செய்திகள் :

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: பிஎஸ்எல் ஒளிபரப்புக்கு இந்தியாவில் தடை!

post image

பஹல்காம் தாக்குதல் எதிரொலியால் பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒளிபரப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாகிஸ்தான் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் சிலர் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தது இந்தியா முழுவதும் அதிர்வலைகள ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே போடப்பட்ட ஒப்பந்தங்கள் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இரு நாட்டு ராணுவத்தினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, அட்டாரி - வாகா எல்லை மூடப்பட்டு இந்தியாவிலுள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற காலக்கெடு விதிக்கப்பட்டதுடன் அந்நாட்டிலுள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கின் அனைத்துப் போட்டிகளையும் நேரடி ஒளிபரப்பு தளமான ஃபேன்கோட் செயலில் அதன் வலைத்தளத்திலிருந்து நீக்கியுள்ளது.

இதுகுறித்து ஃபேன்கோட் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பஹல்காமில் நடந்த வேதனையளிக்கும் சம்பவம் மற்றும் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு பாகிஸ்தான் சூப்பர் லீக் ஒளிபரப்பை நிறுத்த முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

ஃபேன்கோடை சோனி நிறுவனமும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கை ஒளிபரப்பி வருகிறது. இருந்தாலும், இதைப் பற்றி எந்தத் தகவலையும் சோனி நிறுவனம் வெளியிடவில்லை.

இதையும் படிக்க: பிஎஸ்எல்: ஒளிபரப்புக் குழுவில் உள்ள இந்தியர்களை திருப்பி அனுப்ப பாகிஸ்தான் அரசு முடிவு!

ஸ்காட்லாந்து, நெதர்லாந்து, நேபாளம் இடையே முத்தரப்பு டி20 தொடர்!

ஸ்காட்லாந்து, நேபாளம் மற்றும் நெதர்லாந்து அணிகள் தங்களுக்குள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடவுள்ளதாக ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.இந்த முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடர் ஜூன் 15 ஆம் ... மேலும் பார்க்க

பிஎஸ்எல்: ஒளிபரப்பு குழுவில் உள்ள இந்தியர்களை திருப்பி அனுப்ப பாகிஸ்தான் அரசு முடிவு!

பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பணியாற்றும் ஒளிபரப்பு குழுவில் உள்ள இந்தியர்களை திருப்பி அனுப்ப பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. ஜம்மு - காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காமில் கடந்த செவ்வாய... மேலும் பார்க்க

10 தமிழக வீரர்களுக்கு தலா ரூ.70 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் ஷிவம் துபே..!

சிஎஸ்கே வீரர் ஷிவம் துபே 10 தமிழக வீரர்களுக்கு தலா ரூ.70 ஆயிரத்தை வழங்குவதாகக் கூறியுள்ளார்.ஆல்ரவுண்டரான ஷிவம் துபே சிஎஸ்கே அணிக்காக 2022 முதல் விளையாடி வருகிறார். டிஎன்எஸ்ஜேஏ (தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் ஜா... மேலும் பார்க்க

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: வங்கதேசம் 112 ரன்கள் முன்னிலை!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 112 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன் தினம் (ஏப்ரல் 20) சில்ஹட்டில்... மேலும் பார்க்க

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான மைக்கேல் ஸ்லாட்டருக்கு பல்வேறு குற்றச்சாட்டுகளில் ... மேலும் பார்க்க

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: வங்கதேசம் நிதான ஆட்டம்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் 25 ரன்கள் பின் தங்கியுள்ளது.ஜிம்பாப்வே அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு... மேலும் பார்க்க