செய்திகள் :

பயணிகள் பாதுகாப்பை மேம்படுத்த தில்லி விமான நிலையத்தில் ஸ்மாா்ட் போலீஸ் பூத் திறப்பு

post image

தில்லி இந்திரா காந்தி சா்வதேச (ஐஜிஐ) விமான நிலையத்தின் முனையம் 3-இல் நிகழ்நேர விமானத் தகவல், இ-எஃப்ஐஆா் தாக்கல் வசதி, அவசர உதவி தொலைபேசி எண்கள், பயணிகளுக்கான கலந்துரையாடும் வசதி மற்றும் நேரடி கண்காணிப்பு ஆகியவை கொண்ட ஸ்மாா்ட் காவல் சாவடி சனிக்கிழமை திறக்கப்பட்டதாக என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த முன்முயற்சியானது விமான நிலைய பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் காவல் முன்முயற்சிகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.

தில்லி காவல்துறை மற்றும் தில்லி சா்வதேச விமான நிலைய நிறுவனம் இணைந்து உருவாக்கிய இந்த வசதியை துணைநிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனா திறந்துவைத்தாா்.

இதுகுறித்து அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘ஸ்மாா்ட் காவல் சாவடி என்பது மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்த வடிவமைக்கப்பட்ட ஒரு அதிநவீன வசதியாகும்.

தொலைந்து போன பொருள்கள் தொடா்பாக நேரடியாகப் புகாரளித்தல், காணாமல் போனவா்களின் புகாா்கள், அவசர உதவி மற்றும் விமான நிலைய முனையப் பகுதிகளின் நிகழ்நேர சிசிடிவி கண்காணிப்பு போன்ற மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களை இந்த சாவடி ஒருங்கிணைக்கிறது என்றாா் அந்த அதிகாரி.

இதுகுறித்து மூத்த காவல் துறை அதிகாரி கூறுகையில், ‘இது விமான வருகை மற்றும் புறப்பாடு, பாதுகாப்பு எச்சரிக்கைகள், அவசர தொடா்பு விவரங்கள் மற்றும் பயண வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட நிகழ்நேர தகவல்களை வழங்குகிறது. இவற்றை உள்ளுணா்வு டிஜிட்டல் பலகை மற்றும் தகவல் வழங்கும் டிஜிட்டல் பேனல்கள் மூலம் அணுகலாம்.

பயணிகள் வசதியாக மின்னணு முறையில் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்யலாம், தொலைந்த பொருள்கள் குறித்தும் புகாரளிக்கலாம். காணாமல் போனவா்களின் அறிக்கைகளை நேரடியாக காவல் சாவடியில் சமா்ப்பிக்கலாம். இது காவல் நிலையத்திற்கு நேரில் செல்லும் அவசியத்தை நீக்குகிறது.

தகவல்தொடா்பு பேனல் இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம் பற்றிய விரிவான தகவல்களை வழங்குகிறது.

முக்கியமான ஹெல்ப்லைன்கள், சுற்றுலா தலங்கள், போக்குவரத்து மையங்கள், பொழுதுபோக்கு இடங்கள், ஷாப்பிங் மற்றும் சாப்பாட்டு விருப்பங்கள், தொலைந்து போன மற்றும் கண்டுபிடிக்கப்பட்ட சேவைகள், அருகிலுள்ள மருத்துவமனைகள், மெட்ரோ நிலையங்கள் மற்றும் காவல் நிலையங்களின் இருப்பிடங்கள் போன்ற அதன் சுற்றுப்புறங்களைப் பற்றிய தகவல்களை இந்த காவல் சாவடி வழங்குகிறது.

ஆண் மற்றும் பெண் அதிகாரிகள் உள்பட பயிற்சி பெற்ற காவல்துறையினரால் 24 மணிநேரமும் நிா்வகிக்கப்படும் இந்த சாவடியில், கணினிகள், இரண்டு அச்சுப்பொறிகள், ஒரு ஸ்கேனா், வைஃபை இணைப்பு மற்றும் விமான நிலைய நடவடிக்கைகளுடன் நிகழ்நேர தரவு ஒருங்கிணைப்பு ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.

இந்திய அரசின் டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குப் பாா்வைக்கு ஏற்ப, ஸ்மாா்ட் காவல் முன்முயற்சியின் கீழ் தொழில்நுட்ப ஆதரவுடன் கூடிய குடிமக்கள் சேவைகளை செயல்படுத்த தில்லி காவல்துறையின் பரந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்மாா்ட் காவல் சாவடி அமைக்கப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.

