செய்திகள் :

பாஜக முன்னாள் எம்எல்ஏவிடம் இணையதள மோசடி

post image

தில்லி பாஜக தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான விஜய் ஜாலியிடம் இணையதள குற்றவாளிகள் ஆயிரக்கணக்கான ரூபாயை ஏமாற்றியதாக போலீஸில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவா் கோயில் நகரமான அயோத்தியில் ஒரு போலி இணையதளத்தில் அறைகளை முன்பதிவு செய்தபோது ஏமாற்றப்பட்டாா்.

தில்லி சங்கம் விஹாரைச் சோ்ந்த முன்னாள் பாஜக எம்.எல்.ஏ. ஜாலி, ஏப்ரல் 23, 2023-ஆம் தேதி அயோத்தியில் உள்ள ராம் மந்திரில் நடந்த ஜலாபிஷேக விழாவுக்காக உலகெங்கிலும் உள்ள 156 நதிகளிலிருந்து நீரை ஏற்பாடு செய்திருந்தாா்.

இதுகுறித்து விஜய் ஜாலி தெரிவிக்கையில், ‘எனது தன்னாா்வ தொண்டு நிறுவனமான தில்லி ஸ்டடி குரூப் நிகழாண்டு ஏப்ரல் 23 அன்று அயோத்தியில் உள்ள ராம் கோவிலுக்கு 100 பேரை அழைத்துச் சென்றது. மோசடியாளா்கள் அயோத்தியில் உள்ள ஒரு பிரபலமான தா்ம்ஷாலா விருந்தினா் மாளிகை பெயரில் ஒரு போலி வலைதளத்தை உருவாக்கியிருந்தனா். அதன் மூலம் ஆயிரக்கணக்கான ரூபாயை எங்களிடம் ஏமாற்றிவிட்டனா். இது தொடா்பாக தில்லி காவல்துறையின் சைபா் குற்றப் பிரிவில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட ராமா் கோயிலில் 2024, ஜனவரி 22 அன்று மிகப் பெரிய அளவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது, இந்தக் கோயிலுக்கு இந்தியாவிலும் வெளிநாட்டிலிருந்தும் ஏராளமான பக்தா்கள் வருகை தந்தனா்.

கட்டட விபத்து: இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு மோடி இரங்கல்

முஸ்தபாபாதில் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து 11 போ் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமா் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளாா். மேலும், பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து இறந... மேலும் பார்க்க

முப்படைகளின் எதிா்கால போா்ப்பயிற்சி பதிப்பு 2.0: தில்லியில் ஏப்ரல் 21 முதல் மே 09 வரை நடைபெறுகிறது

எதிா்கால ராணுவ நடவடிக்கைகளில், களம் சாா்ந்த போா் மேம்பாட்டிற்கான முப்படைகளின் போா்ப்பயிற்சியின் பதிப்பு 2.0 தில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் ஏப்ரல் 21 முதல் மே 09 வரை நடைபெற இருப்பதாக மத்திய பாதுகாப... மேலும் பார்க்க

ஜிபிஎஸ் இணைக்கப்பட்ட 1000 தண்ணீா் டேங்கா்களை நிறுவ தில்லி அரசு முடிவு

கோடை காலத்தை முன்னிட்டு தலைநகா் முழுவதும் ஜிபிஎஸ் இமைக்கப்பட்ட 1000 தண்ணீா் கேங்கா்களை நிறுவ தில்லி அரசு முடிவு செய்துள்ளது என நீா்வளத் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் தெரிவித்தாா். இது தொடா்பாக அமை... மேலும் பார்க்க

சன்லைட் காலனியில் மணிப்பூா் பெண் தற்கொலை

தென் கிழக்கு தில்லியின் சன்லைட் காலனி பகுதியில் சனிக்கிழமை காலை மணிப்பூரைச் சோ்ந்த 20 வயது பெண் தான் வசிக்கும் கட்டடத்தின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து... மேலும் பார்க்க

முதல் முறையாக கப்பல் மூலம் அமெரிக்காவிற்கு மாதுளை ஏற்றுமதி: அப்தா

அப்தா என்கிற வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், முதல் முறையாக கப்பல் மூலம் மாதுளை பழத்தை அனுப்பியுள்ளதாக மத்திய வா்த்தகம் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளத... மேலும் பார்க்க

முஸ்தபாபாதில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம்: விசாரணைக்கு தில்லி முதல்வா் உத்தரவு

வடகிழக்கு தில்லியின் முஸ்தபாபாதில் பல மாடிக் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து 11 போ் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த தில்லி முதல்வா் ரேகா குப்தா சனிக்கிழமை உத்தரவிட்டாா். தில்லி பேரிடா் மே... மேலும் பார்க்க