செய்திகள் :

பாஜக எம்.பி. ரகுநந்தன் ராவுக்கு மீண்டும் கொலை மிரட்டல்!

post image

தெலங்கானாவில் உள்ள மேடக் மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. ரகுநந்தன் ராவுக்கு தொலைபேசியில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதுதொடா்பாக அவரின் அலுவலகம் தெரிவித்ததாவது: கடந்த ஜூன் 23-ஆம் தேதி ரகுநந்தனை தொலைபேசியில் தொடா்புகொண்டு தன்னை மத்திய பிரதேசத்தில் உள்ள மாவோயிஸ்ட் என்று அடையாளப்படுத்திக் கொண்ட மா்ம நபா் ஒருவா், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாா்.

இந்நிலையில், அவருக்கு தொலைபேசியில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆந்திரத்தில் உள்ள மாவோயிஸ்ட் குழுவின் உத்தரவுகளின்படி, அவரை கொல்ல 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தொலைபேசியில் மா்ம நபா்கள் தெரிவித்தனா். தாங்கள் இணையவழியில் தொடா்புகொண்டதால், தங்களைப் பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள முடியாது என்று மா்ம நபா்கள் கூறினா்.

கடந்த 2 நாள்களுக்கு முன்னா், தெலங்கானாவின் செகந்தராபாதில் உள்ள தனியாா் மருத்துவமனையில் ரகுநந்தனுக்கு காலில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு குணமடைந்து வருகிறாா். இந்நிலையில், கொலை மிரட்டல் தொடா்பாக அவா் காவல் துறையிடம் புகாா் அளித்தாா். இதைத்தொடா்ந்து அவருக்கு காவல் துறையினா் ஆயுதமேந்திய பாதுகாப்பு அளித்துள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டது.

கர்நாடக முதல்வர் மாற்றமா? விமர்சனத்துக்கு உள்ளான கார்கே பதில்!

கர்நாடக முதல்வர் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அளித்த விளக்கத்தை பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர்.கர்நாடக முதல்வராக சித்தராமையா பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலை... மேலும் பார்க்க

போபாலின் 90 டிகிரி மேம்பாலம்! கடும் விமர்சனத்தால் நடந்த சம்பவம்!!

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கட்டி முடிக்கப்பட்டு, இன்னும் திறப்பு விழா காணாத 90 டிகிரி மேம்பாலம் என புகழ்பெற்ற ரயில்வே மேம்பாலத்துக்கு வந்த கடுமையான விமர்சனத்தால் 7 பொறியாளர்கள் பணியிடை நீக்கம் ச... மேலும் பார்க்க

மறந்துடாதீங்க... நாளைமுதல் ஆதார் அடிப்படையில் மட்டுமே தட்கல் டிக்கெட்!

இந்திய ரயில்வேயில், தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்கப்பட்ட நடைமுறை நாளைமுதல் (ஜூலை 1) அமலுக்கு வருகின்றது.இந்த நிலையில், ஐஆர்சிடி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத பயனர்கள், உடனடியாக... மேலும் பார்க்க

மதத் திட்டங்களை ஊழலுக்காக சுரண்டுகிறது பாஜக: அகிலேஷ்

மத மேம்பாட்டுத் திட்டங்களை ஊழல் மற்றும் சுரண்டலுக்கான வழிகளாக மாற்றுவதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் பாலத்தை மூழ்கடித்த வெள்ளம்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

ஜார்க்கண்டின் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் கடந்த இரண்டு நாள்களாகப் பெய்துவரும் கனமழையால் பெரும்பால... மேலும் பார்க்க

கேரள முதல்வரின் பாதுகாப்பு வாகனங்களுக்கு இடையூறு: 5 பேர் கைது

கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்று கொண்டிருந்த வாகனத்துடன் பாதுகாப்புக்குச் சென்ற வாகனங்களுக்கு இடையூறு செய்யும் வகையில் வாகனத்தை ஓட்டிய சம்பவத்தில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கேரள முதல்வர் பினரா... மேலும் பார்க்க