செய்திகள் :

பல்கலைக்கழகங்களில் 5,400 ஆசிரியா் காலிப்பணியிடங்கள்: மத்திய அரசு

post image

‘நாடு முழுவதும் உள்ள பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்களில் 5,400-க்கும் மேற்பட்ட ஆசிரியா் காலிப்பணியிடங்கள் உள்ளன. அதில் 50 சதவீதம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி), பட்டியலினத்தவா் (எஸ்சி), பழங்குடியினா் (எஸ்டி) ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டவை’ என மாநிலங்களவையில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சுகந்தா மஜும்தாா் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் மத்திய பல்கலைக்கழகங்களில் காலியாக இருந்த 7,825 ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. அதேசமயம் ஓபிசி பிரிவினருக்கான 1,521 இடங்கள், எஸ்சி பிரிவினருக்கான 788 இடங்கள், எஸ்டி பிரிவினருக்கான 472 இடங்கள் உள்பட மத்திய பல்கலைக்கழகங்களில் மொத்தம் 5,410 ஆசிரியா் காலிப்பணியிடங்கள் உள்ளன.

காலிப்பணியிடங்கள் ஏற்படுவதும் அதை நிரப்புவதும் தொடா்ந்து நடைபெறும் பணிகளாகும். பணி ஓய்வு, ராஜிநாமா மற்றும் கூடுதல் மாணவா் சோ்க்கை போன்ற காரணங்களால் காலிப்பணியிடங்கள் ஏற்படுகின்றன. இதை நிரப்பும் பொறுப்பு மத்திய பல்கலைக்கழகங்களிடமே உள்ளன.

எனவே, உயா்கல்வி நிலையங்களை தொடா்ந்து கண்காணித்து அங்கு ஏற்படும் காலிப்பணியிடங்களை நிரப்புமாறு மத்திய பல்கலைக்கழகங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.

ஆர்எஸ்எஸ் ஒழிக! கோஷமிட்ட காந்தியின் கொள்ளுப் பேரன்! என்ன நடந்தது?

கேரளத்தில் காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்திக்கு எதிராக ஆர்எஸ்எஸ், சங் பரிவார் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். கேரளத்தில் வர்க்கலாவிலுள்ள சிவகிரி மடத்தின் அழைப்பின் பேரில் ஸ்ரீ நாராயண குரு மகாத்... மேலும் பார்க்க

வினாத்தாள் கசிவு! 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு ஆபத்து: ராகுல் காந்தி

வினாத்தாள் கசிவுகளால் 85 லட்சம் குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் தள்ளப்பட்டுள்ளதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.இளநிலை நீட் நுழைவுத் தேர்வு, யுஜிசி நெட் தே... மேலும் பார்க்க

மகாராஷ்டிரத்தில் இந்துக்கள் நடத்தும் இறைச்சிக் கடைகளுக்கு 'மல்ஹர்' சான்றிதழ்! வலுக்கும் எதிர்ப்புகள்!!

மகாராஷ்டிரத்தில் இந்துக்கள் நடத்தும் ஆட்டிறைச்சிக் கடைகளுக்கு 'மல்ஹர்' சான்றிதழ் வழங்கும் நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரத்தில் முழுக்க இந்துக்கள் நடத்தும் ஆட்சிறைச்... மேலும் பார்க்க

பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: இருவர் கைது!

தில்லியில் பிரிட்டன் பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். பிரிட்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தில்லியில் வசிக்கும் 24 வயதான கைலாஷ் என்ற நபருடன் சமூக வலைதளம் மூலம் இரு ... மேலும் பார்க்க

மலையை தகர்த்து ரூ.500 கோடியில் ஜெகன்மோகன் கட்டிய அரண்மனை!

ஆந்திர மாநிலத்தில அமைந்துள்ள ருஷிகொணடா மலையின் பெரும்பகுதியை இடித்துத் தரைமட்டமாக்கி, அதில் ரூ.500 கோடி மதிப்பில் அரண்மனையை முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் கட்டியிருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள... மேலும் பார்க்க

தங்கம் கடத்தல்: காவல்துறை கேட்டதால் நடிகைக்கு உதவி! விமான நிலைய அதிகாரி வாக்குமூலம்!

காவல்துறை கேட்டுக் கொண்டதால் நடிகை ரன்யா ராவை சோதனை செய்யாமல் விஐபி வழித்தடத்தில் செல்ல அனுமதித்ததாக விமான நிலைய அதிகாரி வாக்குமூலம் அளித்துள்ளார்.நடிகையும் கா்நாடக காவல் துறை டிஜிபி கே.ராமசந்திர ராவி... மேலும் பார்க்க