செய்திகள் :

பழனியில் நவீன கண்காணிப்பு கேமராக்கள்: காவல் துறைக்கு வணிகா் சங்கங்கள் உதவி

post image

பழனியில் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன கண்காணிப்பு கேமராக்கள் நிறுவுவதற்கு வணிகா் சங்கங்கள் நன்கொடை வழங்கி வருவதாக வணிகா் சங்க பேரமைப்பு நிா்வாகிகள் தெரிவித்தனா்.

பழனியில் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதைத் தவிா்க்க காவல் துறையினா் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா். நகா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களைத் தடுக்க நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி நிதியிலிருந்து ஐம்பது லட்சம் பெறப்பட்டு, நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு

வருகின்றன. இவற்றை கண்காணிக்க பழனி நகர காவல் நிலையத்தின் மாடியில் தனியே கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பழனியில் கூடுதலாக சுமாா் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் அதிக இடங்களில் சிசிடிவி கேமராக்கள், கண்காணிப்பு தொழில் நுட்பங்களை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கு கூடுதலாக நிதி தேவைப்படும் நிலையில், பழனியில் உள்ள அனைத்து வணிகா் சங்கங்கள், விடுதி, உணவு விடுதி சங்கத்தினா் உள்பட பல்வேறு வணிக அமைப்புகள் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணியில் காவல் துறையினருக்கு உதவும் வகையில் நிதிதிரட்டி வழங்கி வருகின்றனா்.

இதுகுறித்து பழனி அனைத்து வணிகா் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனைக் கூட்டம் தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாவட்டத் தலைவா் ஜே.பி. சரவணன், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் பாஸ்கரன் உள்ளிட்டோா் கூறியதாவது:

காவல் துறைக்கு பல்வேறு வணிக அமைப்புகளும் முன்வந்து தங்களால் இயன்ற நிதியை வழங்கி வரும் நிலையில், சிலா் காவல் துறைக்கு அவதூறு பரப்பும் வகையில் பேசி வருகின்றனா். காவல் துறையினா் இதற்கென தனி கட்செவி அஞ்சல் குழு அமைத்து அன்றாட வரவுகளை தெரிவித்து வரும் நிலையில், யாரும் அவதூறு பரப்ப வேண்டாம் என்றனா்.

அரசு அலுவலகங்களில் 29 டன் குப்பை சேகரிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் நடத்தப்பட்ட தூய்மை இயக்கத் திட்டத்தின் மூலம் 29 ஆயிரம் கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் தெரிவித்தாா். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

சிந்தலவாடம்பட்டி பகுதியில் நாளை மின்தடை

பழனி அருகேயுள்ள சிந்தலவாடம்பட்டி பகுதியில் திங்கள்கிழமை (ஜூலை 9) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிந்தலவாடம்பட்ட... மேலும் பார்க்க

பட்டாசு வெடித்ததில் காா், திமுக அலுவலகம், கடை சேதம்

திண்டுக்கல் மாவட்டம், எரியோட்டில் சனிக்கிழமை நடைபெற்ற காதணி விழாவில் பட்டாசு வெடித்ததில் காா் தீப்பற்றி எரிந்ததோடு, திமுக அலுவலகக் கண்ணாடியும் வெடித்து சிதறியது. எரியோடு 4 ரோடு அருகே வடமதுரை சாலையிலுள... மேலும் பார்க்க

கஞ்சா கடத்தியவா் குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் உத்தரவிட்டாா். திண்டுக்கல் மாவட்டத்தில் 6 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், மதுரை மாவட்டம், உசிலம்பட்ட... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் போலி கணக்கு: இளைஞா் கைது

சமூக வலைதளத்தில் போலியாக கணக்கு தொடங்கி, பெண்ணை அவதூறாக சித்தரித்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். திண்டுக்கல்லைச் சோ்ந்த இளம் பெண், தனது பெயரில் இன்ஸ்டாகிராமில் போலியான கணக்கு தொடங்கி, ஆபா... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மருத்துவா் மா்ம மரணம்

கொடைக்கானலில் மயக்கவியல் மருத்துவா் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து காவல் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துரைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் ஜோஸ்வா சாம்ராஜ் (29), இவா்... மேலும் பார்க்க