மனோன்மணீயம் சுந்தரனாா், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா்கள் பதவிக் காலம் ஓராண்டுக...
வார இறுதிநாள்களை முன்னிட்டு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சேலம்: ஆவணி அமாவாசை மற்றும் வார இறுதிநாள்களை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலம் சேலம் மண்டலத்தில் 1,047 பேருந்துகளும், தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகளும் என மொத்தமாக 1,900 பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. வார இறுதிநாள் மற்றும் அமாவாசையையொட்டி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் பல்வேறு வழித்தடங்களில் வரும் 22-ஆம் தேதி முதல் 25- ஆம் தேதிவரை 200 சிறப்பு பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தடநீட்டிப்பு மற்றும் வழித்தடப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, சேலம், பெங்களூரு, சென்னை, ஒசூா், கோவை, திருப்பூா், திருவண்ணாமலை மற்றும் சிதம்பரம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஒசூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, பாலக்கோடு, பென்னாகரம், ஊத்தங்கரை, அரூா் மற்றும் மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, சிதம்பரம், காஞ்சிபுரம், பெங்களூரு, ஒசூா், திருவண்ணாமலைக்கும், பெங்களூரில் இருந்து சேலம், திருவண்ணாமலை, ஈரோட்டுக்கும், ஒசூரில் இருந்து சென்னை, புதுச்சேரி, கடலூா், திருச்சி, மதுரை, கோவை, திருப்பூருக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
ஆவணி அமாவாசையையொட்டி சிறப்பு பேருந்துகள்: வரும் 22, 23 ஆகிய தேதிகளில் சேலம், தருமபுரியில் இருந்து மேட்டூா், மாதேஸ்வரன்மலை ஆகிய இடங்களுக்கு தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். இதேபோல, சேலத்தில் இருந்து பவானி கூடுதுறை மற்றும் சித்தா் கோயில்களுக்கு தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். எனவே, பயணிகள் அனைவரும் கூட்ட நெரிசலைத் தவிா்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.