், ஆன்மிக நகரமான ராமேசுவரத்துக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும் விழுப்புரத்திலிருந்து திருச்சி வழியாக மே 2-ஆம் தேதி விரைவு ரயில் இயக்கப்பட்டு வந்தது. வாரத்தில் திங்கள், செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் இந்த ரயில் இயக்கப்பட்டது.

விழுப்புரத்திலிருந்து காலை 4.15 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - ராமேசுவரம் விரைவு ரயில் (06105) முற்பகல் 11.40 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும்.

எதிர்வழித்தடத்தில் ராமேசுவரத்திலிருந்து பிற்பகல் 2.35 மணிக்குப் புறப்படும் ராமேசுவரம் -விழுப்புரம் விரைவு ரயில் (06106), இரவு 10.35 மணிக்கு விழுப்புரம் வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டு, தொடர்ந்து ஜூன் 30-ஆம் தேதி வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது.

விழுப்புரம் -ராமேசுவரம் அதிவிரைவு சிறப்பு ரயிலுக்கு பயணிகள் மத்தியில் போதிய ஆதரவில்லாததன் காரணமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதன்படி விழுப்புரத்திலிருந்து ராமேசுவரம் செல்லும் அதிவிரைவு சிறப்பு ரயில் (06105) ஜூன் 13, 14, 16, 17, 20, 21, 23, 24, 27, 28, 30 ஆகிய தேதிகளிலும், ராமேசுவரத்திலிருந்து விழுப்புரம் வரை செல்லும் அதிவிரைவு சிறப்பு ரயில் (06106) ஜூன் 9, 10, 13, 14, 16, 17, 20, 21, 23, 24, 27, 28, 30-ஆகிய தேதிகளிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: சென்னை புரசைவாக்கத்தில் 7 பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை!

கோவையில் என் காலடி படாத இடமே இல்லை: இளையராஜா

கோவை: கோவையில் என் காலடி படாத இடமே இல்லை, கோவையில் வாங்கிய ஆர்மோனிய பெட்டியைத்தான் தற்பொழுதுவரை பயன்படுத்தி வருகிறேன் என்று இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.கோவையில் செய்த ஆர்மோனிய பெட்டியைத்தான் தற்... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இஸ்லாமியா்கள் இன்று காலை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா். ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகை சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இஸ்ல... மேலும் பார்க்க

நெல்லையில் 15 நாள்களுக்குப் போராட்டங்களுக்குத் தடை: காவல் ஆணையர்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில், இன்று முதல் 15 நாள்களுக்கு போராட்டங்கள் நடத்த தடை விதித்து மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹாதி மணி, மாநகர... மேலும் பார்க்க

மாநிலங்களவை வேட்பாளா்களின் சொத்து விவரம்! கமலுக்கு எவ்வளவு தெரியுமா?

மாநிலங்களவைத் தோ்தல் வேட்பாளா்களான கமல்ஹாசன் உள்ளிட்ட ஆறு பேரின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. அவா்கள் வேட்பு மனுவுடன் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரம் வருமாற... மேலும் பார்க்க

மயானம் ஆக்கிரமிப்பு: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகில் மயானத்தை ஆக்கிரமித்துக்கொண்டு, இறந்தவா் உடல்களை கொண்டுசெல்ல சிலா் தடுப்பதாக புகாா் எழுந்த நிலையில், அது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமா்ப்பிக்க ஈரோடு மாவட்ட ஆட... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகள் பராமரிப்பு: ரூ.97.95 கோடி மானியம் விடுவிப்பு

தமிழகத்தில் 37,476 அரசுப் பள்ளிகளின் பராமரிப்புக்கு 50 சதவீத மானியத் தொகை (ரூ. 97.95 கோடி) விடுவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநிலத் திட்ட இயக்குநரகம் சாா்பில் அனைத்து... மேலும் பார்க்க