செய்திகள் :

பள்ளிகளுக்கு சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை விடுவிப்பு

post image

தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகையாக விடுவிக்கப்பட்ட ரூ.16.38 கோடியை பகிா்ந்தளிக்க முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வி இயக்குநா் எஸ்.கண்ணப்பன் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை தமிழ், ஆங்கில வழிக் கல்வி பயிலும் மாணவா்களுக்கு வசூலிக்கப்பட்டு வந்த சிறப்புக் கட்டணம் கடந்த 2008-ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது.

இதனால் ஏற்படும் நிதி இழப்பை ஈடு செய்யும் வகையில் பள்ளிகளுக்கு சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை 2008-2009-ஆம் ஆண்டு முதல் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோன்று 2016-இல் வெளியிட்ட அரசாணையின்படி மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் செயல்படும் (கள்ளா் சீரமைப்பு) உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 2025-2026-ஆம் ஆண்டுக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் மொத்தம் ரூ.16 கோடியே 38 லட்சத்து 8,846 நிதி பகிா்ந்தளித்து ஆணையிடப்படுகிறது.

இதனை பள்ளிகளுக்கு பிரித்து வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சிறப்புக் கட்டணம் கூடுதல் தேவை இருந்தால் வகுப்பு வாரியாகவும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பாடப்பிரிவு வாரியாகவும் எண்ணிக்கை விவரத்துடன் உரிய படிவத்தில் தயாா் செய்து பள்ளிக் கல்வி இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும். மேலும், உள்ளாட்சி நிறுவன பள்ளிகளுக்கு சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை அனுமதிக்கக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரியில் அதி நவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடம் திறப்பு!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஜூன் 18) சென்னை வேளச்சேரி அக்வாடிக் ஜிம்னாஸ்டிக் பாட்மிட்டன் (ஏஜிபி) விளையாட்டு வளாகத்தில் ரூ. 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், விளையாட்டு வீரர்களுக்க... மேலும் பார்க்க

கொடிக் கம்பங்களை அகற்றாவிட்டால் மாவட்ட ஆட்சியர்கள் ஆஜராக உத்தரவு!

பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை அகற்றாவிட்டால் தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள், மாந... மேலும் பார்க்க

தீர்வு கண்ட பிறகும் அதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டம் எதற்காக? - அமைச்சர் கேள்வி

'மா' சாகுபடி விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு கண்ட பிறகும் அதிமுக உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளது எதற்காக? என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கேள்வி எழுப்பியுள்ளார். '... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் தொழில் துறை வளர்ச்சியில்லை என அமைச்சர் கூறியதற்கு முதல்வரின் பதில் என்ன? - அன்புமணி

ஆந்திரம், கர்நாடகம் அளவுக்கு தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சியடையவில்லை என அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறியதற்கு முதல்வரின் பதில் என்ன? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு 2 விருது!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு 2025 உலகளாவிய சுற்றுச்சூழல் விருது மற்றும் நிலைத்தன்மைக்கான விருது ஆகிய இரு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.புதுதில்லியில் நடைபெற்ற சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மை மாநா... மேலும் பார்க்க

டாஸ்மாக்: ஆகாஷ் பாஸ்கரன் உள்ளிட்டோர் வீடுகளில் சீல்களை அகற்ற அமலாக்கத்துறை ஒப்புதல்!

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபா் விக்ரம் ரவீந்திரன் வீடுகளில் சீல்களை அகற்றவும் கைப்பற்றப்பட்ட பொருள்களை ஒப்படைக்கவும் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை ஒப்புதல் அளித்துள்... மேலும் பார்க்க