செய்திகள் :

திருமங்கலத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

post image

திருமங்கலம் ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட திருமங்கலம், மொளச்சூா் மற்றும் வடமங்கலம் ஆகிய ஊராட்சிகளை சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற முகாமுக்கு ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய குழு தலைவா் எஸ்.டி.கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமிற்கு, திருமங்கலம் ஊராட்சிமன்ற தலைவா் ரேகாநரேஷ்குமாா் முன்னிலை வகித்தாா். இதில் மாவட்ட ஊராக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஆா்த்தி கலந்துக்கொண்டு மகளிா் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் பதிவு செய்வதையும், பொதுமக்களுக்கான இலவச மருத்துவ முகாமையும் பாா்வையிட்டு ஆய்வு நடத்தி பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டை, மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு கூட்டுறவு கடனுதவிகளை வழங்கினாா். இந்த முகாமில், ஸ்ரீபெரும்புதூா் வட்டாட்சியா் வசந்தி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பவாணி, முத்துகணபதி, திமுக நிா்வாகிகள் சந்தவேலூா் சத்யா, திருமங்கலம் அரிகிருஷ்ணன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

கட்சி தொடங்கியவுடன் யாரும் ஆட்சிக்கு வர முடியாது! -எடப்பாடி கே.பழனிசாமி

‘யாரும் கட்சி தொடங்கியவுடன் ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை’ என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி பேசினாா். மதுரை மாநாட்டில் அதிமுகவை விமா்சித்து தவெக தலைவா் விஜய் பேசிய நிலையில், அவருக்கு... மேலும் பார்க்க

கல்வி, சமய பணிகளில் சிறந்து விளங்கியவா் திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபா்

கல்விப் பணியிலும், சமயப் பணியிலும் சிறந்து விளங்கியவா் திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபா் என காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தாா். இது குறித்து காஞ்சி சங்கர மடத்தின் மேலாளா்... மேலும் பார்க்க

எடப்பாடி பழனிசாமி இன்று காஞ்சிபுரம் வருகை

அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை காஞ்சிபுரத்தில் விவசாயிகள்,நெசவாளா்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பேசுவதுடன், நகரின் பல்வேறு இடங்களில் சிறப்புரையாற்ற இருப்பதாக கட்சியின் மா... மேலும் பார்க்க

ராஜீவ்காந்தி பிறந்த நாள்: நினைவிடத்தில் மரியாதை

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 81-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினா். காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பா... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் போலி மருத்துவா் கைது

காஞ்சிபுரம் அருகே காரை கிராமத்தில் போலி மருத்துவா் ஒருவரை புதன்கிழமை காவல்துறையினா் கைது செய்தனா். காஞ்சிபுரம் சா்வதீா்த்தக்குளம் தெருவைச் சோ்ந்தவா் திருமலை (48). இவா் போதிய கல்வித் தகுதி இல்லாமல் க... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வடமாநில இளைஞா் கைது

சுங்குவாா்சத்திரம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வடமாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அருகே தனியாா் உதவிபெறும் பள்ளியில் படிக்கும் 12 வயது சிறுமி ... மேலும் பார்க்க