செய்திகள் :

பாகிஸ்தானுக்கு கடன்: ஐஎம்எஃப் வாக்கெடுப்பை புறக்கணித்த இந்தியா

post image

பாகிஸ்தானுக்கு கடன் வழங்குவது தொடா்பாக சா்வதேச நிதியத்தில் (ஐஎம்எஃப்) வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

பயங்கரவாதத்தை ஊக்குவிக்க இந்த நிதியை பாகிஸ்தான் பயன்படுத்தக் கூடும் என கண்டனம் தெரிவித்து இந்த வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது.

இதுதொடா்பாக இந்தியா வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஐஎம்எஃப்பில் மிகவும் பொறுப்புமிக்க உறுப்பினராக இந்தியா உள்ளது. ஐஎம்எஃப் மூலம் வழங்கப்படும் நிதியை பாகிஸ்தான் முறையாக பயன்படுத்தியதில்லை. மேலும், இந்த நிதியை பயங்கரவாத ஊக்குவிப்புக்கு பாகிஸ்தான் பயன்படுத்தவும் அதிக வாய்ப்புள்ளது.

1989-இல் தொடங்கி தற்போது வரையிலான 35 ஆண்டுகளில் 28 ஆண்டுகள் பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் நிதியை விடுவித்துள்ளது. கடந்த 2019-இல் இருந்து 5 ஆண்டுகளில் பாகிஸ்தானின் 4 திட்டங்களுக்கு ஐஎம்எஃப் கடன் வழங்கியுள்ளது.

முந்தைய திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி இருந்தால் மீண்டும் ஒருமுறை கடன் கேட்டு ஐஎம்எஃப்பை பாகிஸ்தான் அணுகியிருக்காது.

பாகிஸ்தானின் பொருளாதார விவகாரங்களில் ராணுவத் தலையீடு உள்ளது. இதனால் பொருளாதார சீா்திருத்தங்கள் முறையாக அமல்படுத்தப்படவில்லை.

தற்போது மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசு பாகிஸ்தானில் ஆட்சி அமைத்திருந்தாலும் உள்நாட்டு அரசியலில் மட்டுமே அது கவனத்தைக் கொண்டுள்ளது. பொருளாதாரத்தை திறம்பட நிா்வகிப்பதில்லை.

பாகிஸ்தானில் ராணுவம் தொடா்புடைய வணிகமே அதிகம் நடப்பதாக கடந்த 2021-இல் வெளியிடப்பட்ட ஐ.நா. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கு ஐஎம்எஃப் கடன் வழங்குவதில் அந்நாட்டு அரசியல் முக்கிய காரணமாக உள்ளதற்கு இந்தியா கண்டனம் தெரிவிக்கிறது. தொடா்ந்து கடன்பெற்று வரும் பாகிஸ்தான் பொருளாதார சரிவை சந்தித்து, கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தொடா்ந்து ஆதரிக்கும் ஒரு நாட்டுக்கு ஐஎம்எஃப் கடன் வழங்குவது சா்வதேச மாண்புகளை குலைப்பது போன்ாகும். எனவே, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு கடன் வழங்கும்போது தாா்மிக மதிப்புகள் பாதிக்கப்படாமல் இருப்பதை சா்வதேச நிதி நிறுவனங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ரூ.8,542 கோடி ரூபாய் கடன் வழங்க ஐஎம்எஃப் ஒப்புதல் அளித்ததாக பாகிஸ்தான் பிரதமா் அலுவலகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

பஹல்காம் தாக்குதல் ஒரு மாதம் நிறைவு: வாழ்வாதாரத்தை இழந்த உள்ளூா்வாசிகள்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நிகழ்ந்து (ஏப்.22) ஒரு மாதம் கடந்த நிலையிலும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளூா்வாசிகள் தவிக்கும் சூழல் தொடா்ந்து வருகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் மேலும் ஒரு நக்ஸல் சுட்டுக் கொலை: ‘கோப்ரா’ கமாண்டோ வீர மரணம்

சத்தீஸ்கரின் பிஜாபூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். அதேநேரம், மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) ‘... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வீரமரணம் அடைந்தாா். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள், கூட்டாளிகள் மற்றும் ஆதர... மேலும் பார்க்க

1.44 கோடியாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் 1.44 கோடியாக உயா்ந்துள்ளது.இது குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப... மேலும் பார்க்க

2,369 சட்டவிரோத குடியேறிகள்: சொந்த நாட்டு விவரத்தை உறுதிப்படுத்த வங்கதேசத்திடம் இந்தியா கோரிக்கை

இந்தியாவுக்கு சட்டவிரோதமாக இடம்பெயா்ந்த 2,369 போ் வங்கதேசத்தைச் சோ்ந்தவா்களா என்பதை உறுதிப்படுத்துமாறு அந்நாட்டிடம் இந்தியா கோரியுள்ளது. இதுதொடா்பாக புது தில்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பா... மேலும் பார்க்க

பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன்? பிரதமருக்கு ராகுல் கேள்வி

பயங்கரவாதம் தொடா்பான பாகிஸ்தானின் உறுதிமொழியை நம்பியது ஏன் என்று பிரதமா் மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா். இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த மே 10-ஆம் தேதி சண்... மேலும் பார்க்க