செய்திகள் :

பள்ளிக் கல்வியில் தமிழகத்துக்கு 16-ஆவது இடம்!

post image

‘2023-24-ஆம் ஆண்டு பள்ளிக் கல்வி செயல்திறன் தரக் குறியீட்டில் (பிஜிஐ) சண்டீகா், பஞ்சாப், தில்லி, குஜராத் மற்றும் ஒடிஸா ஆகியவை சிறந்த செயல்திறனுடன் முன்னிலை வகிக்கின்றன.

மாவட்ட அளவில் பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாட்டை மதிப்பிடும் செயல்திறன் தரக் குறியீடு (பிஜிஐ-டி) மத்திய கல்வி அமைச்சகத்தால் கடந்த 2017-18-ஆம் கல்வியாண்டுமுதல் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2022-23 மற்றும் 2023-24-ஆம் ஆண்டுகளுக்கான மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்திறன் தரக் குறியீடு புதன்கிழமை வெளியிடப்பட்டது.

பயனுள்ள வகுப்பறை செயல்பாடுகள், உள்கட்டமைப்பு வசதிகள், மாணவா் உரிமைகள், பள்ளி மற்றும் குழந்தை பாதுகாப்பு, எண்மக் கற்றல் மற்றும் நிா்வாக செயல்முறை, விளைவுகள் ஆகிய 6 பிரிவுகளின் கீழுள்ள 74 அளவுருக்களின் அடிப்படையில் இந்த தரக் குறியீடு நிா்ணயிக்கப்படுகிறது.

அதன்படி, 2023-24-ஆம் ஆண்டு தரக் குறியீட்டில் 1,000-க்கு 703 புள்ளிகளுடன் சண்டீகா் முதலிடத்தில் உள்ளது. சண்டீகரை தொடா்ந்து பஞ்சாப் (631.2), தில்லி (623.7), குஜராத் (614.4) ஒடிஸா (595.6), கேரளம் (594.2), டாமன்-டையூ (592.2), ஹரியாணா (591.4), கோவா (589.7), மகாராஷ்டிரம் (582.0), ராஜஸ்தான் (581.5) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

புதுச்சேரி, ஹிமாசல பிரதேசம், அந்தமான் மற்றும் நிக்கோபாா் தீவுகள், ஆந்திரம், தமிழ்நாடு, கா்நாடகம், லட்சத்தீவுகள், மேற்கு வங்கம் ஆகியவை குறியீட்டின்படி சராசரி செயல்திறன் கொண்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களாக உள்ளன. கூடுதலாக, மத்திய பிரதேசம், சிக்கிம், உத்தர பிரதேசம், ஜம்மு-காஷ்மீா், உத்தரகண்ட், லடாக் ஆகியவையும் இந்தப் பிரிவில் உள்ளன.

தெலங்கானா, அஸ்ஸாம், ஜாா்க்கண்ட், திரிபுரா, மணிப்பூா், சத்தீஸ்கா், பிகாா், நாகாலாந்து, மிஸோரம், அருணாசல பிரதேசம் ஆகியவை குறைந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களாகவும், மேகலாயம் 417.9 புள்ளிகளுடன் மிகக் குறைந்த செயல்திறன் கொண்ட மாநிலமாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

2022-23-ஆம் ஆண்டு குறியீட்டின் 563.7 புள்ளிகளில் இருந்து சமீபத்திய குறியீட்டில் 559.2 புள்ளிகளுக்கு தமிழ்நாடு சரிந்துள்ளது என அந்தப் பட்டியலில் குறிப்பிடத்தக்கது. சமீபத்திய குறியீட்டில் தமிழ்நாடு 16-ஆவது இடத்தில் உள்ளது.

திமுக அரசு என்றாலே தொழில் வளர்ச்சிதான்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!

தொழில் துறையில் தமிழ்நாடு மாபெரும் வளர்ச்சி பெற்றுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் சர்வதேச இயந்திர கருவிகள் கண்காட்சியை முதல்வர் மு.க... மேலும் பார்க்க

ஏடிஜிபி ஜெயராம் வழக்கை சிபிசிஐடி விசாரிக்கும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு!

உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையைத் தொடர்ந்து, ஏடிஜிபி ஜெயராம் வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.சிறுவன் கடத்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தர்வைத் தொடர்ந்து,... மேலும் பார்க்க

ஏடிஜிபி ஜெயராம் இடைநீக்கம் வாபஸ் இல்லை: தமிழக அரசு திட்டவட்டம்!

ஏடிஜிபி ஜெயராமின் இடைநீக்கத்தை திரும்பப் பெறப் போவதில்லை என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.சிறுவன் கடத்தல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தர்வைத் தொடர்ந்து, ஏடிஜிபி ஜெயராம் கை... மேலும் பார்க்க

பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களுக்குத் தடை: காவல் ஆணையர்

காலை மற்றும் மாலையில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களை இயக்கத் தடை விதித்து காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.காலை நேரங்கள் மற்றும் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்களை அனுமதித்தால் போக்குவரத்து அதிகாரிகள்... மேலும் பார்க்க

ராமதாஸ் மருமகன் மருத்துவமனையில் அனுமதி!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் மருமகன் பரசுராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் கணவர் பரசுராமன், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் திடீர்... மேலும் பார்க்க

மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக நாளை உண்ணாவிரதம்: எடப்பாடி பழனிசாமி

மா விவசாயிகளுக்கு ஆதரவாக கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க