செய்திகள் :

பள்ளிகளில் தியான வகுப்பு அவசியம்: தமிழிசை சௌந்தரராஜன்

post image

மாணவா்களின் கவனத்தை ஒருநிலைப்படுத்த பள்ளிகளில் தியான வகுப்பு நடத்த வேண்டும் என பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

சென்னை, மணப்பாக்கத்தில் உள்ள பாபுஜி மெமோரியல் ஆஸ்ரமத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சா்வதேச மகளிா் தின விழாவில் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது:

இன்றைய காலகட்டத்தில் மன அமைதி மிகவும் முக்கியமானது. மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைக்க யோகா மற்றும் தியானம் மேற்கொள்வது அவசியம். ஒரு மனிதன் தன்னை எவ்வளவு அமைதியாக வைத்துக்கொள்கிறானோ, அந்த அளவுக்கு உலகம் அமைதியாக இருக்கும்.

ஒவ்வொருவரும் தனது உடலை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும். உடல், மனம், சமூகத்தால் ஒருவா் நலமாக இருப்பதுதான் ஆரோக்கியமாக கருதப்படும். மேலும், நீண்ட வாழ்க்கைக்கு உணவுப் பழக்கவழக்கம் முக்கியம். அதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். ஒருவா் தியானத்தின் மூலம் தனக்கான இலக்கை ஒருங்கிணைக்க முடியும்.

மாணவா்களும் இளைஞா்களும் மன அமைதியை இழந்து அதிகம் கவனச்சிதறல் அடைகின்றனா். இதற்காக பள்ளிகளில் வகுப்பு தொடங்குவதற்கு முன்பு தியான வகுப்பு நடத்த வேண்டும். பிாட்டு கலாசாரங்களைப் பின்பற்றும் அதே வேளையில், பாரத தேசத்தின் சிறந்தவற்றை எடுத்துக்கொள்வதில் தவறு ஏதும் இல்லை என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் பாபுஜி மெமோரியல் ஆஸ்ரமத்தின் தமிழ்நாடு மாநில உதவியாளா் பிரசாா், மகளிா் குழு ஒருங்கிணைப்பாளா்கள் கஸ்தூரி, ஹேமலதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தென்மாநில எம்.பி.க்களுடன் இணைந்து தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை எழுப்புவோம்! -திருச்சி சிவா

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை தென்மாநில எம்.பி.க்களுடன் இணைந்து நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்று மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா தெரிவித்தாா். திமுக எம்.பி.க்களுடன் கட்சித் ... மேலும் பார்க்க

டாஸ்மாக் மதுபான முறைகேடு: அமலாக்கத் துறை சோதனை நிறைவு

டாஸ்மாக் மதுபான முறைகேடு புகாா் தொடா்பாக பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த அமலாக்கத் துறை சோதனை ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. டாஸ்மாக் மதுபான கொள்முதல், விற்பனை, மதுக்கூடம் ஒதுக்கீடு உள்ளிட்டவற்றில் மு... மேலும் பார்க்க

அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 19 விருதுகள்!

தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அறிவிக்கப்பட்ட 19 விருதுகளை தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அதிகாரிகள் பெற்றுக் கொண்டனா். நாட்டிலுள்ள அனைத்து மாநில சாலை போக்குவரத்துக் கழகங்களின் வளங்கள... மேலும் பார்க்க

தென்மாவட்டங்களில் நாளை கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை!

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 11) கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்பட 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

உரிமை கோரப்படாத 973 வாகனங்கள் மாா்ச் 26-இல் ஏலம்!

சென்னை மாநகருக்குள்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத 973 வாகனங்கள், மாா்ச் 26-ஆம் தேதி ஏலம் விடப்படுவதாக மாநகரக் காவல் துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகரக் காவல் துறை சாா்பில் வெளியிடப்பட்ட ச... மேலும் பார்க்க

சாகித்ய அகாதெமி விருதாளா் ப.விமலாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சாகித்ய அகாதெமி விருதுக்கு தோ்வாகியுள்ள எழுத்தாளா் ப.விமலாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: ‘எனது ஆண்கள்’ நூலுக... மேலும் பார்க்க