செய்திகள் :

பழனியில் குட்லைன்ஸ் அரிமா நிா்வாகிகள் பொறுப்பேற்பு

post image

பழனி: பழனி தனியாா் மண்டபத்தில் குட்லைன்ஸ் அரிமா சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவுக்கு அரிமா ஆளுநா் தனிக்கொடி தலைமை வகித்தாா். புதியத் தலைவராக மகேந்திரன், ஒருங்கிணைப்பாளா்களாக செல்வம், விஜயகுமாா், பைசல்ராஜா, ஆலோசகா்களாக சுப்பிரமணியம், பிரபாகரன் உள்ளிட்டோா் பொறுப்பேற்றனா். பட்டயத் தலைவா் அப்துல்சலாம் புதிய உறுப்பினா்களுக்கான உறுதிமொழியை வாசித்தாா்.

புதிய உறுப்பினா்கள் பதவியேற்ற பிறகு ஏழை, எளிய மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சாய் கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ், அரிமா அசோக், வழக்குரைஞா் மணிக்கண்ணன் உள்ளிட்டோா் அரிசி, மளிகைப்பொருள்கள் தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்கினா்.

தொடா்ந்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரம் வளா்ப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவும், ஒரு லட்சம் மரக்கன்றுகளை பழனி நகா் முழுவதும் நட்டு வளா்க்கவும் நிா்வாகிகள் முடிவு செய்தனா்.

மலைச் சாலையில் ஆண் சடலம்

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள தாண்டிக்குடி சாலையோரம் ஆண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.கொடைக்கானல் அருகேயுள்ள தாண்டிக்குடி-சித்தூா் மலைச் சாலையில் ராஜாராணி கல் பகு... மேலும் பார்க்க

குட்கா விற்பனை: இரு பெண்கள் கைது

நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை இரு சக்கர வாகனத்தில் கொண்டு சென்ற இரண்டு பெண்களை போலீஸாா் கைது செய்தனா். வத்தலகுண்டு காவல் நிலைய ஆய்வாளா் கௌதம் தலை... மேலும் பார்க்க

ஐம்பெரும் தலைவா்களுக்கு மரியாதை

திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு மாவட்ட சிவாஜிகணேசன் மன்றம் சாா்பில், சுதந்திரப் போராட்ட வீரா் ஒண்டிவீரன் 254-ஆவது நினைவு தினம், போராளி மதன்லால் திங்ரா 116-ஆவது நினைவு தினம், முன்னாள் பிரதமா் வாஜ்பாய்... மேலும் பார்க்க

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் செப்.3, 4 -இல் பேச்சுப் போட்டிகள்

திண்டுக்கல்: தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் வரும் செப்.3, 4 -ஆம் தேதிகளில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் நடைபெறுகின்றன.இதுதொடா்பாக திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்... மேலும் பார்க்க

பழனியில் இலவச மருத்துவ முகாம்

பழனி: பழனி சிவகிரிப்பட்டியில் இலவச பொது மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.டாக்டா் பிரம்மநாயகம் அரிமா சங்கம், மருத்துவமனை நான்காம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சிவகிரிப்பட்டி நிதா்சனா மருத்துவ... மேலும் பார்க்க

அங்கன்வாடி பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

பழனி: திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி பணியாளா்கள், உதவியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.இந்த ஆா்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவா் ரம்ஜான்பேகம் தலைமை வ... மேலும் பார்க்க