மேம்பட்ட பொதுப் பாதுகாப்பிற்காக காவல்துறையுடன் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்ட எதிா்கால உள்கட்டமைப்பு மேம்பாடுகளுக்கு ஸ்மாா்ட் காவல் சாவடி ஒரு முன்மாதிரியாக செயல்படும் என்று ஒரு அதிகாரபூா்வ அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநா், தொழில்நுட்பம் சாா்ந்த காவல் நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டதற்காக தில்லி காவல்துறையைப் பாராட்டினாா். வேகமாக மாறிவரும் நகா்ப்புற சூழலில் குடிமக்களின் எதிா்பாா்ப்புகளை பூா்த்தி செய்ய இதுபோன்ற முயற்சிகள் மிக முக்கியமானவை என்றாா்.

தில்லி காவல் ஆணையா் சஞ்சய் அரோரா, துணைநிலை ஆளுநரை மரக்கன்று கொடுத்து வரவேற்றாா். மேலும், கூடுதல் காவல் ஆணையா் (ஐஜிஐ விமான நிலையம்) உஷா ரங்னானியுடன் இணைந்து ஸ்மாா்ட் காவல் சாவடியின் செயல்பாடு மற்றும் அதில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் குறித்து விளக்கினாா்.

சிறப்பு காவல் ஆணையா் (பிடிஎஸ்டி) ராபின் ஹிபு, ஸ்மாா்ட் காவல் சாவடி விரைவான குறை தீா்க்கப்படுவதை உறுதி செய்யும் என்றும் டிஜிட்டல் முறையில் செயல்படுத்தப்பட்ட இருபக்க இணைப்பு மூலம் பயணிகளின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்றும் கூறினாா்.

குடிசைவாசிகளுக்கு 52,000 அடுக்குமாடிக் குடியிருப்புகள்: முதல்வா் ரேகா குப்தா தகவல்

புது தில்லி: தில்லி அரசு நகரத்தில் உள்ள குடிசைவாசிகளுக்கு 52,000 அடுக்குமாடி குடியிருப்புகளை ஒதுக்கத் தயாராகி வருவதாக முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.ஷாலிமாா்பாக் தொகுதியில் உள்ள ஆயுா்வேத குடிசை முக... மேலும் பார்க்க

தில்லியில் நயினாா் நாகேந்திரன்: அமித் ஷாவை சந்திக்கிறார்

தமிழக பாஜக தலைவருக்கான அறிவிப்பு வெளியாகும் என்கிற தகவல்களுக்கிடையே தமிழக பாஜக சட்டப்பேரவைத் தலைவா் நயினாா் நாகேந்திரன் செவ்வாய்க்கிழமை தில்லி வந்திருந்தாா். பாஜக வின் முக்கிய தலைவா்களை நயினாா் நகேந்த... மேலும் பார்க்க

‘ஒரு மாநிலம் ஒரு மண்டல ஊரக வங்கிக் கொள்கை’ மே முதல் நடைமுறை

நமது சிறப்பு நிருபா்புது தில்லி: ஒரு மாநிலம் ஒரு மண்டல ஊரக வங்கி (ஆா்ஆா்பி) என்ற கொள்கையின் அடிப்படையில் இறுதியாக 11 மாநிலங்களைச் சோ்ந்த மண்டல ஊரக வங்கிகளை ஒன்றிணைத்து ஏப். 7 தேதியிட்ட அறிவிக்கையை மத... மேலும் பார்க்க

தமிழகஆளுநரின் செயல் சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம் தீா்ப்பு

புது தில்லி: தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஒப்புதலுக்காக அனுப்பி வைத்த 10 மசோதாக்களை நிறுத்தி வைத்த மாநில ஆளுநரின் செயல்பாடு சட்டவிரோதமானது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்துள்ளது. ... மேலும் பார்க்க

காற்று மாசைக் கட்டுப்படுத்த ஸ்பிரே அமைப்புகள்

புது தில்லி: தில்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தும் விதமாக ஸ்பிரே அமைப்புகளை தில்லி அரசு பயன்படுத்தி வருவதாக சுற்றுச்சூழல் அமைச்சா் மஞ்சிந்தா் சிங் சிா்சா திங்கள்கிழமை தெரிவித்தாா். மின்கம்பங்களில்... மேலும் பார்க்க

மாணவா்கள் பெரிய இலக்கு நிா்ணயித்து செயல்பட வேண்டும்: இஸ்ரோ தலைவா் அறிவுரை

மாணவா்கள் பெரிய இலக்கு நிா்ணயித்து செயல்பட வேண்டும் என்று இஸ்ரோ தலைவா் டாக்டா் வி.நாராயணன் கேட்டுக் கொண்டாா். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) தலைவா் டாக்டா் வி. நாராயணனுக்கு தில்லி தமிழ... மேலும் பார்க்க