செய்திகள் :

பாகிஸ்தானில் ராணுவ வாகனங்கள் மீது தற்கொலைப்படைத் தாக்குதல்! -90 வீரர்கள் பலி?

post image

இஸ்லாமாபாத் : தென்மேற்கு பாகிஸ்தானில் க்வெட்டாவிலிருந்து ஈரானிய எல்லைப் பகுதியில் அமைந்துள்ள டாஃப்டான் பகுதிக்குச் சென்று கொண்டிருந்த ராணுவ பாதுகாப்புப் படை வாகனங்களை குறிவைத்து ஞாயிற்றுக்கிழமை(மார்ச் 16) பிரிவினைவாத பயங்கரவாத குழுக்கள் நடத்திய தாக்குதலில் துணை ராணுவப் படையினர் 7 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாஷ்கி பகுதியில் ஒரு காரில் வெடி பொருள்களை ஏற்றிக் கொண்டு வந்த பலோச் இயக்க பயங்கரவாதிகள், அவ்வழியாக ராணுவ பேருந்துகளில் சென்று கொண்டிருந்த துணை ராணுவ படையினரைக் குரிவைத்து அந்த காரை பேருந்துகளின் மீது மோதி வெடிக்கச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் 90 வீரர்கள் வரை கொல்லப்பட்டதாக பலோச் விடுதலைப் படை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு பலோச் விடுதலைப் படை(பி.எல்.ஏ) பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.

இந்த நிலையில், இந்த தாக்குதலில் 5 பேர் உயிரிழந்ததாகவும், 35 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக, இதே பயங்கரவாத இயக்கம், கடந்த செவ்வாய்க்கிழமை 450 பயணிகளுடன் சென்ற ரயிலை கடத்திய நிலையில், அதனைத்தொடர்ந்து ராணுவத்தினர் அந்த பயங்கரவாதிகளைக் கொன்று ரயில் பயணிகளை மீட்ட சம்பவம் நடந்தது. இந்த நிலையில், அடுத்தடுத்த வாரங்களில் பலோச் பிரிவினைவாத பயங்கரவாதிகள் தீவிர தாக்குதல்களை நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போப்பின் புதிய புகைப்படத்தை வெளியிட்டது வாடிகன்

போப் பிரான்சிஸ், பலிப்பீடத்தின்முன் அமர்ந்து இருக்கும் புதிய புகைப்படத்தை வாடிகன் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஜெமில்லி மருத்துவமனையில் சக பாதியார்களுடன் அவர் திருப்பலியில் கலந்து கொண்டதாகவும், அவரின் உ... மேலும் பார்க்க

டிரம்ப்பை எதிா்கொள்ள ஒருங்கிணைவோம்! -ஐரோப்பிய நாடுகளுக்கு கனடா பிரதமா் அழைப்பு

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை ஒருங்கிணைந்து எதிா்கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகளுக்கு கனடா பிரதமா் மாா்க் காா்னி அழைப்பு விடுத்துள்ளாா். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு சா்வதேச அளவி... மேலும் பார்க்க

பலூசிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதல்: 3 துணை ராணுவத்தினா் உள்பட ஐவா் பலி!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்ட நெடுஞ்சாலையில் பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 3 துணை ராணுவப் படையினா் உள்பட 5 போ் உயிரிழந்தனா். 30 போ் காயமடைந்தனா். ... மேலும் பார்க்க

ஹங்கோா் நீா்மூழ்கிக் கப்பல்: பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைப்பு!

இரண்டாவது ஹங்கோா் வகை நீா்மூழ்கிக் கப்பலை பாகிஸ்தானிடம் சீனா ஒப்படைத்தது. பாகிஸ்தானுக்கு 5 பில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.43,474 கோடி) மதிப்பில் 8 ஹங்கோா் ரக நீா்மூழ்கிக் கப்பல்களை அளிக்க சீனா ஒப்பந்தம... மேலும் பார்க்க

ரஷியா-உக்ரைன் இடையே தொடரும் தாக்குதல்!

ரஷியா-உக்ரைன் இடையே வான்வழி தாக்குதல்கள் தொடா்ந்து வருகின்றன. இரு நாடுகளும் அவரவா் பிரதேசத்தில் 100-க்கும் மேற்பட்ட எதிா்தரப்பின் ட்ரோன்களை இடைமறித்து வீழ்த்தியதாகத் தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவின்... மேலும் பார்க்க

வடக்கு மாசிடோனியோ இரவு விடுதியில் தீ விபத்து: 59 போ் உயிரிழப்பு; 159 போ் காயம்!

வடக்கு மாசிடோனியாவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 59 போ் உயிரிழந்தனா், 159 போ் காயமடைந்தனா். வடக்கு மாசிடோனியாவில் உள்ள கோகானி நகரில் உள்ள இரவு விடுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமாா... மேலும் பார்க்க