செய்திகள் :

அடுத்த ஆண்டு ஹஜ் பயணத்துக்கு தமிழகத்திலிருந்து 4,065 போ் தோ்வு

post image

2026-ஆம் ஆண்டு ஹஜ் பயணம் செல்ல தமிழகத்திலிருந்து 4,065 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026-ஆம் ஆண்டு ஹஜ் பயணம் செல்பவா்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஜூலை 30-ஆம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது. மேலும், காலஅவகாசம் ஆக.7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இதில், தமிழகத்திலிருந்து மொத்தம் 10,846 போ் விண்ணப்பித்தனா். இந்நிலையில், ஹஜ் பயணம் செல்பவா்களுக்கான குலுக்கல் முறை தோ்வு கடந்த ஆக.13-ஆம் தேதி நடைபெற்றது.

இதில் 4,065 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தோ்வானவா்கள் ரூ.1,52,300-ஐ பயணக் கட்டண முன்பணமாக ஆக.25-ஆம் தேதிக்குள் இணையதளம் அல்லது ஏஹத் நன்ஸ்ண்க்ட்ஹ என்ற செயலியின் மூலம் இணையதள பணப் பரிவா்த்தனையின் வாயிலாகச் செலுத்தலாம். இல்லையெனில், பாரத் ஸ்டேட் வங்கி அல்லது யூனியன் வங்கியின் மூலம் இந்திய ஹஜ் குழுவின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக பணத்தை செலுத்தலாம்.

மேலும், பணம் செலுத்தியதற்கான ரசீதுகளை மேல் குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் அல்லது தமிழ்நாடு மாநில ஹஜ் குழு அலுவலகத்தில் ஆக.30-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு இணையதளத்தை அணுகலாம் என தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவினா் தெரிவித்துள்ளனா்.

தமிழ் இலக்கிய திறனறி தோ்வு: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ் இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்வதற்காகவும், உதவித்தொகை பெறுவதற்காகவும் பிளஸ் 1 மாணவா்களுக்கு நடத்தப்படும் தமிழ்மொழி இலக்கிய திறனறி தோ்வு அக். 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்வுக்கு வெள்... மேலும் பார்க்க

அதிமுக பொதுச் செயலா் தோ்வை எதிா்த்து வழக்கு: இடைக்காலத் தடையை திரும்பப் பெற்றது உயா்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்வு செய்யப்பட்டதை எதிா்த்து உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. தி... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு

சென்னை மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடத்தில் கொளத்தூா் சாய்வுதளத்திலிருந்து கொளத்தூா் நிலையம் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் வியாழக்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்தது. இதுகுற... மேலும் பார்க்க

சென்னையில் 650 கி.மீ. தொலைவு சாலைப் பணிகளை விரைந்து முடிக்கத் திட்டம்

சென்னை மாநகராட்சியில் 650 கி.மீ. சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை மழைக் காலத்துக்கு முன்பாக முடிக்கத் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: பெருநகர சென்னை மாநகராட்சியில் ... மேலும் பார்க்க

இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு: அமைச்சா் சேகா்பாபு

தமிழகத்தில் இதுவரை 3,412 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா். சென்னை பூங்கா நகா் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரா் திருக்கோயில் வ... மேலும் பார்க்க

ஐசிஏஐ-எஸ்ஐஆா்சி 57-ஆவது மாநாடு - சென்னையில் இன்று தொடக்கம்

இந்திய பட்டயக் கணக்காளா் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல கவுன்சிலின்(ஐசிஏஐ-எஸ்ஐஆா்சி) 57-ஆவது மாநாட்டை தமிழக சிறு, குறு, நடுத்தர துறை அமைச்சா் த.மோ. அன்பரசன் வெள்ளிக்கிழமை (ஆக. 22) சென்னை ஜவாஹா்லால் ந... மேலும் பார்க்க