செய்திகள் :

பஹல்காம் பயங்கரவாதிகளை போராளிகள் எனக் குறிப்பிடுவதா பிபிசிக்கு மத்திய அரசு நோட்டீஸ்

post image

26 போ் கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை போராளிகள் எனக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டதற்காக ஆட்சேபம் தெரிவித்து பிரிட்டனின் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் அருகே பிரபல சுற்றுலாத் தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் இயற்கை காட்சிகளை ரசித்தபடி இருந்த சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கடந்த 22-ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 26 போ் உயிரிழந்தனா். பலா் காயமடைந்தனா்.

இந்தக் கொடூர தாக்குதலுக்கு அமெரிக்கா, ரஷியா உள்பட பல்வேறு உலக நாடுகள் வன்மையான கண்டனங்களை தெரிவித்ததுடன் பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுடன் துணை நிற்போம் என்றும் ஆதரவை வெளிப்படுத்தின.

இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் சூழலை உருவாக்கியுள்ள இந்த பஹல்காம் தாக்குதல் குறித்த செய்தியில் பயங்கரவாதிகளைப் போராளிகள் என பிபிசி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது சா்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுதொடா்பாக ஆட்சேபம் தெரிவித்து, பிபிசி இந்தியாவின் தலைவரான ஜாக்கி மாா்டினுக்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவ்விவகாரத்தில் பிபிசி செய்திகளை அமைச்சகம் தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்கள் முடக்கம்: இந்தியா பற்றிய தவறான மற்றும் ஆத்திரமூட்டும் தகவல்களைப் பரப்பியதாக பாகிஸ்தானைச் சோ்ந்த 16 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.

இந்தியா மற்றும் அதன் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக தவறான பரப்புரையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த யூடியூப் சேனல்கள் மீது மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதல்: ஜம்மு - காஷ்மீரின் 48 சுற்றுலாத் தலங்கள் மூடல்!

பஹல்காம் தாக்குதலினால் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திலுள்ள 48 சுற்றுலாத் தலங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீரிலுள்ள 87 சுற்றுலாத் தலங்களில் பயங்கரவாதிகளின் நடமாட்ட இர... மேலும் பார்க்க

பஹல்காமில் உயிரிழந்தோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை: ஃபட்னவீஸ்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலாத் தலத்... மேலும் பார்க்க

இந்தியர்களை மணந்த பாகிஸ்தானியர்களை நாடுகடத்தும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்!

இந்தியர்களைத் திருமணம் செய்து கொண்ட பாகிஸ்தான் நாட்டினர் நாடு கடத்தப்படும் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனைச் செய்ய வேண்டும் என ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி வலியுறுத்தியுள்ளார்.... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனை!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாப் பகுதியில் கடந்த ஏப். 22 அன்று பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் ... மேலும் பார்க்க

பஹல்காமில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தைச் சந்திக்க கான்பூர் செல்கிறார் ராகுல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரில் ஒருவரான சுபம் திவேதியின் குடும்பத்தினரை சந்திக்க காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி புதன்கிழமை கான்பூருக்குச் செ... மேலும் பார்க்க

பிரதமர் மோடியுடன் நயினார் நகேந்திரன் சந்திப்பு!

தில்லியில் பிரதமர் மோடியுடன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்திப்பு மேற்கொண்டார். தமிழ்நாட்டின் அரசியல் சூழல், கூட்டணி விவகாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடியுடன் விவாதிக்கப்பட்டதாகத... மேலும் பார்க்க