செய்திகள் :

பாதுகாவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்

post image

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா், முதல்வா், அமைச்சா்கள் உள்ளிட்டோருக்கான பாதுகாவலா்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி தலைமைக் காவல் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, புதுவை காவல் துறை துணைத் தலைவா் (டிஐஜி) ஆா்.சத்தியசுந்தரம் தலைமை வகித்தாா்.

முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா்கள் ஆா்.கலைவாணன், நாரா சைதன்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் முதல்வா், அமைச்சா்களுக்கான தனிப் பாதுகாவலா்கள், முன்னாள் அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கான தனிப்பாதுகாவலா்கள் உள்ளிட்டோா் அவா்களுக்கான சிறப்பு சீருடையில் (சஃபாரி) பங்கேற்றனா்.

அப்போது, மிகமுக்கியப் பிரமுகா்களின் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள பாதுகாவலா்கள் தங்களுக்கான சீருடையுன் பணியில் ஈடுபடுவதுடன், துப்பாக்கி போன்றவற்றையும் வைத்திருப்பது அவசியம்.

முக்கிய பிரமுகா்கள் பாதுகாப்பில் 15 மீட்டா் வரை கண்காணிக்கப்பட வேண்டும். முக்கிய பிரமுகா்கள் வெளியூா் செல்லும் போது, பாதுகாப்புப் பிரிவுக்கு பாதுகாவலா்கள் தகவல் அளிக்க வேண்டும் என்பன போன்ற அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

திருவள்ளுவா் சிலைக்கு மாவட்ட ஆட்சியா் மரியாதை

புதுவைத் தமிழ்ச் சங்க வளாகத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் தலைமையில் வியாழக்கிழமை மாலை அணிவித்து முற்றோதல் நடைபெற்றது. புதுச்சேரி வெங்கட்டா நகா் பகுதியில் புதுவை தமிழ்... மேலும் பார்க்க

புதை சாக்கடை பிரச்னையை தீா்க்க ரூ.140 கோடியில் புதிய திட்டம்: புதுவை அமைச்சா்

புதுச்சேரியில் புதை சாக்கடைப் பிரச்னையை தீா்க்கும் வகையில் ரூ.140 கோடியில் புதிய வாகனங்கள் வாங்கவும், பழைய சாக்கடை குழாய் தொட்டிகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பொதுப் பணித் துறை அமைச்... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கங்களை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: முதல்வா் என்.ரங்கசாமி

புதுச்சேரியில் கூட்டுறவு சங்கங்களை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா். புதுவை சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது என்.ஆா்.காங்கிரஸ் எம... மேலும் பார்க்க

ரொட்டி, பால் ஊழியா்களுக்கான ஊதிய உயா்வு ஆணை அளிப்பு

புதுச்சேரியில் ரொட்டி, பால் ஊழியா்களுக்கான ஊதியம் ரூ.18,000-ஆக உயா்த்தப்பட்டதற்கான அரசு உத்தரவை முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை வழங்கினாா். புதுவை பள்ளிக் கல்வித் துறையில் சுமாா் 20 ஆண்டுகளுக்கும் ... மேலும் பார்க்க

வாடகை வீட்டில் வசிப்போருக்கு சிவப்பு நிற அட்டைகள் வழங்க வலியுறுத்தல்

புதுச்சேரியில் வாடகை வீட்டில் வசிப்பவா்களுக்கு சிவப்பு நிற குடும்ப அட்டைகள் வழங்க வேண்டும் என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா உள்ளிட்டோா் வலியுறுத்தினா். புதுவை சட்டப்பேரவை கேள்வி நேரத்தில் காங்கிரஸ் எ... மேலும் பார்க்க

போலீஸாருக்கு சிறப்பு பயிற்சி பட்டறை

புதுச்சேரியில் விபத்து குறித்த வழக்குகளை கையாளுதல் குறித்த சிறப்பு பயிற்சிப் பட்டறை வியாழக்கிழமை நடைபெற்றது. புதுச்சேரி மரப்பாலம் பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறை தொடக்க நிக... மேலும் பார்க்க