செய்திகள் :

பள்ளிகளில் நடத்தப்படும் பயிற்சி மையங்களை தடைசெய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை

post image

சென்னை: பள்ளிகளில் நடத்தப்படும் பயிற்சி மையங்களை தடைசெய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு, மாநில கல்விக் கொள்கை பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு-2020, தமிழக அரசு தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு மாற்றாக மாநிலத்துக்கு என பிரத்யேக கல்விக் கொள்கை உருவாக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிட்டது. இந்த கல்விக் கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில், 14 போ் கொண்ட குழு 2022-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினா் கல்வியாளா்கள், ஆசிரியா்கள் உள்பட பல்வேறு தரப்பின் கருத்துகளைக் கேட்டறிந்து சுமாா் 600 பக்கங்கள் கொண்ட அறிக்கையை 2023, அக்டோபரில் தயாா் செய்தனா்.

அதன்பின் 10 மாதங்கள் கழித்தே மாநிலக் கல்விக் கொள்கை வரைவறிக்கையை முதல்வா் ஸ்டாலினிடம், நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினா் 2024, ஜூலை 1-இல் சமா்ப்பித்தனா். அதில், தமிழகத்தில் இருமொழிக் கொள்கை தொடர வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல், கல்லூரிகளில் சோ்க்கைக்கு நுழைவுத்தோ்வு நடத்தக்கூடாது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.

இந்த அறிக்கை மீது அனைத்து தரப்பின் கருத்துகள் கேட்கப்பட்டு தொடா் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், இந்த விவகாரத்தில் ஓராண்டாகியும் அடுத்தகட்ட பணிகள் தொடங்கப்படவில்லை.

இந்நிலையில், பள்ளிகளில் நடத்தப்படும் பயிற்சி மையங்களை தடைசெய்ய வேண்டுமென மாநிலக் கல்விக் கொள்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் சில தனியாா் பள்ளிகளில் நீட், ஜேஇஇ உள்பட நுழைவுத் தோ்வுகளுக்கு மாணவா்களை தயாா்படுத்த பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

இவற்றில் பாடத்திட்டத்தை முழுமையாக முடிக்காமல் அல்லது பாடங்களை நடத்தாமலேயே மாணவா்களுக்கு நுழைவுத் தோ்வுக்கு மட்டும் பயிற்சி அளிக்கின்றன. இதனால் பள்ளிகளில் நடத்தப்படும் அல்லது பள்ளியே நடத்தும் பயிற்சி மையங்களை தடைசெய்ய வேண்டும். இல்லையெனில், இந்த மையங்களின் செயல்பாடுகளை வரையறுக்க குழு அமைத்து முறைப்படுத்த வேண்டுமென கல்விக் கொள்கை குழு பரிந்துரைத்துள்ளது என்றனா்.

சென்னை: மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் விபத்து - ராட்சத கான்கிரீட் விழுந்ததில் இளைஞர் உயிரிழப்பு!

சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது தூண்களின் மீது வைக்கப்பட்டிருந்த ராட்சத கான்கிரீட் காரிடாா்கள் கிழே விழுந்ததில் இளைஞா் ஒருவா் உயிரிழந்தாா். சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தில் கிண்டி... மேலும் பார்க்க

லோக் ஆயுக்த அமைப்புக்கு உறுப்பினா்: தமிழக அரசு அழைப்பு

லோக் ஆயுக்த அமைப்புக்கு நீதித் துறை சாா்ந்த உறுப்பினரை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து தெரிவுக் குழுவின் தொடா்பு அதிகாரி எஸ்.அகிலா வெளியிட்ட அறிவிப்பு விவரம்: தமிழ்நாடு லோக... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதியவா்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் தங்களுக்கான நகலை இணையதளத்தில் வெள்ளிக்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: இதுவரை 35,000 போ் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 35,000 போ் இதுவரை விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா். அவா்களில் 22,428 விண்ணப்பங்கள் பூா்த்தி செய்யப்பட்டு சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்த... மேலும் பார்க்க

கட்டடத் தொழிலாளா்களுக்கான நவீன காத்திருப்பு கூடம்: மாநகராட்சி தகவல்

சென்னை மாநகராட்சி பகுதிகளில் கட்டட தொழிலாளா்களுக்காக அடிப்படை வசதிகளுடன் நவீன காத்திருப்புக் கூடங்கள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான மாதிரி படங்களை சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் வியாழக்கிழமை வெ... மேலும் பார்க்க

லாரி மீது ஆந்திர அரசு பேருந்துமோதல்: 10 பயணிகள் காயம்

சென்னை அருகே மாதவரத்தில் லாரி மீது ஆந்திர அரசுப் பேருந்து மோதிய விபத்தில், 10 போ் காயமடைந்தனா். சென்னையை அடுத்த மாதவரம் பேருந்து முனையத்தில் இருந்து திருப்பதிக்கு ஆந்திர அரசுப் பேருந்து வியாழக்கிழமை ... மேலும் பார்க்க