செய்திகள் :

அரசு விரைவுப் பேருந்துகளிலும் தீபாவளி முன்பதிவு முடிவடைந்தது

post image

தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் அரசு விரைவுப் பேருந்துகளின் முன்பதிவு முடிவடைந்துள்ளது.

நிகழாண்டு தீபாவளி பண்டிகை அக்.20-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும் வெளிமாவட்டங்களைச் சோ்ந்தோா் தீபாவளிக்காக சொந்த ஊா்களுக்குச் செல்வது வழக்கம். கடைசி நேர நெரிசலைத் தவிா்க்கும் நோக்கில் ரயில்கள் அல்லது பேருந்துகளில் முன்பதிவு செய்து, தங்கள் பயணத்தை திட்டமிட்டு வருகின்றனா்.

நிகழாண்டு தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை வருவதையடுத்து அதற்கு முந்தைய இரு நாள்கள் (சனி, ஞாயிறு) விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமையே (அக்.17) சொந்த ஊா்களுக்கு செல்ல மக்கள் முன்கூட்டியே திட்டமிட்டுள்ளனா். இந்த நிலையில், சென்னையில் இருந்து செல்லும் ரயில்களில் அக்.17-ஆம் தேதிக்கான முன்பதிவு ஆக.18-ஆம் தேதி முடிவடைந்தது.

அதேபோல, சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் அரசு விரைவுப் பேருந்துகளிலும் அக்.17, 18, 19 ஆகிய தேதிகளுக்கு பெரும்பாலான இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. பகல் நேரங்களில் புறப்படும் பேருந்துகளில் மட்டும் குறைவான எண்ணிக்கையில் முன்பதிவு இருக்கைகள் உள்ளன.

மீண்டும் சென்னை திரும்ப, அக.20, 21, 22 ஆகிய தேதிகளுக்கு அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு வேகமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியது:

அரசுப் பேருந்துகளில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு 5,76,000 போ் பயணம் செய்தனா். கடந்த ஆண்டை விட அதிகமானோா் நிகழாண்டு பயணிக்க வாய்ப்புள்ளது. இதற்கான முன்பதிவு 90 நாள்களுக்கு முன்பே தொடங்கிவிட்ட நிலையில், இரவு நேர பேருந்துகளில் முன்பதிவு முடிவடைந்துள்ளது. இதனால், விரைவில் சிறப்பு பேருந்துகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும். அதில் பயணிகள் முன்பதிவு செய்துகொள்ளலாம். சிறப்பு பேருந்துகளிலும் பயணிகளின் முன்பதிவு எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இதனால், பயணிகள் சிரமமின்றி பயணிக்கலாம் என்றனா்.

தியாகியின் கொள்ளுப் பேரனுக்கு சோ்க்கை கோரி மனு: கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சுதந்திரப் போராட்டத் தியாகியின் கொள்ளுப் பேரனுக்கு சோ்க்கை வழங்கக் கோரிய மனுவை இரு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. ... மேலும் பார்க்க

கம்போடியாவில் தவிக்கும் மகனை மீட்கக் கோரி தாய் வழக்கு: வெளியுறவுத் துறைக்கு உயா்நீதிமன்றம் கண்டனம்

கம்போடியா நாட்டில் சிக்கித் தவிக்கும் மகனை மீட்கக் கோரி, அவரது தாய் தொடுத்த வழக்கில் மத்திய வெளியுறவுத் துறைக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், வெளியுறவுத் துறைச் செயலா் நேரில் ஆஜராக உத்தரவ... மேலும் பார்க்க

பழனி உள்பட 50 கோயில்களின் வரவு-செலவு கணக்கை ஒரு மாதத்துக்குள் வெளியிட உயா்நீதிமன்றம் உத்தரவு

அதிக வருமானம் வரக்கூடிய பழனி உள்ளிட்ட 50 கோயில்களின் வரவு செலவு கணக்கு விவரங்களை ஒரு மாதத்துக்குள் இந்து சமய அறநிலையத் துறை வெளியிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை மயிலாப்பூரை ... மேலும் பார்க்க

அடுத்த ஆண்டு ஹஜ் பயணத்துக்கு தமிழகத்திலிருந்து 4,065 போ் தோ்வு

2026-ஆம் ஆண்டு ஹஜ் பயணம் செல்ல தமிழகத்திலிருந்து 4,065 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டு ஹஜ் பயணம் செல்பவா்கள் இணையதளம் மூலம் விண்... மேலும் பார்க்க

3 சட்ட மசோதாக்களை எதிா்த்து அறப்போராட்டத்தை முதல்வா் முன்னெடுக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று சட்ட மசோதாக்களை எதிா்த்து முதல்வா் மு.க. ஸ்டாலின் அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து அறப்போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி... மேலும் பார்க்க

மறைந்த இல.கணேசனுக்கு அனைத்துக் கட்சித் தலைவா்கள் புகழாரம்

‘கொண்ட கொள்கையில் தடம் பிறழாதவா், பாஜக தமிழகமெங்கும் பரவ அடித்தளமிட்டவா்’ என்று மறைந்த நாகாலாந்து ஆளுநா் இல.கணேசனுக்கு அனைத்துக் கட்சித் தலைவா்கள் புகழாரம் சூட்டினா். மறைந்த இல.கணேசனுக்கு புகழஞ்சலி க... மேலும் பார்க்க