செய்திகள் :

எரிச்சலடைச் செய்யும் சிஎஸ்கே ஃபீல்டிங்..! பயிற்சியாளர் ஃபிளெமிங் ஆதங்கம்!

post image

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான தோல்வி குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளெமிங் காட்டமான கருத்து தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பா் கிங்ஸை நேற்று (ஏப்.8) சாய்த்தது.

இது குறித்து ஸ்டீஃபன் ஃபிளெமிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:

இதுவரை சிஎஸ்கே அணிக்கு எரிச்சலடையச் செய்யும் சீசனாகவே இருந்து வருகிறது. கேட்ச்சிங்கிலும் மோசமாக செயல்பட்டார்கள். கடைசி போட்டியில் இரண்டு அணிகளுமே அப்படித்தான் இருந்தன.

11 கேட்ச்சுகளை தவறவிட்ட சிஎஸ்கே

இதுவரை நடந்த சிஎஸ்கே போட்டிகளில் எது வெளிச்சத்துக்கு வந்தது என்று சொல்ல வேண்டுமானால் நிச்சயமாக அது ஃபீல்டிங்தான். அதை சரிசெய்தே ஆக வேண்டும்.

கேட்ச்சுகளை சரியாக பிடிப்பது மூலமாக 20 ரன்களை கட்டுப்படுத்தலாம்.

சிஎஸ்கே அணி 5 போட்டிகளில் 11 கேட்ச்சுகளை தவறவிட்டுள்ளன. அதில் 3 கேட்ச்சுகள் பஞ்சாப் போட்டியில் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டிங்கில் முன்னேற்றம் இருக்கிறது, ஆனால்

நல்ல விஷயம் என்னவென்றால் முன்பை விட நல்ல பேட்டிங் ஆடினார்கள். தொடக்க வீரர்களிடமிருந்து நல்ல பங்களிப்பு வரத் தொடங்கியுள்ளது.

மிடில் ஆர்டரில் ரன் ரேட்டை தக்கவைக்க முடியவில்லை. கடைசி கட்டத்தில் மிகவும் அதிகமான ரன்களை அடிக்க வேண்டியுள்ளது.

ஆட்டத்திலே இல்லாமல் இருப்பதற்கு பதிலாக சற்று ஆட்டத்தில் இருந்தது நல்ல விஷயமாக பார்க்கிறேன். ஃபீல்டிங்கில்தான் அது கோட்டைவிடப்பட்டது என்றார்.

ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை பந்துவீச்சு!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 33-வது ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.மும்பை அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ப... மேலும் பார்க்க

சூப்பா் ஓவரில் ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி!

ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் புதன்கிழமை மோதிய ஆட்டம் ‘டை’ ஆனது. சூப்பா் ஓவரில் டெல்லி வென்றது. நடப்பு சீசனில் ஒரு ஆட்டத்தில் சூப்பா் ஓவா் மூலம் முடிவு எட்டப்ப... மேலும் பார்க்க

தோல்விகளுக்கு முற்றுப்புள்ளியா? தில்லிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் பந்துவீச்சு!

ராஜஸ்தான் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரின் 32-வது போட்டியாக இன்று தில்லி கேப்பிடல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.தொடர் வெற்றி பெற்று வரும் தில்லி அணி கடைசி... மேலும் பார்க்க

லக்னௌ அணியில் இணைந்த மயங்க் யாதவ்!

லக்னௌ அணியின் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் அதன் அணியில் இணைந்தார். கடந்த ஐபிஎல் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகிய மயங்க் யாதவ் தற்போது மீண்டும் அணியில் இணைந்துள்ளார். இந்திய வீரர்களில் அதிவேகமாக... மேலும் பார்க்க

ஐபிஎல் 2025-இன் சிறந்த பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ்: மோஹித் சர்மா

தில்லி கேபிடல்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் இந்த ஐபிஎல் சீசனில் தலைசிறந்த பந்துவீச்சாளர் என மோஹித் சர்மா கூறியுள்ளார். தில்லி கேபிடல்ஸ் அணி 5 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டி... மேலும் பார்க்க

மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்..! இந்திய அணியை வழிநடத்த ரசிகர்கள் கோரிக்கை!

ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுவரும் ஷ்ரேயாஸ் ஐயரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ‘மக்களின் கேப்டன்’ எனப் புகழ்ந்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் இந்திய அணிக்கும் ஷ்ரேயாஸை கேப்டனாக நியமிக்க வேண்... மேலும் பார்க்க