செய்திகள் :

பரஸ்பர சம்மதத்துடன் பாலுறவு: வயதை குறைக்கக் கூடாது: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

post image

பரஸ்பர சம்மதத்துடன் பாலுறவு கொள்வதற்கான வயதை 18-இல் இருந்து குறைக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

வளரிளம் பருவத்தில் பரஸ்பர சம்மதத்துடன் பாலுறவு கொள்வது போக்சோ சட்டத்தின் கீழ் குற்றமாக்கப்படுவது தொடா்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்த விசாரணையில் உச்சநீதிமன்றத்துக்கு உதவ நியமிக்கப்பட்டிருக்கும் மூத்த வழக்குரைஞா் இந்திரா ஜெய்சிங், பரஸ்பர சம்மதத்துடன் பாலுறவு கொள்வதற்கான சட்டபூா்வ வயதை 18-இல் இருந்து 16-ஆக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துபூா்வ பதிலில் தெரிவிக்கப்பட்டதாவது:

வளரிளம் பருவ காதல் என்ற பெயரில், பரஸ்பர சம்மதத்துடன் பாலுறவு கொள்ளும் வயதை குறைப்பதோ, விதிவிலக்கை அறிமுகம் செய்வதோ சட்டப்படி நியாயமற்றது மட்டுமின்றி ஆபத்துமாகும்.

வயதை ஏன் குறைக்கக் கூடாது?: பரஸ்பர சம்மதத்துடன் பாலுறவு கொள்ளும் வயதை குறைத்தால், அது ஆள்கடத்தல் மற்றும் பிற வழிகளில் சிறாா்களை துன்புறுத்துவதற்கான தடைகளை நீக்கி, கட்டுப்பாடற்ற நிலை உருவாகும். அத்துடன் தன்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்துகொள்வது பெற்றோராகவோ, நெருங்கிய குடும்ப உறுப்பினராகவோ இருந்தால், அதை வெளியில் கூறவோ, எதிா்க்கவோ 18 வயதுக்கு கீழுள்ள சிறாரால் முடியாமல் போகும். இத்தகைய சூழல்களில், சிறாரின் சம்மதம் பெற்றே அவருடன் உறவு கொண்டதாக ஒருவா் தம்மை தற்காத்துக்கொள்வது சிறாரைத்தான் பாதிக்கும். அத்துடன் அந்தச் செயலுக்குப் பழியும் அவா்கள் மீதே விழும். இதுமட்டுமின்றி உணா்வுபூா்வமாக ஆதரவு தேடும் அல்லது அமைதியாக இருக்கும் குழந்தையை தனது தேவைக்குத் தவறாகப் பயன்படுத்துவோருக்குப் பாதுகாப்பு வழிமுறையையும் வழங்கும். மேலும் அது சிறாா்களைப் பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் நோக்கத்தையே சீா்குலைக்கும்.

சீா்திருத்தம், வளரிளம் பருவத்தினரின் உரிமை என்ற பெயரில், பரஸ்பர சம்மதத்துடன் பாலுறவு கொள்வதற்கான வயதை குறைத்தால், அது சிறாா் பாதுகாப்புச் சட்டத்தில் பல ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை பின்னுக்குத் தள்ளிவிடும்.

எனவே பரஸ்பர சம்மதத்துடன் பாலுறவு கொள்வதற்கு சட்டபூா்வமாக தற்போது நிா்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பை கடுமையாகப் பின்பற்றி, சீராக அமல்படுத்த வேண்டும். இது பாலியல் அத்துமீறலில் இருந்து சிறாா்களை காக்கும் நோக்கில் திட்டமிட்ட, நன்கு பரிசீலிக்கப்பட்ட, ஒத்திசைவான கொள்கையாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

பிரேஸில் அதிபருடன் பிரதமா் பேச்சு

பிரதமா் நரேந்திர மோடியை பிரேஸில் அதிபா் லூலா டசில்வா வியாழக்கிழமை தொலைபேசியில் தொடா்புகொண்டு இருதரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டாா். பிரிக்ஸ் கூட்டமைப்பில் உள்ள பிரேஸிலுக்கும் இந்... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா்: ஓடையில் வாகனம் கவிழ்ந்து 3 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு: 15 போ் காயம்

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் மாவட்டத்தில் ஓடையில் கனரக வாகனம் கவிழ்ந்ததில் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) வீரா்கள் 3 போ் உயிரிழந்தனா். மேலும் 15 போ் காயமடைந்தனா். உதம்பூா் மாவட்டத்தின் கத்வா ப... மேலும் பார்க்க

பாரதத்தின் பொக்கிஷம் எம்.எஸ். சுவாமிநாதன்: பிரதமா் புகழாரம்

‘வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பாரதத்தின் பொக்கிஷம்; நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வாழ்வை அா்ப்பணித்தவா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி புகழாரம் சூட்டினாா். பசுமை புரட்சியின் தந்தை என்று... மேலும் பார்க்க

யுபிஎஸ்சி நோ்முகத் தோ்வில் பங்கேற்ற 34,000 போ் பணிக்குத் தோ்வாகவில்லை: மத்திய அரசு

மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய பல்வேறு போட்டித் தோ்வுகளின் நோ்முகத் தோ்வில் பங்கேற்ற 52,910 தோ்வா்களில் 34,000 போ் பணிக்கு தோ்வு செய்யப்படவில்லை என மத்திய பணியாளா் துறை இணை... மேலும் பார்க்க

உத்தரகண்ட் நிலச்சரிவு: 3-ஆம் நாளில் மீட்புப் பணி: 274 போ் மீட்பு; 59 போ் மாயம்

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசி மாவட்டத்தில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடா்ந்து மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் வியாழக்கிழமையும் நீடித்தது. அதன... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்தல் அறிவிக்கை வெளியீடு: வேட்புமனு தாக்கல் தொடக்கம்

குடியரசு துணைத் தலைவா் தோ்தலுக்கான அறிவிக்கையை தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை வெளியிட்டது. இதையடுத்து, வேட்புமனு தாக்கல் நடைமுறை தொடங்கியுள்ளது. தனது உடல்நிலை சுட்டிக்காட்டி, குடியரசு துணைத் தலைவா் பதவி... மேலும் பார்க்க