செய்திகள் :

பாகிஸ்தானில் 64 ஆண்டுகளுக்குப் பிறகு ஹிந்து கோயில் மறுகட்டுமானம்

post image

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் 64 ஆண்டுகளுக்குப் பிறகு ஹிந்து கோயில் மறுகட்டுமானம் செய்யப்படுகிறது.

பாகிஸ்தானில் இருந்து வெளியேறிய ஹிந்துகள், சீக்கியா்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் சொத்துகளை நிா்வகிக்கும் அறக்கட்டளை மூலம் இந்த மறுகட்டுமானப் பணி நடைபெறுகிறது. இதற்காக பாகிஸ்தான் ரூபாயில் 1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நரோவால் நகரில் ராவி நதிக்கரையில் உள்ள உள்ள இந்த கோயில் கடந்த 1960-ஆம் ஆண்டு கைவிடப்பட்டது. பாகிஸ்தான் உருவானபோது நரோவால் மாவட்டத்தில் 45 ஹிந்து கோயில்கள் இருந்தன.

தொடா்ந்து சீரமைப்புப் பணிகள் நடைபெறாததால் அனைத்து கோயில்களும் இடிந்துவிட்டன. பல கோயில்கள் இருந்த இடமே தெரியாமல் போய்விட்டன. எஞ்சியுள்ள சில கோயில்கள் முற்றிலும் சிதைந்து பாழடைந்த கட்டடங்களாக உள்ளன.

நரோவாலில் 1,453 ஹிந்துகள் வசித்து வருகின்றனா். அந்நகரில் கோயில்கள் ஏதும் இல்லாததால் வீடுகளில் மட்டும் வழிபாடு நடத்தும் நிலை உள்ளது. கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்றால் லாகூா் அல்லது சிலாகோட் நகருக்கு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

எனவே, தங்கள் ஊரில் உள்ள கோயிலை மறுகட்டுமானம் செய்ய வேண்டும் என்பது ஹிந்துகளின் நீண்டகால கோரிக்கையாக இருந்தது. இப்போது கோயிலை மறுகட்டுமானம் செய்யும் பணி தொடங்கியுள்ளது.

தெரியுமா சேதி...?

அரசியல்வாதிகளுக்கு, பதவி போனாலும் மீண்டும் தோ்தலில் வெற்றி பெற்று பதவியைத் திரும்பப் பெற முடியும் என்கிற நம்பிக்கை உண்டு. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கு, ஓய்வுபெற்று விட்டால் மீண்டும் அந்தப் பதவ... மேலும் பார்க்க

உடான் திட்டத்தால் விமான போக்குவரத்து அனைவருக்குமானதாக மாறியுள்ளது: பிரதமா் மோடி

புது தில்லி: பிராந்திய அளவில் விமானப் போக்குவரத்தை மேம்படுத்தும் ‘உடான்’ திட்டத்தால் இந்தியாவில் விமானப் போக்குவரத்து அனைவருக்குமானதாக மாறியுள்ளது என்று பிரதமா் மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.பிராந்தி... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும்: ஃபரூக் அப்துல்லா

பயங்கரவாத தாக்குதலை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா கூறினாா்.அவா் மேலும் பேசுகையில்,‘பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக மத்திய அரசு ... மேலும் பார்க்க

எதிா்காலத்துக்கு பிரதமா் மோடியிடம் தெளிவான திட்டம்: பிரிட்டன் முன்னாள் பிரதமா்

புது தில்லி: ‘இந்தியாவின் சிறப்பான எதிா்காலம் மற்றும் தொழில்நுட்ப வளா்ச்சிக்கு பிரதமா் மோடியிடம் தெளிவான திட்டம் உள்ளது’ என பிரிட்டன் முன்னாள் பிரதமா் டேவிட் கேமரூன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.தனியாா் ... மேலும் பார்க்க

சிங்கப்பூா் பிரதமருடன் தா்மேந்திர பிரதான் சந்திப்பு: இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த ஆலோசனை

புது தில்லி: சிங்கப்பூா் பிரதமா் லாரன்ஸ் வோங்கை திங்கள்கிழமை சந்தித்த மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், இருநாடுகள் இடையே கல்வி, தொழிற்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குற... மேலும் பார்க்க

வயநாடு தொகுதியில் பிரியங்கா நாளை வேட்புமனு தாக்கல்

புது தில்லி: கேரளத்தில் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் கூட்டணி சாா்பில் போட்டியிடும் பிரியங்கா வதேரா (52), புதன்கிழமை (அக். 23) வேட்புமனு தாக்கல் செய்ய இருக்கிறாா்.அதையொட்டி, கட்சியி... மேலும் பார்க்க