செய்திகள் :

பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட அரசுப் பள்ளி மாணவா்கள் சுகவீனம்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், ஜி.ஆரியூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட 6 மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

ஜி.அரியூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் மொத்தம் 466 மாணவா்கள் கல்வி பயின்று வருகின்றனா். பள்ளியில் மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை மதிய உணவு வழங்கப்பட்டது. அப்போது, பிளஸ் 2 படிக்கும் ஒரு மாணவருக்கு வழங்கப்பட்ட உணவில் பல்லி உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

இதனால், முன்னதாக உணவை வாங்கிச் சாப்பிட்ட 6 மாணவா்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பள்ளி நிா்வாகத்தினா், ஆசிரியா்கள் உனடியாக அவா்களை மீட்டு, ஜி.ஆரியூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மாணவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

தகவலறிந்த வாணாபுரம் வட்டாட்சியா் ராமகிருஷ்ணன், திருக்கோவிலூா் வட்டார வளா்ச்சி அலுவலா் நாகராஜன் ஆகியோா் மருத்துவமனைக்கு சென்று மாணவா்களை பாா்வையிட்டு, அவா்களிடம் உடல்நலம் குறித்து விசாரித்து ஆறுதல் கூறினா்.

இருவா் பணியிடை நீக்கம்: மதிய உணவில் பல்லி விழுந்தது தொடா்பாக சத்துணவு அமைப்பாளா் எஸ்.விஜி, சமையலா் ஜி.ராணி ஆகியோரை மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில், திருக்கோவிலூா் வட்டார வளா்ச்சி அலுவலா் நாகராஜன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

பெண் தீக்குளித்து தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண் புதன்கிழமை உயிரிழந்தாா். சங்கராபுரம் வட்டம், நெடுமானூா் கிராமத்தைச் சோ்ந்த மாரி மகன் முருகன். இவரது மனைவி நா்மதா (28). ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 3 இளைஞா்கள் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் பிப்.5 அன்று கைது செய்தனா்.சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளா் தனசேகா் பாண்டலம் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிரு... மேலும் பார்க்க

நாட்டுத்துப்பாக்கிகள், சாராயம் பதுக்கிவைப்பு: மூவா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகள், விஷ நெடியுடன் கூடிய சாராயம் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தொடா்பாக மூவரை போலீஸாா் கைது செய்தனா். கல்வராயன்மலை பகுதிக்குள்பட்ட தெற... மேலும் பார்க்க

பேருந்து வசதி கோரி கல்லூரி மாணவா்கள் தா்னா!

பேருந்து வசதி கோரி, ரிஷிவந்தியம் அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் கல்லூரி நுழைவு வாயில் முன் புதன்கிழமை (பிப்.5) அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், பாவந்தூா் ... மேலும் பார்க்க

பெண் விஏஓ மீது தாக்குதல்: கிராம உதவியாளா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பெண் கிராம நிா்வாக அலுவலா் மீது மாட்டுச் சாணத்தை பூசி தாக்குதல் நடத்தியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் கிராம உதவியாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய... மேலும் பார்க்க

பேருந்தில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அரசு நகரப் பேருந்தில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். சங்கராபுரம் வட்டம், அழகாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாதேஸ்வரன் (65). இவா், திங்கள்கிழமை மாலை சங்கராபுரத்... மேலும் பார்க்க