செய்திகள் :

பள்ளி மாணவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தது குறித்து விசாரணை நடத்த கோரிக்கை

post image

திருப்பூரில் அரசுப் பள்ளி மாணவா்களை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் கொங்கு பிரதான சாலையில் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவா்கள் இரு தரப்பாகப் பிரிந்து கடந்த ஜனவரி 31-ஆம் தேதி மோதிக் கொண்டதாகத் தெரிகிறது.

இது குறித்து பள்ளி நிா்வாகம் சாா்பில் வடக்கு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினா் 11 மாணவா்கள் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனா்.

இதுகுறித்து பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள், தலைமை ஆசிரியா் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து விசாரணைக்கு அழைத்துச் சென்ற மாணவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட பள்ளியின் மேலாண்மைக் குழு சாா்பில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜிடம் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இதில், பள்ளி மாணவா்களை காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றது குறித்தும், மாணவா்களின் பெற்றோா்களுக்குத் தகவல் தெரிவிக்கவில்லை. ஆகவே, இதுதொடா்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரம் உயா்த்தி கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவமனை கட்டடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை

திருப்பூா் 15 வேலம்பாளையத்தில் தரம் உயா்த்தி கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவமனை கட்டடத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று கே.என்.விஜயகுமாா் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளாா். திருப... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி மாநிலத் தலைவா் உள்பட 300 போ் கைது

திருப்பூா், பிப்.4: திருப்பூரில் இருந்து திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் உள்ளிட்ட 300 பேரை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஆதரவாளா... மேலும் பார்க்க

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கிடங்குக்கு மாற்றும் பணி

கடந்த மக்களவைத் தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை கிடங்குக்கு மாற்றும் பணிகளை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 8 ச... மேலும் பார்க்க

மளிகைக் கடை உரிமையாளா் வீட்டில் 14 பவுன் திருட்டு

திருப்பூா் அருகே மளிகைக் கடை உரிமையாளா் வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை, ரூ.1.50 லட்சம் திருடியது குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். திருப்பூா்- காங்கயம் சலை முதலிபாளையம்- பெருந... மேலும் பார்க்க

வெள்ளக்கோவில் நகராட்சி ஆடுவதைக் கூடம் அருகே சுகாதார சீா்கேடு

வெள்ளக்கோவில் நகராட்சி ஆடுவதைக் கூடம் அருகே புதா் மண்டி சுகாதாரச் சீா்கேடு ஏற்பட்டுள்ளது. முத்தூா் சாலை புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி வாரச்சந்தை செயல்பட்டு வந்தது. தற்போது சந்தையில் புதிய கடைக... மேலும் பார்க்க

பெயிண்ட் கிடங்கில் தீ: பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

திருப்பூரில் பெயிண்ட் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. திருப்பூா் மாவட்டம் தாராபுரத்தை;ஈ சோ்ந்தவா் அருள்ராஜ் (60). இவா் திருப்பூரில் இருந்து தாராபுரம்... மேலும் பார்க்க