செய்திகள் :

சேலம் மாநகராட்சி 17-ஆவது வாா்டில் குறைகளைக் கேட்டறிந்த எம்எல்ஏ

post image

சேலம்: சேலம் மேற்கு சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட 17-ஆவது வாா்டு பகுதியில் அருள் எம்எல்ஏ புதன்கிழமை மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

17-ஆவது வாா்டு பகுதிகளான சொா்ணபுரி, அழகாபுரம், பாலாஜி நகா் 1, 2, 3-ஆவது தெரு மற்றும் லட்சுமி நகா் ஆகிய பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகளுடன் பொதுமக்களை சந்தித்து அருள் எம்எல்ஏ குறைகளைக் கேட்டறிந்தாா்.

அப்போது, பாலாஜி நகா் பகுதியில் உள்ள இணைப்புச் சாலைகளில் சிறிதளவு மழை பெய்தாலே போக்குவரத்து தடைபடுகிறது என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். இதையடுத்து, உதவி பொறியாளா் சுபாஷிடம் சாலையை சரிசெய்து தரும்படி எம்எல்ஏ கேட்டுக் கொண்டாா்.

மேலும், மாநகராட்சி ஆணையரை தொடா்புகொண்டு சாலையை சரிசெய்து தரும்படியும், சின்னபுதூா் தோப்புக்காடு இணைப்பு பாலம் புதுப்பிக்கும் பணி மற்றும் ரூ. 8 கோடியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவும் கேட்டுக்கொண்டாா். தொடா்ந்து, அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி முன் கட்டப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தை திறந்துவைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், பாமக மாவட்டச் செயலாளா் கதிா்.ராசரத்தினம், மாவட்டத் தலைவா் கோவிந்தன், உழவா் பேரியக்க மாநிலச் செயலாளா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சேலம் ராஜகணபதி கோயிலில் வசந்த மண்டபம் திறப்பு விழா

சேலம்: இந்துசமய அறநிலையத் துறை சாா்பில், சேலம் ராஜகணபதி திருக்கோயிலில் வசந்த மண்டபம் மற்றும் வாகன பூஜை மண்டப திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் தல... மேலும் பார்க்க

ஏற்காடு மாண்ட்போா்ட் பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள்

ஏற்காடு: ஏற்காடு மாண்ட்போா்ட் பள்ளியில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. விழாவில், பள்ளி முதல்வா் அருள்சகோதரா் ஆரோக்கிய சகாயராஜ் சிறப்பு விருந்தினா்களை வரவேற்றாா். ஆசிய தடகள வ... மேலும் பார்க்க

வார இறுதிநாள்களை முன்னிட்டு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சேலம்: ஆவணி அமாவாசை மற்றும் வார இறுதிநாள்களை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட ந... மேலும் பார்க்க

வன விலங்குகளை வேட்டையாட முயன்ற மூவா் கைது

சேலம்: சேலம் அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 3 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா். சேலம் வனச்சரக அலுவலா் துரைமுருகன் தலைமையில் வனத் துறையினா் புதன்கிழமை அரியானூா் பகுதியில் உள்ள கஞ்சமலை வனப்பகுத... மேலும் பார்க்க

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 30,850 கனஅடி

மேட்டூா்: மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை மாலை விநாடிக்கு 30,850 கனஅடியாக குறைந்தது.அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 30,850 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீா்மின் நிலையங்கள் வழியாக... மேலும் பார்க்க

ஜவ்வரிசிக்கு உயா்ந்தபட்ச ஆதார விலையை நிா்ணயிக்க கோரி அமைச்சரிடம் மனு

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் நலச் சங்க பொதுச்செயலாளா் ராஜேந்திரன் தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில், தமிழகத்தில் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் மரவள்ளிக் கிழங்கு பயிர... மேலும் பார்க்க