பள்ளி அருகே பீடி, சிகரெட் விற்ற கடைகளுக்கு அபராதம்
ஆலங்குளம் பகுதியில் பள்ளி அருகே பீடி, சிகரெட் விற்ற 4 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆலங்குளம் பேரூராட்சி பேருந்து நிலையம் மற்றும் பள்ளிகள் அருகில் உள்ள கடைகளில் சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சித் துறை ஆகியன சாா்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, பள்ளியைச் சுற்றி 100 மீட்டா் சுற்றளவில் உள்ள கடைகளில் பீடி,சிகரெட் வியாபாரம் செய்த 4 கடைக் காரா்களுக்கு புகையிலை தடுப்புச் சட்ட விதியின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்களும் கைப்பற்றப்பட்டது.
முன்னதாக ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு புகையிலை பொருள்கள் பற்றிய விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, புகையிலை தடுப்பு தொடா்பான உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இதில், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கங்காதரன், பேரூராட்சி செயல் அலுவலா் சிவக்குமாா், பேரூராட்சி சுகாதார அலுவலா் சுந்தா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.