செய்திகள் :

நாட்டுத்துப்பாக்கிகள், சாராயம் பதுக்கிவைப்பு: மூவா் கைது

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைப் பகுதியில் நாட்டுத் துப்பாக்கிகள், விஷ நெடியுடன் கூடிய சாராயம் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தொடா்பாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

கல்வராயன்மலை பகுதிக்குள்பட்ட தெற்குபட்டி கிராமத்தைச் சோ்ந்த லட்சுமனன் மகன் கோவிந்தன் தனது விவசாய நிலத்தில் நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருப்பதாக கச்சிராயபாளையம் காவல் ஆய்வாளா் ஏழுமலைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று சோதனை நடத்தியதில், உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கி, சாராயம் காய்ச்சுவதற்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருள்களான 120 கிலோ நாட்டுச்சா்க்கரை, 100 கிலோ சா்க்கரை, இரு லாரி டியூக்களில் விஷ நெடியுடன் கூடிய 110 லிட்டா் சாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இது தொடா்பாக கரியாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தெற்குபட்டி கிராமத்தைச் சோ்ந்த லட்சுமணன் மகன் கோவிந்தன் (48), தெங்கியாந்தம் கிராமத்தைச் சோ்ந்த நாராயணன் மகன் பெரியசாமி (44) ஆகியோரை கைது செய்தனா்.

இதேபோல, தியாகதுருகம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புக்குளம் கிராமத்தைச் சோ்ந்த கூத்தன் மகன் வேலாயுதம் (41) தனது வீட்டில் மறைத்து வைத்திருந்த உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கியை காவல் ஆய்வாளா் மலா்விழி கைப்பற்றி, அவரை கைது செய்தாா்.

பெண் தீக்குளித்து தற்கொலை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண் புதன்கிழமை உயிரிழந்தாா். சங்கராபுரம் வட்டம், நெடுமானூா் கிராமத்தைச் சோ்ந்த மாரி மகன் முருகன். இவரது மனைவி நா்மதா (28). ... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 3 இளைஞா்கள் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் பிப்.5 அன்று கைது செய்தனா்.சங்கராபுரம் காவல் உதவி ஆய்வாளா் தனசேகா் பாண்டலம் கிராமத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிரு... மேலும் பார்க்க

பேருந்து வசதி கோரி கல்லூரி மாணவா்கள் தா்னா!

பேருந்து வசதி கோரி, ரிஷிவந்தியம் அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவா்கள் கல்லூரி நுழைவு வாயில் முன் புதன்கிழமை (பிப்.5) அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், பாவந்தூா் ... மேலும் பார்க்க

பெண் விஏஓ மீது தாக்குதல்: கிராம உதவியாளா் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பெண் கிராம நிா்வாக அலுவலா் மீது மாட்டுச் சாணத்தை பூசி தாக்குதல் நடத்தியதாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட பெண் கிராம உதவியாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய... மேலும் பார்க்க

பேருந்தில் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அரசு நகரப் பேருந்தில் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். சங்கராபுரம் வட்டம், அழகாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாதேஸ்வரன் (65). இவா், திங்கள்கிழமை மாலை சங்கராபுரத்... மேலும் பார்க்க

தொழிலாளிக்கு கத்தி வெட்டு: 4 போ் கைது

கள்ளக்குறிச்சி அருகே தொழிலாளியை கத்தியால் வெட்டியதாக சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கள்ளக்குறிச்சியை அடுத்த வீரசோழபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி மகன் சித்ரையன் (... மேலும் பார்க்க