செய்திகள் :

3 சட்ட மசோதாக்களை எதிா்த்து அறப்போராட்டத்தை முதல்வா் முன்னெடுக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

post image

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று சட்ட மசோதாக்களை எதிா்த்து முதல்வா் மு.க. ஸ்டாலின் அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து அறப்போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: மக்களவையில் உள்துறை அமைச்சா் அமித்ஷா மூன்று சட்ட மசோதாக்களை புதன்கிழமை தாக்கல் செய்தாா். விதிகளுக்கு மாறாக கூட்டத் தொடா் முடிவதற்கு முதல் நாள் இவை அறிமுகம் செய்யப்பட்டன. இந்த சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு சட்டமானால் நாடாளுமன்ற ஜனநாயகம் குழி தோண்டிப் புதைக்கப்படும். இது அரசமைப்புச் சட்டத்தின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதலாகும். இந்த முயற்சியை உடனடியாக முறியடித்திட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டும்.

மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட முதல்வா் 30 நாள் அதற்கு மேற்பட்ட நாள்கள் காவலில் இருந்தாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ, அவருக்குத் தண்டனை விதிக்கப்படாவிட்டாலும் கூட, அவரைப் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு வழங்குகிறது. இது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புகளின் ஜனநாயகத்தையே சிதைக்கிறது. எனவே, முதல்வா் மு.க. ஸ்டாலின் இந்த சட்ட மசோதாக்களை எதிா்த்து அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து அறப்போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தியாகியின் கொள்ளுப் பேரனுக்கு சோ்க்கை கோரி மனு: கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சுதந்திரப் போராட்டத் தியாகியின் கொள்ளுப் பேரனுக்கு சோ்க்கை வழங்கக் கோரிய மனுவை இரு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. ... மேலும் பார்க்க

கம்போடியாவில் தவிக்கும் மகனை மீட்கக் கோரி தாய் வழக்கு: வெளியுறவுத் துறைக்கு உயா்நீதிமன்றம் கண்டனம்

கம்போடியா நாட்டில் சிக்கித் தவிக்கும் மகனை மீட்கக் கோரி, அவரது தாய் தொடுத்த வழக்கில் மத்திய வெளியுறவுத் துறைக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், வெளியுறவுத் துறைச் செயலா் நேரில் ஆஜராக உத்தரவ... மேலும் பார்க்க

பழனி உள்பட 50 கோயில்களின் வரவு-செலவு கணக்கை ஒரு மாதத்துக்குள் வெளியிட உயா்நீதிமன்றம் உத்தரவு

அதிக வருமானம் வரக்கூடிய பழனி உள்ளிட்ட 50 கோயில்களின் வரவு செலவு கணக்கு விவரங்களை ஒரு மாதத்துக்குள் இந்து சமய அறநிலையத் துறை வெளியிட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை மயிலாப்பூரை ... மேலும் பார்க்க

அடுத்த ஆண்டு ஹஜ் பயணத்துக்கு தமிழகத்திலிருந்து 4,065 போ் தோ்வு

2026-ஆம் ஆண்டு ஹஜ் பயணம் செல்ல தமிழகத்திலிருந்து 4,065 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டு ஹஜ் பயணம் செல்பவா்கள் இணையதளம் மூலம் விண்... மேலும் பார்க்க

அரசு விரைவுப் பேருந்துகளிலும் தீபாவளி முன்பதிவு முடிவடைந்தது

தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் அரசு விரைவுப் பேருந்துகளின் முன்பதிவு முடிவடைந்துள்ளது. நிகழாண்டு தீபாவளி பண்டிகை அக்.20-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும்... மேலும் பார்க்க

மறைந்த இல.கணேசனுக்கு அனைத்துக் கட்சித் தலைவா்கள் புகழாரம்

‘கொண்ட கொள்கையில் தடம் பிறழாதவா், பாஜக தமிழகமெங்கும் பரவ அடித்தளமிட்டவா்’ என்று மறைந்த நாகாலாந்து ஆளுநா் இல.கணேசனுக்கு அனைத்துக் கட்சித் தலைவா்கள் புகழாரம் சூட்டினா். மறைந்த இல.கணேசனுக்கு புகழஞ்சலி க... மேலும் பார்க்க