செய்திகள் :

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாரமுல்லாவில் ஊடுருவல் முயற்சி - 2 தீவிரவாதிகளை வீழ்த்திய ராணுவம்

post image

ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் குவிந்திருந்த பைசரான் பள்ளத்தாக்கில் திடீரென தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 28 பேரை சுட்டுக் கொன்றுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் உள்ள தலைவர்கள், பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், எல்லையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகப்படுத்தப்பட்டன.

அதன் விளைவாகா பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பாரமுல்லா என்ற இடத்தின் வழியாக ஊடுருவ முயன்ற இரண்டு தீவிரவாதிகளை ராணுவத்தினர் வீழ்த்தியிருக்கின்றனர்.

காஷ்மீர்
காஷ்மீர்

நீண்ட துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சியை இராணுவம் தடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

பயங்கரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் போர்க்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள்

இதற்கு நடுவில் பஹல்காம் பகுதியில் 6 தீவிரவாரிகள் பதுங்கியிருப்பதாக ராணுவத்துக்கு தகவல் கிடைத்துள்ளது என செய்திகள் கூறுகின்றன.

ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். மலைப்பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது.

பாகிஸ்தானுக்கு பங்கில்லை..?

தீவிரவாத தாக்குதல் குறித்த தகவல் வெளியான உடனேயே தனது சவுதி பயணத்தின் திட்டங்களை ரத்து செய்த பிரதமர் மோடி, உடனடியாக இந்தியா திரும்பினார். இப்போது மத்திய அமைச்சர்களுடன் அவசர கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்கள் உடலுக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அஞ்சலி செலுத்தினார். அதைத் தொடர்ந்து உடல்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா அசிஃப் தெரிவித்துள்ளார். மேலும் இது இந்தியாவின் உள்நாட்டிலேயே வளர்க்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்திய அரசும் இதில் பாகிஸ்தான் தலையீடு இருப்பதாக இதுவரைத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Pahalgam Attack: ``நீதி வழங்கப்படும்'' - சச்சின், விராட், கம்பீர்... கிரிக்கெட் வீரர்கள் கண்டனம்!

காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த தீவிரவாத நடவடிக்கைக்கு முன்னாள், இன்னாள் கிரிக்கெட் வீரர்கள், தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உள்ளிட்ட பலர் வருத்தம் தெரிவித்துள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவரா... மேலும் பார்க்க

``நூலிழையில் உயிர் பிழைத்தோம்..'' - காஷ்மீரில் நடந்ததை கண்ணீருடன் விவரிக்கும் மகாராஷ்டிரா தம்பதி

ஜம்மு காஷ்மீரில் உள்ள பாஹல்காம் அருகில் மினி ஸ்விட்சர்லாந்து எனப்படும் பகுதியில் தீவிரவாதிகள் நேற்று பிற்பகல் திடீரென புகுந்து சுற்றுலா பயணிகள் மீது சரமாரியாக சுட்டனர். பயங்கரவாதிகள் சுட்டதில் 28 சுற்... மேலும் பார்க்க

J&K: ஜம்மு காஷ்மீரில் சுற்றுலா பயணிகள்மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு; 20-க்கும் மேற்பட்டோர் பலி?

ஜம்மு காஷ்மீரின், பஹல்காமிலுள்ள சுற்றுலா தளத்தில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்தச் சம்பவத்தில், உயிரிழந்தோரின் எண்... மேலும் பார்க்க