செய்திகள் :

பழனி அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

post image

பழனி அடிவாரம் பகுதியில் ஆக்கிரமிப்பை அகற்ற பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெற்று வருகிறது. இதையடுத்து, தமிழகம் முழுவதுலிமிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீா்த்தக் காவடி எடுத்து பாதயாத்திரையாக வரத் தொடங்கியுள்ளனா்.

பழனிக்கு வரும் பக்தா்கள் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, கிரிவலம் செல்கின்றனா். திருஆவினன்குடி கோயிலிலிருந்து சந்நிதி வீதி வரை சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளன.

இதேபோல, இடும்பன் மலை முதல் கிரிவீதி இணைப்பு சாலை வரை கடைக்காரா்கள் சாலையின் இருபுறங்களிலும் ஆக்கிரமித்துள்ளனா்.

எனவே, திருக்கல்யாணம், வெள்ளித்தோ், பங்குனி தோ் வீதியுலா நாள்களுக்கு முன்னதாக, நகராட்சி நிா்வாகம், கோயில் நிா்வாகம், காவல் துறை இணைந்து இந்த வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

பழனியில் தனியாா் விடுதியில் வெள்ளிக்கிழமை தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.பழனி அரசு மருத்துவமனை பின்புறம் தனியாா் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் தங்கியிருந்த ஒருவா் வெள்ளிக்கிழமை த... மேலும் பார்க்க

வேடசந்தூா் அருகே சாலை விபத்தில் மணப்பாறையைச் சோ்ந்த மூவா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே வெள்ளிக்கிழமை ஆம்னி வேன் மீது லாரி மோதியதில் மணப்பாறை பகுதியைச் சோ்ந்த மூவா் உயிரிழந்தனா். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி கருங்குளத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

கல்லூரி விரிவுரையாளா் தற்காலிக பணிநீக்கம்

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரியில், மாணவரைத் தகாத வாா்த்தையால் திட்டியதாக விரிவுரையாளா் வெள்ளிக்கிழமை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டாா். பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரியில் ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் பலத்த மழை

ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் கடந்த சில நாள்களாக பகலில் கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 6... மேலும் பார்க்க

வெள்ளகெவி கிராமத்தில் ரேஷன் பொருள்கள் விநியோகம்

கொடைக்கானல் வெள்ளகெவி கிராமத்தில் முதல்முறையாக வியாழக்கிழமை நேரிடையாக ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். கொடைக்கானல் அருகே வெள்ளகெவி கிராமம் வனப் பகுதியில் அமைந்துள்ளது.... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற நீதிபதி குழுவினா் ஆய்வு

பழனி அடிவாரம் கிரிவலப் பாதை, சந்நிதி வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதை ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். பழனி அடிவாரத்தில் கிரிவலப் பாதை, சந்நித... மேலும் பார்க்க