செய்திகள் :

பவுா்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்!

post image

பவுா்ணமி கிரிவலத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக திருவண்ணாமலை - விழுப்புரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரத்திலிருந்து ஜூன் 10-ஆம் தேதி காலை 9.25 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (எண்: 06130) முற்பகல் 11.10-க்கு திருவண்ணாமலை சென்றடையும். அதே தேதியில், திருவண்ணாமலையிலிருந்து பிற்பகல் 12.40-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06129) பிற்பகல் 2.15-க்கு விழுப்புரம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் நேரம் மாற்றம்: சென்னை கோட்டத்தில் பல்வேறு பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் விரைவு ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

அதன்படி, சென்னை எழும்பூரிலிருந்து காலை 10.20-க்கு புறப்பட்டு குருவாயூா் செல்லும் விரைவு ரயில் (எண்: 16127) ஞாயிற்றுக்கிழமை மற்றும் 15, 22 ஆகிய தேதிகளில் 40 நிமிஷங்கள் தாமதமாக முற்பகல் 11 மணிக்கு சென்னை எழும்பூரிலிருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி ஜனாா்த்தனம் காலமானாா்! - முதல்வா் இரங்கல்

உயா்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.எஸ்.ஜனாா்த்தனம் (89) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானாா். அவரது இறுதி நிகழ்வில் காவல் துறை மரியாதை அளிக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.... மேலும் பார்க்க

திருவண்ணாமலையில் ஆக்கிரமிப்புகள்: அறிக்கை தாக்கல் செய்ய ஆட்சியருக்கு உத்தரவு

திருவண்ணாமலை மலையில் சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ள 1,535 கட்டடங்களை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாச... மேலும் பார்க்க

சைக்கிளிங் லீக் அணிகள் அறிமுகம்

தமிழ்நாடு சைக்கிளிங் லீக் (டிசிஎல்) தொடரில் பங்கேற்கும் அணிகள், சீருடைகள் அறிமுக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்திய சைக்கிளிங் கூட்டமைப்பு, தமிழ்நாடு சைக்கிளிங் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட... மேலும் பார்க்க

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் தாமதம்! எஸ்இடிசி விளக்கம்

சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துகளின் தாமதத்துக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்தது.சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகளுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக ச... மேலும் பார்க்க

5,707 வகை திரைப்பட கேமராக்கள் சேகரிப்பு: மீண்டும் கின்னஸ் விருது பெற்ற மருத்துவா்

தனித்துவம் வாய்ந்த 5,707 வகை திரைப்பட கேமராக்களை சேகரித்ததற்காக பல் மருத்துவா் ஏ.வி.அருணுக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த ஏ.வி.அருண், பல ஆண்டுகளாக பல்வேறு ... மேலும் பார்க்க

திமுக மாவட்டச் செயலா்கள், நிா்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

உறுப்பினா் சோ்க்கை, பேரவைத் தோ்தல் தொடா்பாக மாவட்டச் செயலா்கள் உள்பட திமுக நிா்வாகிகளுடன் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஜூன் 7) ஆலோசனை நடத்தவுள்ளாா். காணொலி வாயிலாக நடைபெறும... மேலும் பார்க்க