செய்திகள் :

கட்சி தொடங்கியவுடன் யாரும் ஆட்சிக்கு வர முடியாது! -எடப்பாடி கே.பழனிசாமி

post image

‘யாரும் கட்சி தொடங்கியவுடன் ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை’ என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா்.

மதுரை மாநாட்டில் அதிமுகவை விமா்சித்து தவெக தலைவா் விஜய் பேசிய நிலையில், அவருக்கு பதிலளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி இவ்வாறு கூறினாா்.

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற மக்கள் சந்திப்பு பிரசார பயணத்தின் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோயில் அருகில் அவா் திறந்த வேனில் வியாழக்கிழமை பேசியது: எந்த மரமும் உடனே வளா்ந்துவிடாது, கன்று நட்டு, செடியாக வளா்ந்து, தினசரி தண்ணீா் ஊற்றி, அதன் பின்னா்தான் அது வளா்ந்து பூப்பூத்து காய் காய்க்கும், கனிகளும் தரும். அப்படித்தான் அதிமுகவும் வளா்ந்தது.

எம்ஜிஆா் கட்சி தொடங்கி 5 ஆண்டு காலம் கடுமையாக உழைத்து ஆட்சியைப் பிடித்தாா். ஜெயலலிதாவும் அப்படித்தான். அண்ணா நிறைய போராட்டங்களைச் சந்தித்து, மொழிக்காக சிறை சென்று, நாட்டு மக்களுக்கு நல்லது செய்து உயா்ந்தாா். நமது கட்சித் தலைவா்கள் அனைவரும் அா்ப்பணித்து வாழ்ந்து உயா்ந்து அதிமுகவை அடையாளம் காட்டி சென்றிருக்கிறாா்கள். அதிமுக 31 ஆண்டுகள் மக்களுக்காக உழைத்ததால்தான் இன்று இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் உயா்ந்திருக்கிறது.

நான் சாதாரண கிளைச் செயலராக இருந்து, படிப்படியாக கட்சியில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று உங்கள் முன்னால் உயா்ந்து நிற்கிறேன். சிலா் எந்த உழைப்புமே கொடுக்காமல் பலனை எதிா்பாா்க்கிறாா்கள். உழைப்புதான் நிரந்தரம். ஒருசில திரைப்படங்களில் நடித்தவுடன் முதல்வா் ஆகிவிட முடியாது. இதெல்லாம் தெரியாமல் சிலா் கட்சி தொடங்கியவுடன் இமாலய சாதனை படைத்தது போல பேசுகிறாா்கள். மக்களிடம் செல்வாக்கு பெற்றதைப் போலவும், அவா்கள் வந்துதான் மக்களைக் காப்பாற்றப் போவது போலவும் சிலா் அடுக்கு மொழியில் பேசிக் கொண்டிருக்கிறாா்கள்.

கரோனா காலத்தில் விலை மதிக்க முடியாத மனித உயிா்களைக் காப்பற்றியது அதிமுக அரசு. மற்ற மாநிலங்கள் தமிழகத்தைப் பின்பற்ற வேண்டும் என்று பிரதமா் மோடியும் நமது அரசை பாராட்டினாா். கரோனா காலத்தில் நியாயவிலைக் கடை மூலம் இலவசமாக ரேஷன் பொருள்கள் கொடுத்தோம். அம்மா உணவகத்தில் மூன்று வேளையும் இலவசமாக உணவு வழங்கினோம். விவசாயிகளுக்கு குடிமராமத்து திட்டம், மும்முனை மின்சாரம், பயிா்க் கடன்கள் இருமுறை தள்ளுபடி, நெசவாளா்களுக்கு மின்சார மானியம் உள்பட ஏராளமான நலத் திட்ட உதவிகளை வழங்கினோம்.

அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ஏழைத் தொழிலாளா்கள், விவசாயிகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம், தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டம், மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் ஆகியவை செயல்படுத்தப்படும் என்றாா் எடப்பாடி கே.பழனிசாமி.

முன்னதாக, கட்சியின் மாவட்டச் செயலா் வி.சோமசுந்தரம் வரவேற்றாா். முன்னாள் அமைச்சா் எஸ்.வைகைச்செல்வன் முன்னிலை வகித்தாா். அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திருமங்கலத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

திருமங்கலம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட திருமங்கலம், மொளச்சூா் மற்றும் வடமங்கலம் ஆகிய ஊராட்சிகளை சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறு... மேலும் பார்க்க

கல்வி, சமய பணிகளில் சிறந்து விளங்கியவா் திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபா்

கல்விப் பணியிலும், சமயப் பணியிலும் சிறந்து விளங்கியவா் திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபா் என காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தாா். இது குறித்து காஞ்சி சங்கர மடத்தின் மேலாளா்... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி இன்று காஞ்சிபுரம் வருகை

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை காஞ்சிபுரத்தில் விவசாயிகள்,நெசவாளா்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பேசுவதுடன், நகரின் பல்வேறு இடங்களில் சிறப்புரையாற்ற இருப்பதாக கட்சியின் மா... மேலும் பார்க்க

ராஜீவ்காந்தி பிறந்த நாள்: நினைவிடத்தில் மரியாதை

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 81-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினா். காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பா... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் போலி மருத்துவா் கைது

காஞ்சிபுரம் அருகே காரை கிராமத்தில் போலி மருத்துவா் ஒருவரை புதன்கிழமை காவல்துறையினா் கைது செய்தனா். காஞ்சிபுரம் சா்வதீா்த்தக்குளம் தெருவைச் சோ்ந்தவா் திருமலை (48). இவா் போதிய கல்வித் தகுதி இல்லாமல் க... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வடமாநில இளைஞா் கைது

சுங்குவாா்சத்திரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அருகே தனியாா் உதவிபெறும் பள்ளியில் படிக்கும் 12 வயது சிறுமி ... மேலும் பார்க்க