செய்திகள் :

பாகிஸ்தானில் 17 வயது டிக்டாக் பிரபலம் சுட்டுக்கொலை!

post image

பாகிஸ்தானில் டிக்டாக்கில் பிரபலமான 17 வயது சிறுமி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானின், இஸ்லாமாபாத் நகரைச் சேர்ந்தவர் சனா யூசஃப் (17). இவர் இன்ஸ்டாகிராம், டிக்டாக் ஆகிய சமூக ஊடகங்களில் வெளியிட்ட விடியோக்களின் மூலம் அந்நாட்டு மக்களிடையே பிரபலமாக அறியப்பட்டார்.

இந்நிலையில், இஸ்லாமாபாத்தின் ஜி-13 செக்டார் பகுதியிலுள்ள அவரது வீட்டில் நேற்று (ஜூன் 2) திடீரென புகுந்த நபர் ஒருவர், சனாவை இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டதில் அவர் சம்பவயிடத்திலேயே பலியாகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக அவரது குடும்பத்தினர் சனாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் சனா ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர். பின்னர், அவரது தாயார் அளித்த புகாரின் அடிப்படையில் சும்பல் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இதுகுறித்து, சனாவின் தாயார் உள்ளூர் ஊடகங்களில் கூறுகையில், கையில் துப்பாக்கியுடன் தங்களது வீட்டுக்குள் புகுந்த நபர் ஒருவர் தனது மகளைக் கொலை செய்யும் நோக்கத்தோடு அவரை நோக்கி நேரடியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில், கொலையை நேரில் கண்ட சாட்சிகளாக, சனாவின் தாயார் மற்றும் அவரது உறவுக்காரப் பெண் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சனாவின் தாயார் அளித்த அடையாளங்களின் அடிப்படையில், சந்தேகப்படும்படியான நபர் ஒருவரை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சிலர் இந்தக் கொலையானது சனாவின் வீட்டில் திருட முயன்ற 2 திருடர்களால் நடத்தப்பட்டது என்றும்; சிலர் அந்தப் பெண்ணுடன் நண்பராக முயற்சித்த 22 வயதுடைய நபர் ஒருவரே சனாவை கொலை செய்தார் என்றும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, சமூக ஊடகங்களில் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட சனாவை, டிக்டாக்கில் 8 லட்சம் பேரும், இன்ஸ்டாகிராமில் 5 லட்சம் பேரும் பின்தொடர்வது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: பாகிஸ்தான் நிலநடுக்கத்தால் பரபரப்பு! சிறையிலிருந்து 200 கைதிகள் தப்பியோட்டம்!

வறுமைக் கோட்டுக்குக் கீழ் 44% பாகிஸ்தானியர்கள்!

பாகிஸ்தானில் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.சர்வதேச வறுமைக் கோடு குறித்த தகவலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. வாங்கும் சக்தி நிலையை (Purchasing power parity) அடிப்படையாகக் ... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தான் போரை டிரம்ப்தான் நிறுத்தினார்: புதினின் உதவியாளர்

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பேச்சுவார்தையினால் நிறுத்தப்பட்டதாக ரஷிய அதிபர் புதினின் உதவியாளர் யுரி உஷாகோவ் தெரிவித்துள்ளார். ரஷியா - உக்ரைன் மோதல் குறித்து... மேலும் பார்க்க

புதிய கட்சித் தொடங்கும் எலான் மஸ்க்? 81% பேர் ஆதரவு!

அமெரிக்க அரசின் முன்னாள் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவர் எலான் மஸ்க் புதிய கட்சித் தொடங்குவது தொடர்பாகத், தனது எக்ஸ் தளத்தில் வாக்கெடுப்பு நடத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்... மேலும் பார்க்க

டிரம்பை நீக்கிவிட்டு, அதிபர் பதவியில் ஜே.டி. வான்ஸ்: எலான் மஸ்க் வலியுறுத்தல்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் நடந்து வரும் மோதலுக்கு இடையே, டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், டிரம்பை பதவி நீக்கம் செய்து, துணைத் தலைவர் ஜே.டி. வான்ஸை அதிபராக்க வேண்டும் என்று வலியுறுத்த... மேலும் பார்க்க

பார்லே ஜி - இந்தியாவில் ரூ. 5; காஸாவில் ரூ. 2,349! நிவாரண உதவியிலும் காசுபார்க்கும் கொடுமை!

காஸாவில் உணவுப் பொருள்களின் அசல் விலையைவிட 500 மடங்கு அதிகமாக விற்கப்படுகிறது.இஸ்ரேல் - ஹமாஸ் போரையடுத்து, காஸாவினுள் செல்லும் நிவாரண உதவிகளையும் இஸ்ரேல் தடுத்து வருகிறது. இஸ்ரேலின் இந்தப் போக்கை உலக ... மேலும் பார்க்க

பொதுவெளியில் வெடிக்கும் எலான் மஸ்க் - டிரம்ப் கருத்து மோதல்!

அமெரிக்க அரசின் செயல்திறன் மேம்பாட்டுத் துறை (டிஓஜிஇ) தலைவராக இருந்த தொழிலதிபர் எலான் மஸ்க், கருத்து வேறுபாடு காரணமாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்திலிருந்து விலகிய நிலையில், இருவருக்கும... மேலும் பார்க்க