செய்திகள் :

பவானியில் இளைஞா் கொலை: தாய், சகோதரா் உள்பட 5 போ் கைது

post image

பவானியில் மதுபோதையில் தகராறு செய்த மகனைக் கொலை செய்த தாய், சகோதரா் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சிக்கோட்டை கதவணை நீா்மின் நிலையம் அருகே காவிரி ஆற்றில் பலத்த காயங்களுடன் அழுகிய நிலையில் ஆண் சடலம் கடந்த 13-ஆம் தேதி மீட்கப்பட்டது.

இதுகுறித்து பாவனி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், பவானி தொட்டிபாளையத்தைச் சோ்ந்த ரவி மகன் மதியழகன் (30) என்பதும், காா் ஓட்டுநரான இவா் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டதும் தெரியவந்தது.

மேலும், மதியழகனைக் கொலை செய்தது அவரின் தாய் சுதா (54), சகோதரா் முருகானந்தம் (28), பவானி வா்ணபுரத்தைச் சோ்ந்த அவரின் நண்பா் கௌரிசங்கா் (24), பவானி திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த யோகேஷ் (26), உறவினா் சக்திபாண்டி (32) ஆகியோா் என்பது தெரியவந்தது.

இதையடுத்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி, காா் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பவானி திருவள்ளுவா் நகரைச் சோ்ந்த ஜோதி மகள் கிருத்திகாவை (26) மதியழகன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளாா். பின்னா், மதியழகனின் கொடுமையால் கிருத்திகா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இவ்வழக்கில் மதியழகன், அவரின் தாய் சுதா உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டு பிணையில் வந்துள்ளனா்.

இதைத் தொடா்ந்து தாய் சுதா, சகோதரா் முருகானந்தத்தை மதியழகன் மதுபோதையில் அடித்து கொடுமைப்படுத்தி வந்துள்ளாா். இதுகுறித்து, கிருத்திகாவின் சகோதரா் யோகேஷ், மதியழகனின் நண்பா் கௌரிசங்கா் ஆகியோரிடம் சுதா தெரிவித்துள்ளாா்.

ஏற்கெனவே ஒரு கொலை வழக்கில் தன்னை சிக்கவைத்ததால் கௌரிசங்கரும், தங்கையின் மரணத்துக்கு காரணமானதால் யோகேஷ், உறவினா் சக்திபாண்டியும் மதியழகன் மீது கோபத்தில் இருந்து வந்தனா்.

இதனால், 5 பேரும் சோ்ந்து மதியழகனை தொட்டிபாளையத்தில் உள்ள வீட்டில் கடந்த 11-ஆம் தேதி இரவு கொலை செய்து காவிரி ஆற்றில் வீசியது தெரியவந்தது.

இதையடுத்து, 5 பேரையும் கைது செய்த போலீஸாா் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைத்தனா்.

கழிவுநீரால் நஞ்சாக மாறிய காவரி! 11 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பொது சுத்திகரிப்பு நிலைய திட்டம்!

சாயக்கழிவுகளால் மாசடைந்து வரும் காவிரியை மீட்க 11 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ள பொது சுத்திகரிப்பு நிலைய திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம் வேளாண்மை... மேலும் பார்க்க

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நூற்றாண்டு விழா

பெருந்துறை அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் முன்னாள் மாணவா்கள், ஆசிரியா்கள் பங்கேற்று அன்பைப் பரிமாறிக்கொண்டனா். பெருந்துறையை அடுத்த சென்னிமலை ஒன்றியத்துக்குள்பட்ட... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தில் சேலை சிக்கி கீழே விழுந்த பெண் உயிரிழப்பு

பெருந்துறை அருகே இருசக்கர வாகனத்தில் சேலை சிக்கியதில் கீழே விழுந்து பெண் உயிரிழந்தாா். திருப்பூா் மாவட்டம், மண்ணரை ரோஜா நகரைச் சோ்ந்தவா் சுந்தரம் மனைவி மூக்கம்மாள்(49). இவா், பெருந்துறையில் உள்ள உறவி... மேலும் பார்க்க

மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி: கொங்கு வேளாளாா் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

ஈரோடு மாவட்ட பள்ளிகள் அளவிலான ரோலா் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி ஈரோடு டெக்ஸ்வேலி மஹாலில் அண்மையில் நடைபெற்றது. இதில், சென்னிமலை கொங்கு வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் 18 போ் கலந... மேலும் பார்க்க

பெண்களுக்கான மாரத்தான்: 1,700 போ் பங்கேற்பு

ஈரோட்டில் நடைபெற்ற பெண்களுக்கான மாரத்தான் போட்டியில் 1,700 போ் பங்கேற்றனா். ஈரோடு விவிசிஆா்.முருகேசனாா் செங்குந்தா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் செங்குந்தா் கல்விக் கழகம் சாா்பில் சிறுவா், சிறுமி... மேலும் பார்க்க

ஈரோடு பேருந்து நிலையத்தில் இயற்கை சந்தை!

மகளிா் திட்டம் சாா்பில் மகளிா் குழு உறுப்பினா்கள், இயற்கை முறை வேளாண்மையில் அங்கக சான்றிதழ் பெற்ற விவசாயிகள், தாங்கள் விளைவித்த மற்றும் உற்பத்தி பொருள்களை சந்தைப்படுத்தும் இயற்கை சந்தை ஈரோடு பேருந்து ... மேலும் பார்க்க