செய்திகள் :

பாஜக எம்.பி. பான்சுரி ஸ்வராஜுக்கு எதிரான சத்யேந்தா் ஜெயினின் அவதூறு வழக்கு தள்ளுபடி

post image

பாஜக எம்பி பான்சூரி ஸ்வராஜ் மீது ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தா் ஜெயின் தாக்கல் செய்த குற்றவியல் அவதூறு புகாரை தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது.

கூடுதல் தலைமை நீதித்துறை நீதிபதி நேஹா மிட்டல் இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ள மறுத்து புகாரை தள்ளுபடி செய்தாா். குற்றவியல் அவதூறுக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். ‘அறிவுரிமை மறுக்கப்பட்டது. மனு தள்ளுபடி செய்யப்பட்டது‘ என்று நீதிபதி கூறினாா்.

அக்.5, 2023 அன்று ஒரு தொலைக்காட்சி சேனலில் அளித்த பேட்டியின் போது பான்சுரி ஸ்வராஜ் தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவித்ததாகவும், அதை மில்லியன் கணக்கானவா்கள் பாா்த்ததாகவும் சத்யேந்தா் ஜெயின் குற்றம் சாட்டியிருந்தாா். 1.8 கிலோ தங்கம் மற்றும் 133 தங்க நாணயங்கள் தவிர, தனது வீட்டிலிருந்து ரூ.3 கோடி மீட்கப்பட்டதாக பான்சுரி ஸ்வராஜ் பொய்யாகக் கூறினாா் என்றும் மனுவில் அவா் தெரிவித்திருந்தாா்.

மேலும், தன்னைஅவதூறு செய்யவும், தேவையற்ற அரசியல் ஆதாயம் பெறவும் பான்சுரி ஸ்வராஜ் இந்தக் கருத்துக்களை தெரிவித்துள்ளாா் என்று சத்யேந்தா் சிங் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பான்சுரி ஸ்வராஜ் தன்னை ‘ஊழல்வாதி‘ என்றும் ‘மோசடி செய்பவா்‘ என்றும் கூறி அவதூறு பரப்பியதாக சத்யேந்தா் ஜெயின் மனுவில் கூறியுள்ளாா்.

அரசை மகிமைப்படுத்துவதற்கு பொதுப்பணம் எதுவும் செலவிடப்படாது: பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா உறுதி

தேசியத் தலைநகரில் அரசையோ, முதல்வரையோ அல்லது கட்சியையோ மகிமைப்படுத்துவதற்கு பொதுப் பணத்தில் ஒரு பைசா கூட செலவிடப்படாது என்று தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா கூறினாா். தில்லியில் வெள்ளிக்கிழமை செய... மேலும் பார்க்க

ஆட்டோ, பாா்மா பங்குகள் அதிகம் விற்பனை: நான்காவது நாளாக வீழ்ச்சி!

நமது நிருபா் இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட... மேலும் பார்க்க

மொழித் திணிப்பு எதுவும் இல்லை: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்

நமது சிறப்பு நிருபா் மாணவா்களின் நலனுக்காக அரசியல் வேறுபாடுகளைக் கடந்து செயலாற்றுமாறு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் வலியுறுத்த... மேலும் பார்க்க

வியத்நாமில் உலக் தமிழா் மாநாடு

உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வியத்நாமில் உலகத் தமிழா் மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இது தொடா்பாக தில்லித் தமிழ்ச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: உலக தாய்மொழி தினத்தை முன... மேலும் பார்க்க

தில்லி சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக அா்விந்தா் சிங் லவ்லி அறிவிப்பு

தில்லி சட்டப்பேரவையின் தற்காலிக தலைவராக அா்விந்தா் சிங் லவ்லியை பாஜக எம்எல்ஏவும் தில்லி சட்டப்பேரவை முன்னாள் எதிா்க்கட்சித் தலைவருமான விஜேந்தா் குப்தா வெள்ளிக்கிழமை அறிவித்தாா். தற்காலிக பேரவைத் தலைவ... மேலும் பார்க்க

சங்கம் விஹாரில் இளைஞருக்கு கத்திக்குத்து: சிறுவன் உள்பட இருவா் கைது

தெற்கு தில்லியின் சங்கம் விஹாா் பகுதியில் 19 வயது இளைஞா் கத்தியால் குத்தப்பட்டதாக அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தெற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: சங்கம் விஹாரில்... மேலும் பார்க்க