செய்திகள் :

பஹல்காம் எதிரொலி: தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுத் தலைவர் அலோக் ஜோஷி!

post image

பஹல்காம் தாக்குதலையைடுத்து தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவராக 'ரா' உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலையைடுத்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் 2-வது கூட்டம் பிரதமர் இல்லத்தில் இன்று(புதன்கிழமை) காலை தொடங்கி நடைபெற்றது.

இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சற்று நேரத்திற்கு முன்னர் இந்த கூட்டம் முடிவடைந்ததையொட்டி தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு மாற்றியமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 'ரா' உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் அலோக் ஜோஷி தலைமையில் 7 பேர் கொண்ட குழுவாக தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

ராணுவப் பணிகளில் இருந்து ஓய்வு பெற்ற மேற்கு விமானப் படையின் முன்னாள் தளபதி ஏர் மார்ஷல் பி.எம். சின்ஹா, தெற்கு ராணுவ முன்னாள் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே. சிங், முன்னாள் கடற்படை அதிகாரி மோன்டி கன்னா,

இந்திய காவல் துறையில் இருந்து ஓய்வு பெற்ற ராஜீவ் ரஞ்சன் வர்மா, மன்மோகன் சிங் ஆகியோர்

ஐ.எஃப்.எஸ். பதவியிலிருந்து ஓய்வு பெட்ரா பி. வெங்கடேஷ் வர்மா ஆகியோர் இந்த குழுவில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | 234 தொகுதிகளிலும் திமுக வென்றாலும் ஆச்சரியமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

காஷ்மீரில் சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு!

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக காஷ்மீரில் 48 சுற்றுலாத் தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டதற்கு, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.ஜம்மு - காஷ்மீரின் பல்வேறு விடுதி உரி... மேலும் பார்க்க

சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு நிதி: கார்கே

சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு நிதி அளிக்குமாறு காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறியதாவது, ``சாதிவாரிக் கணக்கெடுப்பு மிகவும் அவசியம். இதன் மூலமாகத... மேலும் பார்க்க

சாதிவாரிக் கணக்கெடுப்பு: காங்கிரஸ் கொள்கையை பாஜக ஏற்றுள்ளது - ராகுல்

சாதிவாரிக் கணக்கெடுப்பு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் கொள்கையை பாஜக ஏற்றுள்ளதாக அக்கட்சியின் மக்களவைக் குழு தலைவரும் எம்.பி.யுமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தில்லியில் செய்தியாளர்களுடன் பேசிய ... மேலும் பார்க்க

நடுவர்மன்ற உத்தரவுகளை நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம்: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: பல்வேறு விவகாரங்களில் நடுவர் மன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவை, நடுவர்மன்றம் மற்றும் தீர்ப்பாயங்கள் சட்டப்பிரிவு 1996-ன் கீழ், நீதிமன்றங்கள் மாற்றியமைக்கலாம் என்று முக்கியத்துவம் வாய்ந்த தீ... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: குண்டு வெடிப்பில் 2 குழந்தைகள் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 2 குழந்தைகள் பலியாகியுள்ளனர். கைபர் பக்துன்குவாவிலுள்ள தெற்கு வசிரிஸ்தான் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள அஸாம் வர்ஸாக் சோதனைச் சாவடி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குல்: பலியானவரின் குடும்பத்தினரை சந்தித்த ராகுல்!

பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.உத்தரப் பிரதேசம் ரேபரேலி மற்றும் அமேதி மக்களவை தொகுதிக... மேலும் பார்க்க