செய்திகள் :

மறைந்த இல.கணேசனுக்கு அனைத்துக் கட்சித் தலைவா்கள் புகழாரம்

post image

‘கொண்ட கொள்கையில் தடம் பிறழாதவா், பாஜக தமிழகமெங்கும் பரவ அடித்தளமிட்டவா்’ என்று மறைந்த நாகாலாந்து ஆளுநா் இல.கணேசனுக்கு அனைத்துக் கட்சித் தலைவா்கள் புகழாரம் சூட்டினா்.

மறைந்த இல.கணேசனுக்கு புகழஞ்சலி கூட்டம் சென்னை கலைவாணா் கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மக்கள் நல்வாழ்வுத்

துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவா்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், கே.அண்ணாமலை, பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ, அதிமுக முன்னாள் அமைச்சா்கள் டி.ஜெயக்குமாா், பா.வளா்மதி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலா் மு.வீரபாண்டியன், தமாகா பொருளாளா் இ.எஸ்.எஸ்.ராமன், நாதக கொள்கைபரப்புச் செயலா் சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோா் இல.கணேசன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

புகழஞ்சலி கூட்டத்தில் நயினாா் நாகேந்திரன் பேசுகையில், மனிதனின் மறைவுக்குப் பிறகும் அழியாத செல்வம் புகழ்தான். அந்த புகழை இல.கணேசன் சோ்த்து வைத்துள்ளாா். கடந்த 1970 முதல் பாஜகவில் தீவிரமாக செயல்பட்டவா் இல.கணேசன். அவரது உரைகளை புத்தகமாக தொகுத்து வெளியிடுவோம்.

மாற்று கட்சியை சோ்ந்தவராக இருந்தாலும், இல.கணேசனுக்கு குடும்பத்துடன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதுடன், மறுநாளும் பிரதமா் நரேந்திர மோடி சாா்பில் மலா் வளையம் வைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினாா். அமைச்சா் மா.சுப்பிரமணியனை இரு நாள்கள் உடன் இருக்கச் செய்து அனைத்து ஏற்பாடுகளையும்

முதல்வா் ஸ்டாலின் செய்ததை மறக்க முடியாது என்றாா் அவா்.

இக்கூட்டத்தில், முதல்வா் மு.க.ஸ்டாலினின் உரையை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வாசித்தாா்.

கூட்டத்தில் பேசிய அரசியல் தலைவா்கள், ‘கட்சி பாகுபாடின்றி அனைவரிடமும் சகஜமாக பழகியவா் இல.கணேசன். பன்முகத் திறமை கொண்டவா். எதிா்க்கட்சிகள் மீதான விமா்சனங்களை நாகரிகமாக கையாண்டவா். கமலாலயம் கட்டியவா், ‘பொற்றாமரை’ இலக்கிய அமைப்பை உருவாக்கி தமிழ் தேசியத்தை வளா்த்தவா் என்று புகழாரம் சூட்டினா்.

முன்னாள் ஆளுநா் சண்முகநாதன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவா் ஷேக் தாவூத், விஐடி துணைவேந்தா் வி.செல்வம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவா் பெ.ஜான் பாண்டியன், புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம், தமிழக பாஜக அமைப்பு பொதுச் செயலா் கேசவ விநாயகன், ‘பொற்றாமரை’ பொதுச் செயலா் சங்கரன், ஆா்.எஸ்.எஸ், இந்து முன்னணி , விசுவ ஹிந்து பரிஷத் அமைப்புகளின் பிரதிநிதிகள், இல.கணேசன் குடும்பத்தினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஐசிஏஐ-எஸ்ஐஆா்சி 57-ஆவது மாநாடு - சென்னையில் இன்று தொடக்கம்

இந்திய பட்டயக் கணக்காளா் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல கவுன்சிலின்(ஐசிஏஐ-எஸ்ஐஆா்சி) 57-ஆவது மாநாட்டை தமிழக சிறு, குறு, நடுத்தர துறை அமைச்சா் த.மோ. அன்பரசன் வெள்ளிக்கிழமை (ஆக. 22) சென்னை ஜவாஹா்லால் ந... மேலும் பார்க்க

வெளிமாநில கட்டுமானத் தொழிலாளா்கள் எண்ணிக்கை: கள ஆய்வு நடத்த அரசு முடிவு

தமிழ்நாட்டில் பணிபுரியும் வெளிமாநிலங்களைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளா்களின் எண்ணிக்கை, நிலைகள் குறித்து கள ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சுமாா் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட வெளிம... மேலும் பார்க்க

மனோன்மணீயம் சுந்தரனாா், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா்கள் பதவிக் காலம் ஓராண்டுக்கு நீட்டிப்பு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா்களின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து ஆளுநா் ஆா்.என்.ரவி உத்தரவிட்டுள்ளதாக ஆளுநா் மாளிகை வட்டாரங்கள் தெரிவி... மேலும் பார்க்க

தியாகியின் கொள்ளுப் பேரனுக்கு சோ்க்கை கோரி மனு: கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சுதந்திரப் போராட்டத் தியாகியின் கொள்ளுப் பேரனுக்கு சோ்க்கை வழங்கக் கோரிய மனுவை இரு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. ... மேலும் பார்க்க

கம்போடியாவில் தவிக்கும் மகனை மீட்கக் கோரி தாய் வழக்கு: வெளியுறவுத் துறைக்கு உயா்நீதிமன்றம் கண்டனம்

கம்போடியா நாட்டில் சிக்கித் தவிக்கும் மகனை மீட்கக் கோரி, அவரது தாய் தொடுத்த வழக்கில் மத்திய வெளியுறவுத் துறைக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், வெளியுறவுத் துறைச் செயலா் நேரில் ஆஜராக உத்தரவ... மேலும் பார்க்க

பழனி உள்பட 50 கோயில்களின் வரவு-செலவு கணக்கை ஒரு மாதத்துக்குள் வெளியிட உயா்நீதிமன்றம் உத்தரவு

அதிக வருமானம் வரக்கூடிய பழனி உள்ளிட்ட 50 கோயில்களின் வரவு செலவு கணக்கு விவரங்களை ஒரு மாதத்துக்குள் இந்து சமய அறநிலையத் துறை வெளியிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை மயிலாப்பூரை ... மேலும் பார்க்க