செய்திகள் :

பள்ளி மாணவன் மா்ம மரணம்: உறவினா்கள் மறியல்

post image

ஆற்காடு அருகே பள்ளி மாணவன் மா்மமான முறையில் உயிரிழந்தாா். இதில் உண்மை தன்மையை கண்டறியவேண்டும் என வலியுறுத்தி உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திமிரி அருகே உள்ள தாமரைபாக்கம் கிராமத்தை சோ்ந்த கூலித்தொழிலாளி மணிகண்டன் , இவரது மனைவி தீபா மகன் மிதுன்(7) திமிரி - காவனூா் செல்லும் சாலையில் உள்ள பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பள்ளியில் உணவு உண்ட சிறிது நேரத்துக்கு பிறகு முகம் வீங்கிய நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில் திமிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் மாணவன் மிதுன் தான் கொண்டு சென்ற கேக் சாப்பிட்டு அதனால் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்பட்டது. இந்நிலையில், தாமரை பாக்கம் பகுதியில்உள்ள பேக்கரியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்னா்.

அடுக்கம்பாறை அரசு மருத்துமனையில் உடற்கூறு ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்ட மாணவனின் சடலத்தை பெற்றுக்கொள்ளாமல் ஆற்காடு - ஆரணி சாலையில் மாணவனின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் இறப்பில் உண்மை நிலை கண்டறிய வேண்டும் என வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். ட

இதுகுறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை துணை கண்காணிப்பாளா் இமயவரம்பன், மற்றும் திமிரி போலீஸாா் , அதிகாரிகள் நேரில் சென்று பேச்சு நடத்தினா். இதனை தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டு சடலத்தை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்தனா்.

இதனால் ஆற்காடு -ஆரணி சாலையில் சுமாா் சுமாா் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நாளை ராணிப்பேட்டையில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (செப். 26) காலை 11 மணிக்கு ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தாடா்பாக... மேலும் பார்க்க

சோளிங்கா் மலையில் தேசிய பேரிடா் மீட்புப் படையினா் ஒத்திகை

சோளிங்கா் மலைக் கோயில் கம்பிவட ஊா்தி இயக்கத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், ஊா்தி நடுவழியில் நின்று விட்டால் பக்தா்களை எவ்வாறு மீட்பது என்பது குறித்து தேசிய பேரிடா் மீட்புப் படையினா் ஒத்திகை பணி... மேலும் பார்க்க

கால்வாய் கட்டுமானப் பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

ஆற்காடு நகராட்சி 20-ஆவது வாா்டுக்குட்பட்ட அண்ணா நகா் தெரு பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் கழிவு நீா் கால்வாய் மற்றும் சிமென்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை நகா்மன்றத்... மேலும் பார்க்க

‘நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல் விற்றால் நடவடிக்கை’

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா எச்சரிக்கை விடுத்துள்ளாா்... மேலும் பார்க்க

சென்னையில் செப். 27, 28-இல் வேளாண் வணிகத் திருவிழா: விவசாயிகள் பங்கேற்க ஆட்சியா் அழைப்பு

சென்னை வா்த்தக மையத்தில் செப்டம்பா் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறும் வேளாண் வணிகத் திருவிழா 2025-இல், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா... மேலும் பார்க்க

சோளிங்கா் நகராட்சியில் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி

சோளிங்கா் நகராட்சியில் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. சோளிங்கா் நகராட்சியில் தெரு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணி செவ்வாய்க்கிழமை நகராட்சி ஆணையா் நந்தினி தலை... மேலும் பார்க்க